Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து அட்சய திருதியை அன்று உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது! -
ரவா இட்லியும், மல்லி சட்னியும் - சட்டுன்னு 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 18 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மேஷ ராசியில் உருவாகும் திரிகிரக யோகம் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
வாஸ்து படி இந்த செடிகளில் ஒன்றை உங்கள் வீட்டில் வளர்த்தால் பணமும், அதிர்ஷ்டமும் தேடிவருமாம் -
சந்திரன்-சுக்கிரனால் உருவாகும் அரிய லட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிக்கன் குருமா சுவையில் தக்காளி குருமா- எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
ஆந்திரா ஸ்டைல் பச்சை மாங்காய் சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க டேஸ்ட் தரமா இருக்கும் -
கோடையில் உங்க வீட்டை குளுகுளு-ன்னு வெச்சுக்கணுமா? அப்ப இந்த 5 டிப்ஸை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க! -
இந்தியாவில் இரண்டு தலைநகரங்கள் உள்ள தனித்துவமான மாநிலங்கள் என்னென்ன தெரியுமா?
உங்கள் வாழ்க்கையில் பணம் மழையாக கொட்ட வேண்டுமா? இந்த பொருட்களில் ஒன்றை பர்ஸில் வையுங்க...!
Vastu Tips for Money: நாம் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ள விட்டாலும் வாழ்க்கையின் பெருமளவு பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி பணத்திற்கே உள்ளது. உலகம் பணத்தால் இயங்குகிறது, எல்லோரும் அதை தங்கள் வாழ்க்கையில் குவிக்க விரும்புகிறார்கள். பணம் அதன் மதிப்பு மற்றும் அதை ஈர்க்கும் வழிகளை தேடி வருகிறது. பணத்தை ஈர்க்கும் எளிய மற்றும் தந்திரமான வழிகளில் ஒன்று அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் பொருட்களை பர்ஸில் வைப்பது.
சில நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் பொருட்களை பர்ஸில் அல்லது பணப்பையில் வைப்பது உங்கள் அன்றாட வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். இந்த பொருட்களை நீங்கள் பர்ஸில் வைத்தால் நீங்கள் வாழ்க்கையில் பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க மாட்டீர்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

லட்சுமி தேவியின் படம்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, தாமரையின் மீது அமர்ந்திருக்கும் லட்சுமி தேவியின் படத்தை உங்கள் பணப்பையிலோ அல்லது பையிலோ வைத்திருப்பது அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. லட்சுமி தேவியின் படம் செல்வம், அதிர்ஷ்டம், சேமிப்பில் நாட்டம் மற்றும் வாழ்க்கையில் தெளிவு போன்றவற்றை ஈர்க்கிறது.
ஆசைகள் எழுதிய காகிதம்
ஒரு சிவப்புத் தாளில் உங்கள் விருப்பங்களை எழுதி, அதை ஒரு சிவப்பு பட்டு நூலால் கட்டி, அந்த காகிதத்தை நீங்கள் பணத்தை வைத்திருக்கும் பெட்டகத்தில் வைக்கவும் அல்லது காகிதத்தை உங்கள் பணப்பையில் வைக்கவும், இதன் மூலம் செல்வத்தையும் செழிப்பையும் ஈர்க்கும்.
அரிசி
அரிசி ஒரு நல்ல வாழ்க்கை மற்றும் அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. உங்கள் பர்ஸ் அல்லது பணப்பையில் ஒரு சில அரிசி தானியங்களை வைத்திருப்பது நேர்மறை ஆற்றலை உங்களிடம் ஈர்க்கும். புதிய ஆற்றலை ஈர்க்க நீங்கள் அடிக்கடி அரிசியை மாற்றலாம்.
பரிசாக பெறப்பட்ட பணம்
உங்கள் பெற்றோர் அல்லது பெரியவர்களிடமிருந்து வெகுமதியாகப் பெற்ற பணத்தை உங்கள் பணப்பையில் வைத்திருப்பது உங்களை நோக்கி அதிர்ஷ்டத்தை ஈர்க்கும். இந்த பணத்தை ஒருபோதும் செலவு செய்துவிடக்கூடாது.
ஸ்ரீ யந்திரம்
ஸ்ரீ யந்திரம் மிகவும் புனிதமான பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த புனிதமான ஸ்ரீ யந்திரத்தை உங்கள் பாக்கெட்டில் அல்லது பணப்பையில் வைத்துக் கொள்ளலாம். இது உங்கள் வாழ்க்கையை நேர்மறையானதாக மாற்றும் மற்றும் நிதி வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
தாமரை விதைகள்
தாமரை மலர் லட்சுமி தேவியுடன் தொடர்புடையது மற்றும் தாமரை விதைகள் அதிர்ஷ்டமாகக் கருதப்படுகின்றன. நீண்ட கால நிதி ஆதாயத்திற்காக சில தாமரை விதைகளை உங்கள் பணப்பையில் அல்லது பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
அரசமர இலை
அரச மரம் ஒரு புனிதமான மரமாகக் கருதப்படுகிறது மற்றும் ஒரு புதிய அரசமர இலையை வைத்திருப்பது ஒருவரின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கலாம். இந்த இலையை வைக்கும் முன் இலையை நன்றாக கழுவி இலையில் குங்குமப்பூவால் 'ஸ்ரீ' என்று எழுத வேண்டும்.
வெள்ளி நாணயம்
உங்களிடம் ஒரு வெள்ளி நாணயம் இருந்தால், அதை உங்கள் பணப்பையில் வைக்கவும். ஆனால் அதை நம் பணப்பையில் வைப்பதற்கு முன், அதை லட்சுமி தேவியிடம் வைத்து வழிபடவும். அதன்பிறகு, அதை உங்கள் பணப்பையில் வைக்கவும்.



Click it and Unblock the Notifications













