Latest Updates
-
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
இந்தியாவிலேயே மிகவும் அழுக்கான ரயில் இதுதான்... இது எந்த ஊரில் ஓடுகிறது தெரியுமா?
இந்தியாவில் கிட்டதட்ட 13,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆயிரக்கணக்கான ரயில்கள் ஏராளமான வழித்தடங்களில் ஓடுகின்றன. சில ரயில்கள் வேகமாக இயக்கப்படுகின்றன மற்றும் சில ரயில்கள் மிதமான வேகத்தில் இயக்கப்படுகின்றன, சில நீண்ட தூர ரயில்கள் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை வழங்குகின்றன.
இந்தியாவின் சில ரயில்கள் நாள் கணக்கில் நீண்ட தூரம் பயணிக்கின்றன, சில ரயில்கள் ஒரு மணி நேரத்திற்குள்ளேயே கூட தங்கள் பயணத்தை முடிக்கின்றன. இப்படி இந்தியாவில் பல தனித்துவமான ரயில்கள் உள்ளன. இந்த ரயில்களை பராமரிக்கவே இந்திய ரயில்வே ஆண்டுதோறும் பல நூறு கோடிகளை செலவிடுகிறது.

இந்திய ரயில்வேயின் கடினமான முயற்சிகளுக்குப் பிறகும் சில ரயில்கள் மிகவும் அசுத்தமானவையாக உள்ளன. பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பிறகும் நீங்கள் பயணிக்கும் ரயிலில் பயணம் அழுக்கு மற்றும் துர்நாற்றம்மாக இருந்தால் உங்கள் பயணம் எவ்வளவு மோசமானதாக இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். இதுபோன்ற சூழலில் இந்திய ரயில்வேயை திட்டாத ஆட்களே யாரும் இருக்க மாட்டார்கள். சமீபத்தில், ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது, அதில் ஒருவர் ரயில்வே நிர்வாகத்தை அம்பலப்படுத்தினார். அவர் பயணித்த ரயிலில் இருந்த அழுக்கைக் கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தியாவின் மிகவும் அழுக்கான ரயில்
இந்தியாவின் மிகவும் அழுக்கான ரயில் எதுவென்று இந்திய ரயில்வேயிடம் எந்த தரவுகளும் இல்லை, ஆனால் ரயிலில் உள்ள அசுத்தம் பற்றிய புகார்களின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள மிகவும் அழுக்கான ரயில்களின் பட்டியலைத் தயாரிக்க முடியும். ரயிலில் உள்ள அசுத்தம் பற்றிய புகார்களுக்கு ரயில்வே ஒரு ஹெல்ப்லைன் எண்ணை வழங்கியுள்ளது.
அந்த எண்களை அழைப்பதன் மூலம் உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். சமீபத்தில், ரயில்களில் உள்ள அழுக்கு மற்றும் கழிப்பறைகளில் உள்ள தண்ணீர் தொடர்பாக ரயில்வேயில் 100,280 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக CAG அறிக்கையில் தெரியவந்துள்ளது.
4000 கி.மீ பயணிக்கும் அழுக்கு ரயில்
உஜ்வால் சிங் என்ற நபர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், ரயிலுக்குள் இருக்கும் அழுக்கு குவியலைக் காட்டினார். திப்ருகார்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் மக்கள் நரகத்தைப் போன்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
4000 கி.மீ தூரத்தை கடக்கும் நாட்டின் மிக நீண்ட தூர ரயிலுக்கு மக்கள் மிகவும் அழுக்கான ரயில் என்ற பட்டத்தை வழங்கியுள்ளனர். இந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து திப்ருகார் வரை பயணிக்க 74 முதல் 75 மணி நேரம் ஆகும். கழிப்பறைகள் முதல் கழுவும் தொட்டிகள் வரை, 9 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்த ரயில் துர்நாற்றம் மற்றும் அழுக்குகளால் நிரம்பியிருந்தது.
இந்தியாவின் அசுத்தமான ரயில் இதுதான்
கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது இந்திய ரயில்வே இப்போது பல வசதிகளை வழங்கினாலும், இன்றும் கூட, இந்திய ரயில்வே சுகாதாரத்தில் பின்தங்கியே உள்ளது. Madad செயலியின் உதவியுடன் மக்கள் ரயிலின் அசுத்தம் குறித்து புகார் கூறுகின்றனர்.
இந்த புகார்களின் அடிப்படையில், சஹர்சா-அமிர்தசரஸுக்குச் செல்லும் கரிப் ரத் ரயில் இந்தியாவின் மிகவும் அழுக்கான ரயிலில் முன்னணியில் உள்ளது. பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸிலிருந்து பீகாரின் சஹர்சா மாவட்டத்திற்கு இந்த ரயில் பயணிக்கிறது. இதன் டிக்கெட் கட்டணமும் அவ்வளவு குறைவாக இல்லை, ஆனால் வசதிக்காக, மக்கள் அழுக்குப் பெட்டிகளில் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.



Click it and Unblock the Notifications

