தலைசுற்ற வைக்கும் போக்குவரத்து விதிகள் கொண்ட நாடுகள்... இங்க அபராதம் கட்டவே கடன்தான் வாங்கணும் போல...!

ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான போக்குவரத்து விதிகள் உள்ளன. போக்குவரத்து விதிகள் உருவாக்கப்படுவது மக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காகத்தான். அந்த போக்குவரத்து விதிகள் பின்பற்றப்படாத போது அபராதம், சில நாட்கள் முதல் மாதம் வரை சிறைத்தண்டனை என தண்டனைகள் அளிக்கப்படுகிறது.

இந்தியாவிலும் போக்குவரத்து விதிகளும், அதற்கான அபராதங்களும் நடைமுறையில் உள்ளன. வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தற்போது நடைமுறையில் உள்ள கட்டணங்கள் பலமடங்கு அதிகரிக்கப்போகிறது. இந்த புதிய அறிவிப்பு இப்போதே வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் ஆரம்பம் முதலே கடுமையான போக்குவரத்து விதிகளை பின்பற்றும் சில நாடுகள் உள்ளன.

Which Countries Have the Strictest Traffic Rules

இந்த நாடுகளில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு வழங்கப்படும் தண்டனை நமக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தக்கூடும். இந்த பதிவில் கடுமையான போக்குவரத்து விதிகள் கொண்ட நாடுகள் சிலவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்று சட்டம் உள்ளது. ஒருவேளை சீட்பெல்ட் அணிய மறந்துவிட்டால், அவர்களுக்கு 330 AUD(இந்திய மதிப்பில் 18,000) வரை அபராதம் விதிக்கப்படும். பல நாடுகளில் சீட் பெல்ட் சட்டங்கள் இருந்தாலும், அதை அமல்படுத்துவதில் ஆஸ்திரேலியா மிகவும் கடுமையான நாடாக இருக்கிறது.

இதற்கான ஒரே காரணம் சீட் பெல்ட்கள் உயிர்களைக் காப்பாற்றுகின்றன. அதிகாரிகள் இந்த பெரிய அபராதத்தை ஒரு தண்டனையாக மட்டும் பார்க்கவில்லை, இந்த அடிப்படை விதி உயிரைப் பாதுகாக்க எவ்வளவு முக்கியமானது என்பதை நினைவூட்டுவதாக பார்க்கிறார்கள். சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டுவது விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படுவதை பெருமளவில் குறைக்கும்.

நார்வே

நார்வே நாட்டில் வாகனம் ஓட்டும்போது வேகம் மிகவும் முக்கியமானது. இங்கு வேக வரம்பு மணிக்கு 20 கிமீ மட்டுமே, இதைத் தாண்டினால், 18 நாட்கள் வரை சிறையில் அடைக்கப்படலாம். நீங்கள் வேகத்தை அதிகரிக்கும் போது தண்டனைகள் இன்னும் கடுமையாகிவிடும். இந்த கடுமையான விதிகள் மூலம் வேகத்தை குறைப்பதன் மூலம் சாலை விபத்துகளைக் குறைப்பதை நார்வே நோக்கமாகக் கொண்டுள்ளது. உண்மையில் இந்த கடுமையான அணுகுமுறை பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் உலகில் விபத்து மிகவும் குறைவாக நடக்கும் நாடுகளில் நார்வே ஒன்றாக உள்ளது.

Which Countries Have the Strictest Traffic Rules

அமெரிக்கா

அமெரிக்காவில் பயணம் செய்யும் போது கார்களில் குழந்தைகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குழந்தை பாதுகாப்பு பற்றிய சட்டங்கள் நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகின்றன, வாகனங்களில் குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து கடுமையான விதிகள் உள்ளன.

இந்த சட்டங்கள் மீறப்பட்டால், அபராதம், சமூக சேவை அல்லது கட்டாய கல்வித் திட்டங்களில் கலந்துகொள்வது போன்ற தண்டனைகளை சந்திக்க நேரிடலாம். சாலையில் குழந்தைகளை முடிந்தவரை பாதுகாப்பாக வைத்திருக்க இந்தச் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அமெரிக்கா குழந்தைகளின் பாதுகாப்பையும், குழந்தைகள் சம்பந்தப்பட்ட விபத்துகளைத் தடுப்பதற்கு எவ்வளவு முயற்சிக்கிறது என்பதை இந்த சட்டங்கள் விளக்குகின்றன.

Take a Poll

இங்கிலாந்து

வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்பாட்டை இங்கிலாந்து சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை. ஹேண்ட்ஸ்-ஃப்ரீ சாதனம் இல்லாமல் உங்கள் போனைப் பயன்படுத்தினால், உங்களுக்கு £200 அபராதம் விதிக்கப்படலாம் மற்றும் உங்கள் ஓட்டுநர் உரிமத்தில் 6 புள்ளிகளை இழக்க நேரிடும். தொலைபேசிகள் கவனச்சிதறலாக மாறி வருவதால், ஓட்டுநர்கள் சாலையில் கவனம் செலுத்துவதை உறுதிசெய்ய இங்கிலாந்து போக்குவரத்து விதிகளை கடுமையாக்கியுள்ளது. எவ்வளவு அவசரமான போன் அழைப்பாக இருந்தாலும் வாகனம் ஓட்டும்போது அதை பேசக்கூடாது.

சிங்கப்பூர்

போக்குவரத்து விதிமீறல்களை சிங்கப்பூர் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை. இங்கு அதிக வேகம், சட்டவிரோத வாகன நிறுத்தம் மற்றும் பிற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன, மேலும் தொடர்ச்சியான போக்குவரத்து கண்காணிப்புகள் மூலம் சிங்கப்பூர் உலகின் பாதுகாப்பான சாலை அமைப்பை உருவாக்கியுள்ளது. இங்கு போக்குவரத்துக்கான விதி எளிது, அனைவரும் விதிகளைப் பின்பற்றும்போது, ​​சாலைகள் சீராகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். மேலும் சட்டங்கள் தீவிரமாக கடைபிடிக்கப்படும் ஒரு இடத்தில், விளைவுகள் சிறப்பாக இருக்கும்.

Story first published: Thursday, March 20, 2025, 21:45 [IST]
Desktop Bottom Promotion