Latest Updates
-
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்..
இந்த இந்திய அரசரிடம் அவருக்கென ரயில் நிலையமும், ஆடம்பர ரயிலும் இருந்ததாம்... அந்த ராஜா யார் தெரியுமா?
இந்தியாவின் வரலாறும் அதில் வாழ்ந்த மனிதர்களும் நாம் நினைப்பதை விட மிகவும் சுவாரஸ்யமானது. இந்தியாவில் மன்னர்களுக்கு பிறகு சமூகத்தில் அதிக செல்வாக்கு செலுத்தியவர்களில் நவாப்கள் மிகவும் முக்கியமானவர்கள்.
இந்தியாவின் பணக்கார நவாப்களைப் பற்றிய பல சுவாரஸ்யமான கதைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம், அவர்கள் ஒரு வளமான கலாச்சார வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். ஹைதராபாத் நவாப், மிர் உஸ்மான் அலி கான், பட்டோடி நவாப், நவாப் இப்திகார் அலி கான் நவாப் மன்சூர் அலி கான் பட்டோடி போன்றவர்கள் இந்திய நவாப்களின் கதைகள் மிகவும் பிரபலமானவை.
இந்தியாவின் பணக்கார நவாப் முதல் ரோல்ஸ் ராய்ஸ் காரில் தெருவை சுத்தப்படுத்திய நவாப் வரை பல நவாப்களை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், இருப்பினும், தனக்கென சொந்த தனியார் ரயில் நிலையத்தையும் தனது அரண்மனை வரை ஒரு ரயிலையும் வைத்திருந்த இந்திய நவாப்பின் கதை உங்களுக்குத் தெரியுமா? அவர்தான் இந்தியாவின் பணக்கார நவாப்களில் ஒருவரான நவாப் ஹமீத் அலி கான். அவரைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை இந்த பதிவில் தெரிந்து.கொள்ளலாம்.
நவாப் ஹமீத் அலி கான் யார்?
20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்த போது, ராம்பூர் சமஸ்தானம் செழிப்பானதாகவும், அமைதியான மாகாணமாகவும் இருந்தது. மாநிலத்தின் நவாபாக இருந்த நவாப் ஹமீத் அலி கான், ராம்பூர் அரச குடும்பத்தினரால் மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு தனியார் ரயில் நிலையம் உட்பட ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவித்தார்.

நவாப் ஹமீத் அலி கானின் பிரைவேட் ரயில் நிலையம்
நவாப் ஹமீத் அலி கான் மிகவும் சாதாரண மக்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவித்தார், பெரும்பாலான இந்தியர்களால் இரண்டாம் வகுப்பு டிக்கெட்டை வாங்க முடியாத சூழ்நிலையில், அவர் இரண்டு ஆடம்பரமான ரயில் பெட்டிகளை நிரந்தரமாக நிறுத்தி வைத்திருந்தார், அவை நவாபின் தேவைக்கு ஏற்ப எப்போது வேண்டுமென்றாலும் கிளம்ப தயார் நிலையில் இருந்தது.
சாண்டிலியர்கள், ஆடம்பர பர்னிச்சர்கள், பாரசீக கம்பளங்கள் மற்றும் இந்திய சைவ மற்றும் ஆங்கில அசைவ உணவு வகைகளுக்கான தனித்தனி சமையலறைகள் கூட பொருத்தப்பட்ட நவாப் ஹமீத் அலி கானின் ரயில் பெட்டிகள் வெறும் ரயில் பெட்டிகளாக மட்டுமல்லாமல், அவை நகரும் அரண்மனைகளாகவும் இருந்தன.
நவாப் ஹமீத் அலி கானின் ரயில் பெட்டிகளுக்கு என்ன ஆனது?
நவாப் ஹமீத் அலி கான் 1930 ஆம் ஆண்டு இறந்தார். அவருக்கு பிறகு அவருடைய மகன் நவாப் ரஜா அலி கான் அரியணையில் அமர்ந்தார். 1954 ஆம் ஆண்டு பிரிவினைக்குப் பிறகு இந்திய அரசாங்கத்திற்கு இரண்டு அரச ரயில் பெட்டிகளை நவாப் ரஜா அலி கான் பரிசாக வழங்கினார். ஆச்சரியப்படும் விதமாக, நவாப் இறந்த ஆண்டான 1966 வரை இந்த ரயில் பெட்டிகள் பயன்பாட்டில் இருந்தன. 1966 இல் அவர் இறந்ததைத் தொடர்ந்து, நவாப் ஹமீத் அலி கானின் தனியார் ரயில் நிலையத்தில் செயல்பாடுகள் குறைந்தது, அதே காலகட்டத்தில், முன்னாள் சமஸ்தானங்களுக்கு நிதி உதவி செய்து வந்த சொத்துக்களை இந்திய அரசு ரத்து செய்ததும் இந்தியாவின் ஒரே தனியார் ரயில் நிலையம் மூடுவதற்கு வழிவகுத்தது.



Click it and Unblock the Notifications











