Latest Updates
-
இந்தியாவில் மது விற்பனையில் முன்னணியில் உள்ள டாப் 5 மாநிலங்கள் - தமிழ்நாடு முதல் இடத்தில் இல்லையாம் தெரியுமா? -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் இரட்டை ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
கோவக்காய் வாங்குனா இந்த மாதிரி ஹோட்டல் ஸ்டைலில் பொரியல் பண்ணுங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
வெண்டைக்காயை இப்படி மசாலா அரைச்சு பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு சாப்பிடுவாங்க.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
International Yoga Day 2026: தொப்பையை குறைக்கணுமா? அப்ப தினமும் இந்த 6 யோகாவை செய்யுங்க போதும்! -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 விஷயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாக இருப்பார்களாம் -
அபூர்வமான துவித்வாதச யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
1 கப் ரவையும், 1/2 கப் அவலும் இருந்தா.. காலையில் 10 நிமிடத்தில் இந்த டிபன் காம்போவை செய்யுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
ஒரு கிலோ 3 லட்சத்துக்கு விற்கும் உலகின் விலையுயர்ந்த மசாலா பொருள் எது தெரியுமா? இது இந்தியாவிலும் விளையுதாம்..
இந்திய சமையலறைகள் ஒவ்வொன்றிலுமே மசாலாப்பொருட்கள் நிறைந்திருக்கும். இந்திய உணவுகள் உலகம் முழுக்க பிரபலமானதாக இருக்க காரணம் அதில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்கள்தான். ஒவ்வொரு இந்திய உணவிற்கும் அதற்கென தனிப்பட்ட சொந்த மசாலா கலவை தேவை, மேலும் ஒவ்வொரு மசாலாவிற்கும் அதன் சொந்த சுவை மற்றும் முக்கியத்துவம் உள்ளது.
இந்த மசாலாப் பொருட்கள் சுவையில் மட்டுமல்ல, விலையிலும் வேறுபடுகின்றன. இந்திய மசாலாப் பொருட்கள் அவற்றின் நறுமணம் மற்றும் சுவைக்காக உலகம் முழுவதும் பிரபலமானவை. ஆனால் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த மசாலா எதுவென்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்த இந்திய மசாலாவின் விலை அனைவரையும் ஆச்சரியப்படுத்தக்கூடும்.

சிவப்புத் தங்கம்
இந்த மசாலாப் பொருள் மிகவும் அரிதானது மற்றும் மதிப்புமிக்கது என்பதால் இது பொதுவாக "சிவப்பு தங்கம்" என்று அழைக்கப்படுகிறது. அதுதான் குங்குமப்பூ, பொதுவாக குழந்தையின் நிறத்தை அதிகரிக்க கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க மட்டுமே பயன்படும் என்று நாம் நினைத்திருக்கிறோம். தற்போது, குங்குமப்பூ உலகின் மிகவும் விலையுயர்ந்த மசாலாப் பொருளாகக் கருதப்படுகிறது. ஒரு கிலோ குங்குமப்பூவின் விலை ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை இருக்கலாம்.
குங்குமப்பூ என்றால் என்ன?
குங்குமப்பூ என்பது ஆட்டம்ன் குரோக்கஸ் என்ற தாவரத்தின் பூவிலிருந்து வரும் ஒரு அரிய மற்றும் மதிப்புமிக்க மசாலாப் பொருள். இதன் அறிவியல் பெயர் குரோக்கஸ் சாடிவஸ். இந்த அழகான பூ இலையுதிர்காலத்தில் மட்டுமே பூக்கும். ஒவ்வொரு பூவின் மையத்திலும் மூன்று சிறிய சிவப்பு நூல்கள் உள்ளன, இவை சூலகங்கள் என்று அழைக்கப்படுகின்றன, இவைதான் குங்குமப்பூ என்று அழைக்கப்படுகிறது. இந்த மென்மையான இழைகள் கவனமாக கையால் எடுக்கப்பட்டு, உலர்த்தப்பட்டு, மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
சிவப்பு சூலகங்களைத் தவிர, பூவின் மஞ்சள் மகரந்தங்கள் மற்றும் ஊதா இதழ்களும் பயனுள்ளதாக இருக்கும். அவை பெரும்பாலும் இயற்கை சாயங்களை தயாரிக்கப் பயன்படுகின்றன.
குங்குமப்பூ ஏன் இவ்வளவு காஸ்டலியாக இருக்கிறது?
குங்குமப்பூ உலகின் விலையுயர்ந்த மசாலாவாக இருக்க பல காரணங்கள் உள்ளன. ஒன்று, ஒரு கிலோ குங்குமப்பூவை உற்பத்தி செய்ய சுமார் 150,000 பூக்கள் தேவை. இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், ஒவ்வொரு பூவும் மூன்று குங்குமப்பூ இழைகளை மட்டுமே தருகிறது. ஒவ்வொரு பூவும் சில சிறிய சிவப்பு நூல்களை மட்டுமே உற்பத்தி செய்கிறது, மேலும் இவற்றை ஒவ்வொன்றாக கையால் பறிக்க வேண்டும். அதுமட்டுமின்றி குங்குமப்பூ தாவரங்களும் உலகின் மிகவும் விலையுயர்ந்த தாவரங்களில் ஒன்றாகும். இந்தியாவில், குங்குமப்பூ முக்கியமாக ஜம்மு மற்றும் காஷ்மீரின் சில பகுதிகளில் வளர்க்கப்படுகிறது.
வானிலையின் முக்கியத்துவம்
குங்குமப்பூ மிகவும் குறிப்பிட்ட வானிலை நிலைகளில் மட்டுமே வளர முடியும், குங்குமப்பூ காஸ்டலியாக இருக்க இதுவும் ஒரு காரணம். அதன் தனித்துவமான சுவை, ஆழமான தங்க நிறம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் அதன் மதிப்பை அதிகரிக்கின்றன.
குங்குமப்பூ முதன்முதலில் எங்கு பயிரிடப்பட்டது என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது, ஆனால் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு, அலெக்சாண்டரின் வீரர்கள் கிரேக்கத்திற்கு குங்குமப்பூவை வளர்க்கும் யோசனையைக் கொண்டு வந்ததாக நம்பப்படுகிறது.
ஆரோக்கிய நன்மைகள்
குங்குமப்பூ சமையலில் மட்டுமல்ல, அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் மதிப்புமிக்கது. இது பெரும்பாலும் சரும பராமரிப்புப் பொருட்களில், குறிப்பாக சருமத்தை பிரகாசமாக்கவும் ஊட்டமளிக்கவும் வடிவமைக்கப்பட்ட கிரீம்களில் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் குங்குமப்பூவை பல்வேறு வழிகளில் பயன்படுத்துகின்றனர். இதுமட்டுமின்றி உணவு, சுகாதார சப்ளிமெண்ட்ஸ் மற்றும் அழகு சிகிச்சைகளில் கூட குங்குமப்பூ பயன்படுத்தப்படுகிறது.
குங்குமப்பூவின் சுவை
குங்குமப்பூ ஒரு மலர், எனவே இது மண் சுவை கொண்டது, மேலும் சற்று இனிப்பாகவும், சிறிது தேன் சுவையையும் கொண்டுள்ளது. கார்டேனியாக்களில் உள்ள கரோட்டினாய்டு கலவையான குரோசின், குங்குமப்பூவிற்கு அதன் தனித்துவமான கசப்புத் தன்மையை அளிக்கிறது. மொத்தத்தில் குங்குமப்பூவின் சுவை இதுதான் என்று கூறிவிட முடியாது.



Click it and Unblock the Notifications
