தூங்க சரியான திசை.. எந்த திசையில் தலை வைத்து படுத்தால் செல்வம் பெருகும்?

தூக்கம் என்பது வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கம். ஆனால் எந்த திசையில் தூங்குவது என்று மக்கள் கவலைப்படுவதில்லை. புராணங்கள் முதல் ஜோதிடம் மற்றும் பல்வேறு இந்து நூல்கள் வரை, தூங்கும் திசை ரொம்ப முக்கியம் என்றும் அதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது. தவறான திசையில் தூங்குவது மகிழ்ச்சி, செல்வம் மற்றும் வயதைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது.

தூங்கும் போது எந்த திசையில் தலை வைக்க வேண்டும் எந்த திசையில் கால் வைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.. தூக்கத்தின் நல்ல மற்றும் அசுபமான திசைகளைப் பற்றி இப்போது தெரிந்துக் கொள்ளலாம் வாங்க... பண்டிட் ராசந்திர ஜோஷியின் கூற்றுப்படி, பத்ம புராணம் உட்பட பல வேதங்களில் நித்ரா விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. வடக்கு அல்லது மேற்கு திசையில் தூங்க வேண்டாம் என்றுபத்ம புராணத்தில் எழுதப்பட்டுள்ளது.

vastu tips for sleeping what is the correct direction of sleep according to vastu

கிழக்குத் திசையில் தலை வைத்து உறங்கினால் அறிவு பெருகும் என்றும், தெற்குத் திசையில் தலை வைத்து உறங்கினால் செல்வமும், ஆயுளும் பெருகும் என்றும், மேற்குத் திசையில் தலை வைத்து உறங்குவதால் மனக் கவலையும், வடக்கு நோக்கி உறங்கினால் ஆயுட்காலம் குறையும் என்றும் திருமுறையில் எழுதப்பட்டுள்ளது.

பண்டிட் ஜோஷியின் கூற்றுப்படி, வீட்டில் தூங்கும் போது வெவ்வேறு திசைகளுக்கு விதிகள் உள்ளன. வீட்டில் உறங்கும் போது கிழக்கு நோக்கியும், மாமியார் வீட்டில் தெற்கு நோக்கியும், வெளிநாட்டில் இருக்கும் போது மேற்கு நோக்கியும் தூங்க வேண்டும் என்பது இதன் பொருள். அதேபோல், தகனம் செய்யும் போது இறந்தவரின் தலையை வடக்கு திசையிலும், இறந்த பிறகு தெற்கு திசையிலும் வைக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது குழுவில் பகலில் 30 நிமிடங்களுக்கு மேல் தூங்குபவர்கள் இருந்தனர். ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் தூங்குபவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவாக தூங்குபவர்களை விட ஐந்து மடங்கு அதிகம்; ஆனால் சில நிமிடங்கள் உறக்கநிலையில் இருப்பவர்களுக்கு அத்தகைய ஆபத்து இல்லை.

மொத்தத்தில் கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்து படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்து படுத்தால் கனவு மற்றும் அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் தலை வைத்து படுக்கவே கூடாது என்கிறது வாஸ்து சாஸ்திரம்..

Desktop Bottom Promotion