Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
mahalaya amavasya 2024: மகாளய பட்ச அமாவாசை 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள் இதோ..!
mahalaya amavasya 2024 : ஒரு மாதமும் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது.. அதிலும் மகாளய அமாவாசை புண்ணியம் செய்யக்கூடிய நாளாகும்.. பொதுவாகவே அமாவாசையை நோக்கிச் செல்லும் நாட்களை கிருஷ்ண பட்சம் என்றும் பௌர்ணமியை நோக்கி நகரும் நாட்கள் சுக்கில பட்சம் என்றும் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
அதே போல மகாளய பட்சம் என்பதும் பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலம் ஆகும். ஆவணி மாதப் பௌர்ணமியை அடுத்த பிரதமையிலிருந்து புரட்டாசி அமாவாசை வரை உள்ள நாட்கள் மகாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது.

புரட்டாசி மாத சனிக்கிழமையில்தான் சனி பகவான் அவதரித்தார் என சொல்லப்படுவதால் சனியால் பாதிப்பு இருப்பவர்கள் புரட்டாசியில் விரதம் இருந்தால் அதிலிருந்து விடுபடலாம். புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால் அனைத்து விதமான கஷ்டங்கள், துன்பங்களில் இருந்தும் விடுபடலாம் என்பது நம்பிக்கை. புண்ணிய மாதமான புரட்டாசி மாதம் இந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி துவங்கியது.. புரட்டாசியின் முதல் மற்றும் கடைசி ஆகிய இரண்டு நாட்களுமே பெளர்ணமி திதியாக அமைவதால், இந்த நாளில் செய்யப்படும் சத்ய நாராயண பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
செப்டம்பர் 17ம் தேதி துவங்கி, அக்டோபர் 17ம் தேதி வரை அமைந்துள்ள புரட்டாசி மாதம் பல சிறப்புகளை உள்ளடக்கியதாக உள்ளது. புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையில் சங்கடஹர சதுர்த்தி வருகிறது.. 2வது சனிக்கிழமையில் ஏகாதசியும், கடைசி சனிக்கிழமையில் திருவோண விரதமும் வருகிறது.. விஜய தசமி ஆகியனும், அதற்கு அடுத்த நாளே ஏகாதசியும் வருவதாக அமைந்துள்ளது. அக்டோபர் 02ம் தேதியான புதன்கிழமை மகாளய அமாவாசையும், 2 பவுர்ணமிகளும் புரட்டாசி மாதத்தில் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தால், ஆண்டு முழுவதும் அமாவாசை தினங்களில் முன்னோர்களை வழிபட்ட புண்ணியம் வந்து சேரும் என்பது ஐதீகம்.
மகாளய அமாவாசை 2023 எப்போது?
மகாளய பட்சம் இந்த ஆண்டு செப்டம்பர் 17 ம் தேதி துவங்குகிறது. செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 17 வரையிலான காலம் மகாளய பட்ச காலம் என்று அழைக்கப்படுகிறது. மகாளய பட்சத்தை தொடர்ந்து வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகிறது. இது அக்டோபர் 02ம் தேதி வருகிறது. இந்த 15 நாட்களும் பித்ருக்களுக்கு உரிய காலம்.. இந்த நேரத்தில் முன்னோர்களுக்கு விரதம் இருப்பதினால் இந்த நாட்களில் சுபகாரியங்கள் ஏதும் நடத்தப்படுவதில்லை. இந்த ஆண்டு மகாளய அமாவாசை புதன்கிழமை வருகிறது. அன்றைய தினம் முன்னோர்களை வரவேற்கும் விதமாக தர்ப்பணம் கொடுப்பது சிறப்பாகும். இதில் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தது எள்ளும் தண்ணீரும் இறைப்பதாகும், இது எளிமையான தர்ப்பணம் கொடுக்கும் முறை..
தர்பணம் கொடுக்க உகந்த நேரம் என்ன?
நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அக்டோபர் 2ஆம் தேதி காலை 6 மணியிலிருந்து 1 மணி வரை தர்ப்பணம் கொடுக்கலாம். ராகு காலம் மற்றும் எமகண்ட நேரத்தை தவிர்த்துக் கொள்ளவும். இன்றைய நாளில் உகந்த நேரத்தில் இப்படி தர்பணம் கொடுப்பதினால் நமக்கு மட்டுமல்லாமல் நம் தலைமுறையினருக்கும் அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பித்ரு தர்பணம் கொடுக்க எளிய வழிமுறை?
நதிக்கரையிலோ, கடற்கரையிலோ, முன்னோரை நினைத்து சிறிது எள்ளும், தண்ணீரும் தர்ப்பணம் செய்தாலே அவர்களது தாகமும், பசியும் அடங்கிவிடும் என்று கூறுகின்றன புராணங்கள். அவர்கள் மனம் குளிர அன்னதானம், வஸ்திர தானம், பழ வகைகள் தானம் போன்றவற்றைச் செய்தல் நன்மை பயக்கும். முன்னோர்களையும், உற்றார், உறவினர், தெரிந்தவர்கள் என்று அனைத்து காருண்ய பித்ருக்களையும் நினைத்து வழிபாடு செய்யுங்கள். இயன்ற அளவு தானங்கள் செய்து முன்னோரது அருளாசியை பெறுங்கள்.



Click it and Unblock the Notifications











