Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
இந்தியாவில் கல்வியறிவு மோசமாக உள்ள டாப் 10 மாநிலங்கள்... முதலிடத்தில் உள்ள மாநிலம் எது தெரியுமா?
Top 10 Most Illiterate States in India: இந்தியா உலகின் வளரும் நாடுகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கடந்த இருபது ஆண்டுகளில் கல்வியறிவில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா அதன் மிகப்பெரிய மக்கள்தொகை, கலாச்சாரம் மற்றும் சாதியரீதியான ஏற்றத்தாழ்வுகள் போன்ற பல சிக்கல்கள் காரணமாக தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டாலும் உறுதியாக முன்னேறி வருகிறது.
ஒரு மாநிலம் வளர்ச்சியடைவதற்கு கல்வியறிவு மிகவும் முக்கியம். இந்தியாவின் சில மாநிலங்கள் கல்வியறிவில் அதிக வளர்ச்சி விகிதத்தை எட்ட முடிந்தாலும், சில மாநிலங்களில் இன்னும் குறைவான கல்வியறிவுடன் போராடி வருகின்றன. இருப்பினும், அத்தகைய மாநிலங்களில் கல்வியை மேம்படுத்த மாநில அரசும், ஒன்றிய அரசும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இந்த பதிவில் கல்வியறிவில் பின்தங்கியுள்ள டாப் 10 இந்திய மாநிலங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

ஆந்திரப் பிரதேசம்
இந்தியாவில் எழுத்தறிவின்மை விகிதத்தைப் பொறுத்தவரை ஆந்திர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. ஆந்திரப் பிரதேசம் அதன் விவசாயம் மற்றும் ஜவுளித் தொழில்கள் மூலம் நாட்டிற்கு தொடர்ந்து பங்களித்து வருகிறது. 2024 ஆம் ஆண்டின் படி, அதன் எழுத்தறிவு விகிதம் 66.4% ஆகும். மேலும், ஆண் மற்றும் பெண் எழுத்தறிவு விகிதங்களில் மிகப்பெரிய வேறுபாடு இருந்தது. ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 73.4% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் வெறும் 59.9% ஆகவும் உள்ளது.
ஜார்க்கண்ட்
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் வெறும் 66.41% மட்டுமே. இங்கு கல்வி பெற போராடும் பல பழங்குடி குழுக்கள் உள்ளன. மேலும், குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமுள்ள மாநிலமாக ஜார்க்கண்ட் உள்ளது. அவர்கள் பெரும்பாலும் கட்டுமான இடங்களில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் கல்வி பயில வேண்டிய காலத்தில் வேலை செய்ய வேண்டியுள்ளது. குழந்தைகள் எளிதாகக் கல்வி பெறுவதை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் இந்தக் காரணங்களில் பணியாற்ற முயற்சித்து வருகிறது.
ராஜஸ்தான்
ராஜஸ்தான் 65.8% எழுத்தறிவுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது, இங்கு ஆண்-பெண் இடையே உள்ள கல்வியறிவு விகிதம் மிகவும் பெரியதாகும். இது நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றாகும், மேலும் 68 மில்லியன் மக்கள்தொகைக்கும் வழங்குவது அரசாங்கத்திற்கு நிச்சயமாக கடினமான பணியாகும். பாலின பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல், பெண்கள் கல்வியில் கவனம் செலுத்துதல் மற்றும் அனைவருக்கும் தரமான கல்வியை வழங்க ராஜஸ்தான் அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
பீகார்
கல்வியில் பின்தங்கிய மாநிலங்களில் பீகார் முக்கிய இடத்தில் உள்ளது, அதன் கல்வியறிவு விகிதம் 70.9% ஆக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் பீகாரின் கல்வியறிவில் சீரான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பள்ளியின் பாடத்திட்டத்தை மேம்படுத்தவும், மாணவர்களுக்கு சிறந்த அறிவை வழங்கவும், பாலின சமத்துவத்தை நோக்கி முயற்சிகளை மேற்கொள்ளவும் அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
தெலுங்கானா
2014 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து தெலுங்கானா இந்தியாவில் ஒரு புதிய மாநிலமாகக் கருதப்படுகிறது. குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்க மாநில அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தெலுங்கானாவின் கல்வியறிவு விகிதம் 72.8% ஆகும், இது புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு மாநிலத்திற்கு மோசமான அளவு இல்லையென்றாலும், அவ்வளவு சிறப்பான விகிதமும் அல்ல. அரசாங்கம் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்க உதவுகிறது மற்றும் பல திட்டங்களையும் உருவாக்கி வருகிறது.
உத்தரப் பிரதேசம்
இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகை மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மக்களுக்கு தரமான மற்றும் சமமான கல்வி கிடைக்கிறதா என்றால் நிச்சயம் இல்லையென்றுதான் கூறவேண்டும். உத்தரப் பிரதேசத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 73.3%. மக்களுக்கு படிக்கவும் எழுதவும் கற்றுக்கொடுப்பதிலும், ஏழை மக்கள் கல்வி பெற உதவுவதிலும் தற்போது குறிப்பிட்ட முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
மேகாலயா
மேகாலயாவின் கல்வியறிவு விகிதம் 74.4% ஆக இருந்தாலும், மாநிலத்தின் சில பகுதிகளில் இன்னும் பின்தங்கியுள்ளது. கல்வியைப் பொறுத்தவரை இந்த மாநிலம் மற்ற மாநிலங்களை விட மிகவும் சிறப்பாக முன்னேறி வருகிறது. இந்த மாநிலம் பெரும்பாலும் தொலைதூரப் பகுதி மற்றும் மலைப்பகுதியில் இருப்பதால், முறையான கட்டிடங்களைக் கட்டுவது அரசாங்கத்திற்கு மிகவும் கடினமாக உள்ளது.
ஒடிசா
72.8% எழுத்தறிவு விகிதத்தை எட்டிய பிறகும் ஒடிசா கல்வியில் பல சிக்கல்களை எதிர்கொள்கிறது. இங்குள்ள பல பழங்குடி சமூகங்கள் கலாச்சார வேறுபாடுகள் காரணமாக பள்ளிகளில் சேர்வது மிகவும் கடினமாக உள்ளது. மாணவர்கள் வேலை செய்வதற்குப் பதிலாக பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் மதிய உணவு போன்ற திட்டங்களைத் தொடங்கியுள்ளது. மேலும், பள்ளிகள் மாணவர்களுக்கு வழங்கும் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கவும் முயற்சித்து வருகிறது.
மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசத்தின் கல்வியறிவு விகிதம் 69.3% ஆக உள்ளது. இந்த மாநிலம் குறைந்த கல்வியறிவு விகிதத்தைக் கொண்டிருப்பதற்குக் காரணம், மோசமான உள்கட்டமைப்பு மற்றும் மாணவர்களுக்கு கல்வி வழங்குவதில் உள்ள மெத்தனம்தான். இருப்பினும், மற்ற மாநிலங்களைப் போலவே, இங்குள்ள பழங்குடியினரும் கலாச்சார வேறுபாட்டின் அதே பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். கல்வித் துறையில் மாநிலத்தின் நிலையை மேம்படுத்த அரசாங்கம் பல கொள்கைகளை வகுத்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசம்
அருணாச்சலப் பிரதேசம் இயற்கை அழகில் மட்டுமல்ல, தனித்துவமான கலாச்சாரத்தையும் கொண்டுள்ளது. இருப்பினும், கல்வியைப் பொறுத்தவரை இந்த மாநிலம் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கிறது. 66.95% கல்வியறிவு விகிதத்தைக் கொண்ட மாநிலம், தரமான கல்வியை வழங்குவதில் இப்போதும் சிக்கல்களை எதிர்கொள்கிறது. இந்த மாநிலம் பல தொலைதூர மற்றும் அணுக முடியாத பகுதிகளைக் கொண்டுள்ளது. போதுமான உள்கட்டமைப்பு, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் மொழித் தடைகள் ஆகியவற்றால் கல்வியில் பின்தங்கியுள்ளது.



Click it and Unblock the Notifications












