Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
10 ஆண்டுகளுக்கு பின் ஹோலி அன்று உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு செல்வம் பெருகும்..
Mahalaxmi Rajyog On Holi 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றும் போது சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் சுக்கிரன் கும்ப ராசியில் நுழைந்தார். இந்நிலையில் மார்ச் 15 ஆம் தேதி செவ்வாய் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதனால் கும்ப ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது.

இந்த சேர்க்கையால் ஒரு மங்களகரமான மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த சுப யோகமானது ஹோலி பண்டிகை அன்றும் நீடித்திருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக நல்ல ஆதாயம் கிடைக்கும் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இப்போது மகாலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். பிள்ளைகளால் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு இருமடங்கு லாபம் கிடைக்கும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வங்கி இருப்பு எதிர்பாராத அளவில் அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். மேலும் புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தால், அதிலிருந்து நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். புதிய திட்டத்தில் முதலீடு செய்ய நினைத்தால், அதிலிருந்தும் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தைரியமும், வீரமும் அதிகரிக்கும். கூட்டு தொழில் தொடங்க நினைத்தால் நல்ல பலன் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவராக இருந்தால், நல்ல வரன் தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











