இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான டாப் 10 நகரங்கள் இதுதான்... நம்ம சென்னை எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா?

2025 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இந்தியா 67-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சில நகரங்களின் வளர்ச்சிகள், அவற்றின் திறமையான நிர்வாகம் மற்றும் குறைந்த குற்ற விகிதங்கள் காரணமாக இந்த தரவரிசையில் இந்தியா முன்னேறி வருகிறது. அதேபோல இந்தியாவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பாதுகாப்பான இந்திய நகரங்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

குற்றம், சட்ட அமலாக்கம் மற்றும் சமூக பாதுகாப்பு போன்ற அளவீடுகளுடன், இந்த தரவரிசைகள் பொதுமக்களின் கருத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை அதிகரித்து வருவதால், பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி, பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான, அமைதியான சூழலைத் தேடுகிறார்கள். இந்த தேவையின் விளைவாக உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் காவல் துறை சிறப்பாக உள்ள நகரங்களை மக்கள் வசிக்கத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த பதிவில் இந்தியாவில் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் டாப் 10 நகரங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

Top 10 Safest Cities In India 2025 Check Where Chennai Stands

மங்களூர்

2025 ஆம் ஆண்டில், 74.3 மதிப்பெண்ணுடன் இந்தியாவின் பாதுகாப்பான நகரமாக மங்களூர் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகாவின் கடலோர நகரமான மங்களூர், அமைதியான சுற்றுப்புறங்கள், அமைதியான குடியிருப்பாளர்கள் மற்றும் வலுவான காவல் படைக்கு பெயர் பெற்றது. குறைந்த குற்ற விகிதம் மற்றும் அதிக அளவிலான சமூக நம்பிக்கை காரணமாக மங்களூர் அமைதியான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை முறையை வழங்குகிறது.

வதோதரா

குஜராத் மாநிலத்தின் கலாச்சார மையமான வதோதரா, பரோடா என்றும் அழைக்கப்படுகிறது, இந்திய அளவில் 69.3 மதிப்பெண்களுடன் இரண்டாவது பாதுகாப்பான நகரமாக உள்ளது. இந்தியாவின் தொன்மையான கலாச்சாரத்திற்கும், நவீன வளர்ச்சிக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துவதில் இந்த நகரம் சிறப்பாக செயல்படுகிறது. அதன் குறைவான குற்ற விகிதங்கள், போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படும் உள்ளூர் காவல் துறை போன்றவை இதற்கு காரணாமாக உள்ளது.

அகமதாபாத்

இந்தியாவின் பாதுகாப்பான பெருநகரங்களில் 68.5 மதிப்பெண்களுடன் அகமதாபாத் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் முக்கியமான வணிக மையமாக இருந்தபோதிலும், இது ஒப்பீட்டளவில் குறைந்த குற்ற விகிதங்களை பராமரித்து வருகிறது. அதன் விரிவான சிசிடிவி நெட்வொர்க், சமூக காவல் மற்றும் பொது பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதன் காரணமாக இந்த நகரம் மக்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்குகிறது.

சூரத்

"இந்தியாவின் வைர நகரம்" என்று அழைக்கப்படும் சூரத் 66.6 மதிப்பெண்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது. நகரத்தின் சிறந்த பாதுகாப்பிற்கு அதன் நன்னடத்தை மிக்க குடிமக்கள், பயனுள்ள குடிமை கட்டமைப்புகள் மற்றும் தொழில்நுட்பக் காவல் ஆகியவற்றின் விளைவாகும். பெண்கள் இரவில் செல்வதற்கு வசதியாக உணரும் சில நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.

ஜெய்ப்பூர்

"பிங்க் நகரம்" என்றும் அழைக்கப்படும் ஜெய்ப்பூர் 65.3 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. நவீன பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் அதன் கலாச்சாரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் நகரத்தின் சூழல் மற்றும் அதன் வலிமையான காவல் துறை ஆகியவற்றால் குற்றங்கள் கட்டுக்குள் வைக்கப்படுகின்றன.

நவி மும்பை

நவி மும்பை அதன் திறமையான சட்ட அமலாக்கம், நன்கு திட்டமிடப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் தூய்மை காரணமாக 63.5 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. இது மும்பையை விட ஒழுங்காகவும், நெரிசல் குறைவாகவும் உள்ள நகரமாகும், இதன் விளைவாக குற்றங்கள் குறைவாகவே நிகழ்கின்றன. சிசிடிவி கண்காணிப்பு மற்றும் குற்றங்கள் மீது வேகமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அதன் பாதுகாப்பை மேம்படுத்தப்படுகிறது.

திருவனந்தபுரம்

கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரம், அதன் அமைதியான சூழலுக்கும், நல்ல நடத்தை கொண்ட மக்களுக்கும் பெயர் பெற்றது. 61.0 மதிப்பெண்களுடன் இந்த நகரத்தில் பாதுகாப்பு குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வு அதிகமாக உள்ளது, மேலும் கல்வி நிலைகளும் அதிகமாக உள்ளன. பெண்கள் பாதுகாப்பு மற்றும் காவல்துறையின் விரைவான செயல்பாடுகள் மூலம் குற்ற விகிதங்கள் கட்டுக்குள் வைக்கப்படுகின்றன.

சென்னை

சென்னையில் மிகவும் திறமையான காவல் துறை மற்றும் பொறுப்புள்ள குடிமக்கள் உள்ளனர், இது இந்தியாவின் பாதுகாப்பான முக்கிய நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது. 60.0 மதிப்பெண்களுடன் சென்னை நகரம் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை அளிக்கிறது மற்றும் பயனுள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பைக் கொண்டுள்ளது. அமைதியான கலாச்சாரம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறை காரணமாக குடும்பங்கள் மற்றும் வெளிமாநிலத்தவர்கள் இந்த நகரத்தை பாதுகாப்பானதாகக் கருதுகின்றனர்.

புனே

"கிழக்கின் ஆக்ஸ்போர்டு" என்று அழைக்கப்படும் அமைதியான புனே நகரம் மாணவர்களுக்கு உகந்த சூழலை வழங்குகிறது. 58.7 மதிப்பெண்களுடன் நகரத்தின் தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் நன்கு படித்த மக்கள் தொகை ஆகியவை குற்ற விகிதத்தைக் குறைக்கக் காரணமாக உள்ளன. டிஜிட்டல் புகார் அமைப்புகள் மற்றும் வழக்கமான போலீஸ் ரோந்துகள் காரணமாக இது ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

சண்டிகர்

பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகரமும் யூனியன் பிரதேசமான சண்டிகர், அதன் பசுமை, தூய்மை மற்றும் கடுமையான சட்ட அமலாக்கத்திற்கு பெயர் பெற்றது. 57.6 மதிப்பெண்களுடன் நகரத்தின் சிந்தனைமிக்க திட்டமிடல் மற்றும் வலிமையான காவல்துறை பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை உறுதி செய்கிறது. உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உணரும் சில இந்திய நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.

Story first published: Tuesday, October 21, 2025, 13:55 [IST]
Desktop Bottom Promotion