Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சொந்த கரன்சி, சொந்த ஏர்போர்ட் கூட இல்லாத உலகின் பணக்கார நாடு - இந்த நாட்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் இருக்காம் -
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த இந்திய அரசரிடம் அவருக்கென ரயில் நிலையமும், ஆடம்பர ரயிலும் இருந்ததாம்... அந்த ராஜா யார் தெரியுமா?
இந்தியாவின் வரலாறும் அதில் வாழ்ந்த மனிதர்களும் நாம் நினைப்பதை விட மிகவும் சுவாரஸ்யமானது. இந்தியாவில் மன்னர்களுக்கு பிறகு சமூகத்தில் அதிக செல்வாக்கு செலுத்தியவர்களில் நவாப்கள் மிகவும் முக்கியமானவர்கள்.
இந்தியாவின் பணக்கார நவாப்களைப் பற்றிய பல சுவாரஸ்யமான கதைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம், அவர்கள் ஒரு வளமான கலாச்சார வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். ஹைதராபாத் நவாப், மிர் உஸ்மான் அலி கான், பட்டோடி நவாப், நவாப் இப்திகார் அலி கான் நவாப் மன்சூர் அலி கான் பட்டோடி போன்றவர்கள் இந்திய நவாப்களின் கதைகள் மிகவும் பிரபலமானவை.
இந்தியாவின் பணக்கார நவாப் முதல் ரோல்ஸ் ராய்ஸ் காரில் தெருவை சுத்தப்படுத்திய நவாப் வரை பல நவாப்களை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், இருப்பினும், தனக்கென சொந்த தனியார் ரயில் நிலையத்தையும் தனது அரண்மனை வரை ஒரு ரயிலையும் வைத்திருந்த இந்திய நவாப்பின் கதை உங்களுக்குத் தெரியுமா? அவர்தான் இந்தியாவின் பணக்கார நவாப்களில் ஒருவரான நவாப் ஹமீத் அலி கான். அவரைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை இந்த பதிவில் தெரிந்து.கொள்ளலாம்.
நவாப் ஹமீத் அலி கான் யார்?
20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்த போது, ராம்பூர் சமஸ்தானம் செழிப்பானதாகவும், அமைதியான மாகாணமாகவும் இருந்தது. மாநிலத்தின் நவாபாக இருந்த நவாப் ஹமீத் அலி கான், ராம்பூர் அரச குடும்பத்தினரால் மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு தனியார் ரயில் நிலையம் உட்பட ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவித்தார்.

நவாப் ஹமீத் அலி கானின் பிரைவேட் ரயில் நிலையம்
நவாப் ஹமீத் அலி கான் மிகவும் சாதாரண மக்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவித்தார், பெரும்பாலான இந்தியர்களால் இரண்டாம் வகுப்பு டிக்கெட்டை வாங்க முடியாத சூழ்நிலையில், அவர் இரண்டு ஆடம்பரமான ரயில் பெட்டிகளை நிரந்தரமாக நிறுத்தி வைத்திருந்தார், அவை நவாபின் தேவைக்கு ஏற்ப எப்போது வேண்டுமென்றாலும் கிளம்ப தயார் நிலையில் இருந்தது.
சாண்டிலியர்கள், ஆடம்பர பர்னிச்சர்கள், பாரசீக கம்பளங்கள் மற்றும் இந்திய சைவ மற்றும் ஆங்கில அசைவ உணவு வகைகளுக்கான தனித்தனி சமையலறைகள் கூட பொருத்தப்பட்ட நவாப் ஹமீத் அலி கானின் ரயில் பெட்டிகள் வெறும் ரயில் பெட்டிகளாக மட்டுமல்லாமல், அவை நகரும் அரண்மனைகளாகவும் இருந்தன.
நவாப் ஹமீத் அலி கானின் ரயில் பெட்டிகளுக்கு என்ன ஆனது?
நவாப் ஹமீத் அலி கான் 1930 ஆம் ஆண்டு இறந்தார். அவருக்கு பிறகு அவருடைய மகன் நவாப் ரஜா அலி கான் அரியணையில் அமர்ந்தார். 1954 ஆம் ஆண்டு பிரிவினைக்குப் பிறகு இந்திய அரசாங்கத்திற்கு இரண்டு அரச ரயில் பெட்டிகளை நவாப் ரஜா அலி கான் பரிசாக வழங்கினார். ஆச்சரியப்படும் விதமாக, நவாப் இறந்த ஆண்டான 1966 வரை இந்த ரயில் பெட்டிகள் பயன்பாட்டில் இருந்தன. 1966 இல் அவர் இறந்ததைத் தொடர்ந்து, நவாப் ஹமீத் அலி கானின் தனியார் ரயில் நிலையத்தில் செயல்பாடுகள் குறைந்தது, அதே காலகட்டத்தில், முன்னாள் சமஸ்தானங்களுக்கு நிதி உதவி செய்து வந்த சொத்துக்களை இந்திய அரசு ரத்து செய்ததும் இந்தியாவின் ஒரே தனியார் ரயில் நிலையம் மூடுவதற்கு வழிவகுத்தது.



Click it and Unblock the Notifications
