Latest Updates
-
5500 பணக்காரர்கள் அவர்களின் உடலை சேமிக்க பல கோடிகளை முதலீடு செஞ்சுருக்காங்க...காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
Vastu Tips : உங்க வீட்டில் பணம் மழை பொழிய, மகாலட்சுமி குடியேர இந்த வாஸ்து டிப்ஸை ஃபாலோ பண்ணுங்கள்..!
vastu tips: நம் வீட்டில் வாஸ்து சம்பந்தமான தோஷம் இருந்தால்.. நோய்கள், பிரச்சனைகள், பண இழப்பு, கருத்து வேறுபாடுகள், தகராறுகள் நம்மை அடிக்கடி வாட்டி வதைக்கும். எவ்வளவுதான் இரவு பகலாக உழைத்தாலும் நாம் நினைக்கும் அளவுக்கு வெற்றியை அடைய முடியாது என்று வாஸ்து நிபுணர்கள் கூறினார். வாஸ்து சாஸ்திரம் தொடர்பான சில எளிய வழிமுறைகள் மூலம் நீங்களும் உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளலாம். அதை இப்போது பார்க்கலாம்.
1. வாஸ்து சாஸ்திரப்படி, காலையில் வீட்டை சுத்தம் செய்த பின்.. மஞ்சளை தண்ணீரில் கரைத்து, வெற்றிலையை உங்கள் வீடு முழுவதும் தெளிக்கவும். இதற்குப் பிறகு, அதே முறையில் கங்கை நீரையும் தெளிக்கவும். இது எதிர்மறை சக்திகளை வீட்டில் இருந்து நீக்கி வாஸ்து தோஷங்களை தடுக்கிறது.

2. வாஸ்து சாஸ்திரத்தின் படி, மத புத்தகங்களை தவறான திசையில் வைத்திருப்பது வீட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். சமய நூல்கள் மற்றும் புனித நூல்களை எப்போதும் வீட்டின் மேற்கு திசையில் வைக்க வேண்டும். படுக்கையின் உள்ளே மெத்தை அல்லது தலையணைக்கு அடியில் மதப் புத்தகத்தை வைப்பதும் அசுபமானது.
3. வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டுக் பூஜையறையில் பசு நெய் தீபம் தவறாமல் ஏற்றி, மணியும் அடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் உள்ள அனைத்து வகையான எதிர்மறை சக்திகளும் வெளியேறும். அதேபோல் சங்கு வீட்டில் வைத்து ஊதினால் நம் வீட்டில் உள்ள தோஷம் நீங்கும். பூஜை அறையில் உள்ள தெய்வங்களுக்குப் படைக்கப்பட்ட மலர்களை மறுநாள் அகற்றிவிட்டு, புதிய மலர்களை அர்ச்சனை செய்ய வேண்டும். அதேபோல.. பூஜை அறையில் தெய்வ உருவங்கள் ஒன்றையொன்று எதிர்நோக்கி வைக்கக் கூடாது. இது ஒரு பெரிய சிக்கலை உருவாக்குகிறது.
4. வாஸ்து சாஸ்திரத்தின் படி துடைப்பத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. வீட்டின் கதவுக்கு அருகில் துடைப்பத்தை வைக்காதீர்கள். இப்படி செய்வதால் வாஸ்து தோஷம் உண்டாகும். அதுமட்டுமின்றி துடைப்பத்தில் கால் பலமுறை பட்டால் பண நஷ்டம் ஏற்படும். துடைப்பம் வைக்கும் இடத்துக்கு மேல் கனமான பொருள் எதுவும் வைக்காமல் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
5. வீட்டின் உள்ளே சுவர்களில் அழகான மற்றும் மனதைக் கவரும் புகைப்படங்கள் வைக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டின் அதிபதி மனநலக் கோளாறுகளிலிருந்து விடுபடுவார். வன்முறை அல்லது போர் போன்ற படங்களை வீட்டில் வைக்கக் கூடாது.
6. வாஸ்து சாஸ்திரப்படி, நம் வீட்டில் யாராவது இரவில் தூங்காமல் இருந்தால், வாஸ்து தோஷத்தால் எரிச்சல் ஏற்பட்டால், அந்த நபர் தெற்கு நோக்கி தூங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நபரின் ஆளுமையில் மாற்றம் ஏற்படுவதோடு, தூக்கமின்மை நிலையும் மேம்படும்.
7. உங்கள் குல வளர்ச்சிக்கு வீட்டின் பிரதான கதவின் இருபுறமும் அசோக மரங்களை நட வேண்டும். மேலும் வீட்டின் வடகிழக்கில் குப்பைகள் அல்லது கனமான பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் குவிவதை தவிர்க்கவும்.
8. வாஸ்து சாஸ்திரத்தின்படி, நமது வீட்டின் வடகிழக்கு மூலையிலோ அல்லது பிரம்மாவின் இடத்திலோ ஒரு நல்ல நேரத்தில் ஒரு ஸ்படிக ஸ்ரீ யந்திரத்தை வைக்க வேண்டும். இந்த யந்திரம் லட்சுமி தேவியின் அடையாளமாகவும் உள்ளது.. மேலும் வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்களையும் நீக்குகிறது.
9. வாஸ்து சாஸ்திரப்படி உலர்ந்த பூக்கள் மற்றும் பிளாஸ்டிக் பூக்களை வீட்டில் வைக்கக்கூடாது. கூடிய விரைவில் அவற்றை எடுத்துவிட்டு மாற்றி அவைக்க வேண்டும். உங்கள் சிறிய பானை பூக்கள் வாடிவிட்டால், புதிய பூக்களை நட்டு, உலர்ந்த பூக்களை நிராகரிக்கவும்.
10. வாஸ்து சாஸ்திரப்படி துளசி செடியை வீட்டின் வடகிழக்கில் நட வேண்டும். இதனுடன், தினமும் மாலையில் துளசி செடியின் கீழ் தூய நெய் தீபம் ஏற்ற வேண்டும். அபப்டி துளசியின்முன் தீபம் ஏற்றினால் உங்கள் வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் குடியேறும் என்பது நம்பிக்கை.



Click it and Unblock the Notifications











