Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
விண்வெளிக்கு மனிதர்களுக்கு முன்னால் அனுப்பப்பட்ட விலங்குகள் என்னென்ன அவற்றின் நிலை என்னவானது தெரியுமா?
சமீபத்தில் இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு சென்று வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார். விண்வெளி ஆராய்ச்சியில் மனித இனம் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. ஒவ்வொரு நாடும் தங்களுக்கென ஒரு தனிப்பட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை வைத்துள்ளது. இப்போது மனிதர்கள் விண்வெளி செல்வது மிகவும் எளிதானதாக தோன்றினாலும் கடந்த காலங்களில் அது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன் சோதனை ஓட்டமாக பல உயிரினங்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. அதில் சில விலங்குகள் உயிருடன் பூமிக்குத் திரும்பின, சில உயிரினங்கள் இறந்தன. மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல பல உயிரினங்கள் தங்கள் உயிரை விட்டன. இந்த பதிவில் மனிதர்களுக்கு முன் அனுப்பப்பட்ட உயிரினங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

பழ ஈக்கள்- 1947
விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு நாய் என்று நாம் நினைத்திருப்போம், ஆனால் உண்மையில் விண்வெளிக்கு சென்ற முதல் விலங்கு பழ ஈ ஆகும், இது 1947 ஆம் ஆண்டு V-2 ராக்கெட்டில் அனுப்பப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு V-2 பாலிஸ்டிக் ஏவுகணை, பழ ஈக்களால் நிரப்பப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
அமெரிக்க விஞ்ஞானிகள் அண்ட கதிர்வீச்சு எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைப் பற்றி அறிய விரும்பினர், இதனால் மனிதர்களின் மரபணுக்களுடன் தொடர்புடைய ஈக்களைத் தேர்ந்தெடுத்தனர். மேலும், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, ஈக்கள் பத்திரமாக பூமிக்குத் திரும்பின. மனித இனம் போன்ற மிகவும் சிக்கலான உயிரினம் கதிர்வீச்சினால் எவ்வாறு பாதிக்கப்படலாம் என்பதைக் கண்டறிய இது உதவியது.
ரீசஸ் குரங்கு - 1949
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் குரங்கு ஜூன் 14, 1949 அன்று V-2 ராக்கெட்டில் கிட்டதட்ட 134 கி.மீ. தூரம் விண்வெளிக்கு சென்றது. துரதிர்ஷ்டவசமாக இந்த குரங்கு இறந்தது . ராக்கெட் பயணம் ஏற்படுத்தும் உயிரியல் விளைவுகளை ரீசஸ் குரங்கு விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. பின்னர், கோர்டோ என்ற அணில் குரங்கு 1958 இல் 310 மைல் உயரத்திற்குச் சென்றது. இந்த பயணம் இதய துடிப்பு, சுவாசிப்பது மற்றும் விண்வெளியில் உள்ள பிற உடல் செயல்முறைகள் குறித்த மதிப்புமிக்க தகவல்களை வழங்குகின்றன.
லைக்கா நாய் - 1957
லைக்கா மாஸ்கோவிலிருந்து அனுப்பப்பட்ட ஒரு தெருநாயாகும். 1957 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் பூமியைச் சுற்றி வந்த முதல் விலங்கு இதுதான். லைக்கா நாய் அளவில் சிறியதாகவும், 6 கிலோ எடை கொண்டதாகவும் இருந்தது. தெருக்களில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டபோது சோவியத் விண்வெளித் திட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட தெருநாய்களில் இதுவும் ஒன்றாக இருந்தது. ஆண்களை விட உயிரியல்ரீதியாக வலிமையானவை என்று நம்பப்பட்டதால், பெண் நாய்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. ஏப்ரல் 14, 1958 அன்று பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்ததும் செயற்கைக்கோள் எரிந்தது. லைக்காவின் மரணம் உலகம் முழுவதும் கவலையைத் தூண்டியது.
பெல்கா மற்றும் ஸ்ட்ரெல்கா - 1960
சோவியத் யூனியனின் விண்வெளி நாய்களான பெல்கா மற்றும் ஸ்ட்ரெல்கா ஸ்புட்னிக்-5 இல் பூமியைச் சுற்றி வந்து 16 சுற்றுகளுக்குப் பிறகு திரும்பின. இந்த நாய்கள் மட்டும் விண்வெளிக்கு அனுப்பப்படவில்லை, அவற்றுடன் எலிகள், சில தாவரங்கள் மற்றும் பூச்சிகளும் அவற்றுடன் அனுப்பப்பட்டன, மேலும் அனைத்தும் உயிருடன் பூமிக்குத் திரும்பின. அவற்றின் பயணம் சிக்கலான உயிரினங்கள் சுற்றுப்பாதையில் நீண்ட காலம் வாழ முடியும் என்பதை நிரூபித்தது, இது எதிர்காலத்தில் மனிதர்கள் விண்வெளிக்குப் பாதுகாப்பாக சென்று வரலாம் என்ற நம்பிக்கையை அளித்தது.
சிம்பன்சிகள் - 1961
பயிற்சி பெற்ற ஹாம் என்ற சிம்பன்சி, 1961 ஆம் ஆண்டு மெர்குரி-ரெட்ஸ்டோன் ராக்கெட்டில் விண்வெளிக்குச் சென்றது. சிம்பன்சி லிவர் மற்றும் அனைத்து விமான சுவிட்சுகளையும் சிறப்பாக பயன்படுத்தியது, மேலும் விண்வெளிப் பயணத்தின் அழுத்தமான சூழ்நிலையிலும் விலங்கினங்கள் வேலை செய்ய முடியும் என்று உலகிற்கு உணர்த்தியது.
ஆமை - 1968
1968 ஆம் ஆண்டு, சோவியத் யூனியனின் Zond 5 பயணத்தில் இரண்டு ஆமைகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. அந்த இரண்டு அதிர்ஷ்டசாலி விலங்குகளும் சந்திரனைச் சுற்றி வந்து உயிர் பிழைத்த முதல் விலங்குகளாக இருந்தது. ஒரு வார நீண்ட விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு, ஆமைகள் பாதுகாப்பாகத் பூமி திரும்பியது.



Click it and Unblock the Notifications












