Latest Updates
-
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா?
50 ஆண்டுகளுக்கு பின் சிம்மத்தில் செவ்வாய் புதன் சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு நல்ல ஜாக்பாட் அடிக்கபோகுது
Venus Mars Mercury In Leo After 50 Years: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும் போது, மற்ற கிரகங்களுடன் இணைந்து பயணிக்கும் வாய்ப்புக்களும் உருவாகும்.
அப்படி ஒரு ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்றாக இணைந்து பயணித்தால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் ஒரு ராசியில் 3 கிரகங்கள் சேர்ந்தால், திரிகிரக யோகம் உருவாகும்.

அந்த வகையில் ஜூலை மாதம் 25 ஆம் தேதி புத்திகாரகனான புதன் சிம்ம ராசிக்குள் நுழைந்தார். சிம்ம ராசியில் நுழையும் போது, ஏற்கனவே அந்த ராசியில் கிரகங்களின் தளபதியான செவ்வாயும், செல்வ செழிப்பிற்கு காரணமான சுக்கிரனும் பயணித்து வருவதால், சிம்ம ராசியில் 3 கிரகங்களின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது.
சிம்ம ராசியில் செவ்வாய், புதன், சுக்கிரனின் சேர்க்கையானது 50 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த சேர்க்கை சிறப்பானது மட்டுமின்றி, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். முக்கியமாக இந்த சேர்க்கையால் 3 ராசிக்காரர்கள் ஏராளமான நன்மைகளையும், லாபத்தையும் காண்பார்கள். இப்போது அந்த அதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. அதுவும் செல்வம் மற்றும் லாபத்தின் அதிபதிகள் இந்த வீட்டில் உள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்கள் வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபத்தைக் காண்பார்கள். தொழில் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.
திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வாகனம், சொத்து வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை இல்லாமல் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இக்காலத்தில் வருமானத்தில் நல்ல அதிகரிப்பைக் காணலாம். புதிய வருமானத்தை பெற மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து தொழிலைத் தொடங்கினால், அந்த தொழில் நல்ல லாபத்தைத் தரும். பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிலை வழக்கத்தை விட மிகவும் சிறப்பாகவும், வலுவாகவும் இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 7 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். எதிர்பாராத பண வரவைப் பெறக்கூடும். கூட்டு வியாபாரம் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வைக் காணலாம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை இல்லாத அளவில் தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். இதனால் பல காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications