Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
அனைத்து இந்தியர்களும் அவசியம் தெரிஞ்சிக்க வேண்டிய பயனுள்ள அடிப்படை சட்டங்கள்... இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?
இந்தியாவின் சட்ட அமைப்பு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின், நாட்டின் நிர்வாகத்தின் முதுகெலும்பாக செயல்படுகிறது. சில சட்டங்கள் அவற்றின் உறுதியான தன்மையால் மிகவும் பிரபலமானதாக பரவலாக அறியப்பட்டாலும், பெரும்பாலான சட்டங்கள் மக்களுக்கு அந்நியமாகவும், பிரபலமற்றவையாகவும் உள்ளன.
அதிகம் அறியப்படாத இந்தச் சட்டங்கள் பொதுமக்களின் அறியாமையாலேயே இருளில் இருக்கின்றன. இந்த அறியாமையால்தான், இந்த சட்டங்கள் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம். மக்களுக்கு பயன்படும் நம்மை ஆச்சரியப்படுத்தும் சில குறைவாக அறியப்பட்ட சட்டங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

குப்பைக் கொட்டுதல்
இந்தியா தூய்மையில் மிகவும் பின்தங்கியிருக்கும் நாடாகும், மக்கள் தெருக்களில் குப்பைகளைக் கொட்டுவதை அடிக்கடி பார்க்கிறோம். ஆனால், பலருக்கு இது ஒரு குற்றம் என்பது தெரியாது. இந்த செயல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது, மேலும் குற்றவாளிகளுக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது சிறைக்கு அனுப்பப்படலாம். சில மாநிலங்களில் பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கும் சிறுநீர் கழிப்பதற்கும் எதிராக கடுமையான சட்டங்களும் உள்ளன.
தண்ணீரை இலவசமாகக் கேட்கலாம்
இந்திய சராயிஸ் சட்டம், 1887 இன் படி, எந்தவொரு நபரும் தங்களுக்கும் தங்கள் செல்லப்பிராணிகளுக்கும் எந்த நேரத்திலும் எந்த ஹோட்டல்/உணவகத்திலிருந்தும் தண்ணீரை இலவசமாகக் கேட்கலாம். மேலும் கழிப்பறையை இலவசமாகப் பயன்படுத்தலாம், யாரும் அவற்றை வேண்டாம் என்று சொல்ல முடியாது. எந்த நேரத்திலும் எந்த ஹோட்டலிலும் தண்ணீர் கேட்பது உங்கள் சட்டப்பூர்வ உரிமை.
பெண்களை கைது செய்யும் உரிமை
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 46(1)ன் படி, பெண் காவலர் முன்னிலையில் மட்டுமே பெண்கள் கைது செய்யப்பட வேண்டும். மேலும், சட்டப் பிரிவு 46(4) எந்தப் பெண்ணையும் சூரிய உதயத்திற்கு முன் அல்லது சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு காவலில் வைக்க முடியாது என்று கூறுகிறது. உடனடி நடவடிக்கை தேவைப்பட்டால், முதல் வகுப்பு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டின் அனுமதி அவசியம்.
சுய குற்றச்சாட்டிற்கு எதிரான உரிமை
இது ஒரு அரசியலமைப்பு உரிமையாகும், இது தனிநபர்கள் குற்றவியல் வழக்குகளில் தங்களுக்கு எதிராக சாட்சியமளிக்க கட்டாயப்படுத்தப்படுவதைத் தடுக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம், 1950, பிரிவு 20(3) மூலம் இது உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. விசாரணையின் போது மக்கள் அமைதியாக இருக்கத் தேர்வு செய்யலாம், மேலும் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என்ற அனுமானம் இந்த உரிமையின் கீழ் மக்களுக்கு வழங்கப்படுகிறது.
Public display of affection (PDA)
இந்தியாவில் பிடிஏ சட்டவிரோதமானது அல்ல என்றாலும், அதை தண்டனைக்குரிய செயலாக மாற்றும் சட்டங்கள் உள்ளன. இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 294, மற்றவர்களுக்கு எரிச்சல் அல்லது ஆட்சேபனையை ஏற்படுத்தும் ஆபாசமான செயல்கள் அல்லது வார்த்தைகளை பொதுவில் தடை செய்கிறது. இதற்கான தண்டனைகளில் மிகப்பெரிய அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரை சிறைவாசம் ஆகியவை அடங்கும்.
புதையல் சட்டம்
1878 ஆம் ஆண்டின் இந்திய புதையல் சட்டம், இந்தியாவில் மறைந்துள்ள பொக்கிஷங்களை கண்டுபிடிப்பதற்கான விதிமுறைகளை கோடிட்டுக் காட்டுகிறது. யாரேனும் ஒருவர் 10 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொக்கிஷங்களை கண்டால், கலெக்டர் அல்லது வருவாய்த்துறை கமிஷனரிடம் தெரிவிக்க வேண்டும், அதை வெறுமனே தங்களுக்கு சொந்தமாக வைத்துக்கொள்ள முடியாது. அப்படி வைத்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
அனைவருக்கும் சம ஊதியம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 39(a) பிரிவு, ஆண்களுக்கும் பெண்களுக்கும் போதுமான வாழ்வாதாரத்திற்கான சம உரிமைகள் இருப்பதை உறுதி செய்யும் சட்டங்களை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்று ஆணையிடுகிறது. பிரிவு 39(d) மேலும் பாலினத்தைப் பொருட்படுத்தாமல், சம வேலைக்கு சம ஊதியத்தை உறுதி செய்யும் கொள்கைகளை உருவாக்குமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்துகிறது.
அசையா சொத்து சட்டம்
அசையா சொத்துக்களை வாங்கும் போது நாளிதழ்களில் பொது அறிவிப்பை வெளியிடுவது சட்டப்படி கட்டாயமாகும். அறிவிப்பில் சொத்தின் சட்ட விளக்கம், நடவடிக்கைகள் அல்லது பரிவர்த்தனையின் விவரங்கள், தொடர்புடைய தேதிகள் மற்றும் நேரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் அல்லது வழங்கும் நிறுவனத்திற்கான தொடர்புத் தகவல் ஆகியவை இருக்க வேண்டும். இது சொத்து பரிவர்த்தனைகளில் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் சட்ட இணக்கத்தை உறுதி செய்கிறது.
பெண்கள் Virtual புகாரளிக்கலாம்
ஒரு பெண், ஏதேனும் காரணத்தால் காவல் நிலையத்திற்குச் செல்ல இயலவில்லை என்றால், துணை ஆணையர் அல்லது காவல்துறை ஆணையருக்கு மின்னஞ்சல் அல்லது பதிவுத் தபால் மூலம் புகார் அளிக்கலாம். அதன்பிறகு போலீசார் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு வரலாம்.



Click it and Unblock the Notifications












