Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
உலகிலேயே இந்த நாட்டில்தான் அதிக புத்திசாலி மக்கள் வாழ்கிறார்களாம்... எந்த நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
புத்திசாலிகள் இல்லாமல் வரலாற்றை உருவாக்க முடியாது என்பது ஒரு பழமொழி. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன், நியூட்டன், ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற மேதைகளின் புத்திக்கூர்மைதான் இந்த உலகின் தலையெழுத்தை மாற்றியது. அவர்கள் இறந்துவிட்டாலும் அவர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் கருத்துக்கள் மூலம் இன்னும் அவர்கள் உயிருடன்தான் இருக்கிறார்கள்.
சாதாரண மக்கள் போல அல்லாமல் அவர்கள் அசாதாரணமானவர்கள், அவர்கள் உலகைப் பார்க்க ஒரு புதிய வழியைக் கற்றுக் கொடுத்தார்கள். அவர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் கோட்பாடுகள் இல்லாமல், எந்தத் துறையிலும் நாம் பெற்ற வெற்றியை ஒருபோதும் அடைந்திருக்க முடியாது.

ஆனால் எந்த நாடு மற்றவர்களை விட அதிக புத்திசாலிகளை உருவாக்குகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உலகின் மற்ற எந்த நாட்டை விடவும் அதிபுத்திசாலிகளை உருவாக்கும் நாட்டைப் பற்றி விளக்கும் ஆராய்ச்சி உள்ளது. அது எந்த நாடு என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அதிக புத்திசாலிகளை உருவாக்கும் நாடு எது?
உலகின் இந்த நாட்டில்தான் புத்திசாலி மற்றும் மேதைகள் அதிகம் உள்ளனர். ஆனால் அது உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்காவோ, ரஷ்யாவோ அல்ல. மாறாக, இது ஒரு ஆசியாவை சேர்ந்த ஒரு நாடாகும். இந்த நாட்டில் அதிக எண்ணிக்கையிலான அதிக புத்திசாலிகள் உள்ளனர். புத்திசாலித்தனம் IQ மூலம் அளவிடப்படுகிறது. ஒருவரின் IQ அதிகமாக இருந்தால், அவர்கள் அதிபுத்திசாலியாகக் கருதப்படுவார்கள்.
ஒருவரின் புத்திசாலித்தனத்தை அளவிடுவதற்கான மதிப்பு
ஒருவர் எவ்வளவு சிறப்பாக சிந்திக்கிறார், பிரச்சினைகளை தீர்க்கிறார் என்பதைக் குறிக்கும் ஒரு எண் மதிப்பு IQ என்பது குறிப்பிடத்தக்கது. பின்லாந்தை தளமாகக் கொண்ட ஒரு அமைப்பான Wiqtcom Inc. - IQ ஐ மதிப்பிடுகிறது மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களின் IQ அளவை அளவிடும் அறிக்கையைத் தயாரித்துள்ளது. இந்த அமைப்பு IQ சோதனைகளை நடத்துகிறது, தரவுகளை சேகரிக்கிறது மற்றும் பகுப்பாய்வின் அடிப்படையில் தரவரிசைகளை தீர்மானிக்கிறது.
ஆசியாவில்தான் அதிக புத்திசாலிகள் உள்ளனர்
Wiqtcom Inc இன் ஆய்வின்படி, ஆசிய நாடுகள்தான் உலகளவில் அதிக IQ அளவைக் கொண்டுள்ளன. ஜப்பான், ஹங்கேரி, ஈரான், இத்தாலி மற்றும் தென் கொரியா ஆகியவை அதிக IQ அளவைக் கொண்ட நாடுகளில் உள்ளது என்று அறிக்கை கூறுகிறது. அதிக IQ அளவைக் கொண்ட நாடாக ஜப்பான் முதலிடத்தில் உள்ளது.
அறிக்கையின்படி, ஜப்பானிய மக்கள் 112.30 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளனர். மற்ற நாடுகளைச் சேர்ந்த தனிநபர்களுடன் ஒப்பிடும்போது அவர்கள் அதிக சிக்கல் தீர்க்கும் திறனைக் கொண்டுள்ளனர்.
ஜப்பானிய மக்கள் உலகின் பிற பகுதிகளை விட அதிக புத்திசாலிகளாகக் கருதப்படுகிறார்கள், சிக்கலான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சிறந்து விளங்குகிறார்கள். அதனால்தான் ஜப்பானின் தொழில்நுட்பம் மற்ற நாடுகளை விட, அமெரிக்கா மற்றும் சீனாவை விட கூட, முன்னேறியதாகக் கருதப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை.
இதைத்தொடர்ந்து ஹங்கேரி, தைவான், இத்தாலி மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.



Click it and Unblock the Notifications
