Latest Updates
-
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்...
இந்தியாவின் இந்த மாநிலத்தில் ஒரு நாய் கூட இல்லை... இங்க நீங்க போகணும்னா அரசாங்கத்தின் அனுமதி வேணும்...!
பல நூற்றாண்டுகளாக நாய்கள் மனிதர்களின் உற்ற நண்பர்களாக இருந்து வருகிறது. வீட்டை பாதுகாக்கும் உயிரினமாக இருப்பது முதல் செல்லப்பிராணியாக வீட்டில் விளையாடுவது வரை நாய்கள் மனிதர்களின் வாழ்வில் பல பாத்திரங்களை வகிக்கிறது. பூமியில் நீங்கள் எங்கு சென்றாலும் நாய்களை பார்க்கலாம், வெகுசில இடங்களைத் தவிர. அதில் ஒரு முக்கிய இடம் இந்தியாவிலேயே உள்ளது.
இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று இலட்சத்தீவு. இலட்சத்தீவு அதன் அற்புதமான பவளப்பாறைகள், தூய்மையான வெள்ளை மணல் கடற்கரைகள் மற்றும் அற்புதமான நிலப்பரப்பு ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.

அதன் இயற்கை அழகு காரணமாக, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் வசிப்பவர்கள் கூட தங்கள் விடுமுறையைக் கழிக்க இந்த பகுதிக்கு வருகைத் தருகின்றனர். மனிதர்களின் உற்ற நண்பராக கருதப்படும் நாய்களுக்கு கண்டிப்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பரந்து விரிந்த தீவுகளில் எங்கும் நாய்களை நம்மால் பார்க்க முடியாது.
மிகவும் விசுவாசமான உயிரினங்களில் ஒன்றாக அறியப்படும் நாய்கள், பெரும்பாலான மனிதர்களால் விரும்பப்படும் உயிரினமாக உள்ளது. இருப்பினும், லட்சத்தீவுகள் நாய்கள் இல்லாத இடமாகவே உள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இது ரேபிஸ் இல்லாத பகுதியாகும். மேலும், தீவுகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தங்களுடன் நாய்களை அழைத்து வர எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கப்படுவதில்லை.
இலட்சத்தீவுக்கு செல்லப்பிராணிகள் மற்றும் தெருநாய்கள் இரண்டையும் கொண்டு வருவதை அரசாங்கம் தடை செய்துள்ளது. அதேசமயம் இந்த தீவுகள் அதிக எண்ணிக்கையிலான பூனைகள் மற்றும் எலிகளின் வசிப்பிடமாக உள்ளன, அவை பொதுவாக தெருக்களிலும் ரிசார்ட்டுகளிலும் காணப்படுகின்றன.
இலட்சத்தீவில் நாய்கள் மட்டுமல்ல, பாம்புகளும் முற்றிலும் இல்லை, இது உலகின் பாம்புகளே இல்லாத இடங்களில் ஒன்றாக உள்ளது. இலட்சத்தீவின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் கணக்கெடுப்புகளின் படி, இந்தியாவில் பாம்புகள் காணப்படாத ஒரே இடம் இது மட்டும்தான்.
மறுபுறம், லட்சத்தீவின் அண்டை மாநிலமான கேரளா, இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பாம்பு இனங்களைக் கொண்டுள்ளது, இதில் அதிக எண்ணிக்கையிலான விஷமுள்ள பாம்புகளும் அடங்கும். அறிக்கைகளின் படி, லட்சத்தீவில் ஏராளமான மீன் வகைகள் உள்ளன. தீவுகளைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் பல்வேறு உயிரினங்களால் நிறைந்துள்ளன, 600 க்கும் மேற்பட்ட வெவ்வேறு உயிரினங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. பட்டாம்பூச்சி மீன் லட்சத்தீவின் மாநில விலங்காக அந்தஸ்தைப் பெற்றுள்ளது, மேலும் குறைந்தது ஆறு தனித்துவமான பட்டாம்பூச்சி மீன்களை இங்கே காணலாம். இந்த கவர்ச்சிகரமான தீவு பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை மேற்கொண்டு பார்க்கலாம்.
- லட்சத்தீவு உலகின் மிக அற்புதமான பவளப்பாறைகளைக் கொண்டுள்ள இடமாகும். இந்த தீவுக்கூட்டம் வண்ணமயமான பவளப்பாறைகள், கவர்ச்சியான மீன்கள் மற்றும் கடல் ஆமைகள் உட்பட பல்வேறு வகையான கடல்வாழ் உயிரினங்களுக்கு தாயகமாகும். இங்குள்ள பவளப்பாறைகள் ஸ்நோர்கெலர்கள் மற்றும் ஸ்கூபா டைவர்ஸுக்கு சொர்க்கமாகும்.
- தனித்துவமான இயற்கை அழகு இருந்தபோதிலும், லட்சத்தீவு இந்தியாவின் மிகச்சிறிய யூனியன் பிரதேசம் என்ற பட்டத்தை பெற்றுள்ளது. அதன் தீவுகளில் வெறும் 32 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைக் கொண்ட இது, அரபிக் கடலின் பரந்த பரப்பளவில் மறைந்திருக்கும் ஒரு சொர்க்கமாகும். அதன் சிறிய அளவு, அன்றாட வாழ்க்கையின் பரபரப்பில் இருந்து அமைதியான ஓய்வு பெற விரும்பும் பயணிகளை ஈர்க்கிறது.
- இலட்சத்தீவின் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்க, லட்சத்தீவு சுற்றுலா பயணிகளுக்கு கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. பார்வையாளர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது, மேலும் தீவின் சில பகுதிகள் பாதுக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தீவுகள் அவற்றின் அழகிய நிலையைப் பராமரிப்பதை உறுதிசெய்கிறது.



Click it and Unblock the Notifications












