Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
வைகாசி பெளர்ணமியில் மறக்காமல் இதை மட்டும் செய்யுங்கள்..
Vaikasi Pournami 2024: தமிழ் மாதங்களில் இரண்டாவதாக வரும் மாதமாக வைகாசி மாதம் இருக்கிறது. சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயரும் மாதமே இந்த வைகாசி மாதம்.
வைகாசி மாதத்தில் வரும் மிக விஷேசமான ஒன்றுதான் வைகாசி பௌர்ணமி தினம். இந்த வைகாசி பவுர்ணமி தினத்தன்று நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

ஒவ்வொரு மாத பௌர்ணமியும் ஒவ்வொரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் தோன்றும். அந்த வகையில் வைகாசி மாதம் வரும் பௌர்ணமி மிக விசேஷமானது. வைகாசி மாதத்தில் வரும் விஷாக நட்சத்திரத்தன்று பௌர்ணமி திதி ஏற்படும். விசாக நட்சத்திரம் குரு பகவானுக்கு உரியது. சூரியன் உதயமாகும் போது இருக்கும் திதியைக் கணக்கிடும் அடிப்படையில் வைகாசி மாத பௌர்ணமி மே 23ம் தேதியான இன்று வியாழக்கிழமை வருகிறது.
பொதுவாக விழானும் குருபகவானுக்கு உரிய நாளாகும்.. எனவவே இந்த வருடம் வரும் இந்த பௌர்ணமி மிகவும் விஷேசமானது. விசாக நட்சத்திரத்தில், வியாழன் அன்று வருவது. இன்று முருகப்பெருமானை வழிபடுவதோடு மட்டுமல்லாமல். வியாழன் அன்று தட்சிணா மூர்த்தி வழிபாடு, குருபகவான் வழிபாடு மற்றும் சிவபெருமான் வழிபாடு செய்வதும் உகந்தது.. மே 22, 2024 மாலை 7:15 மணியிலிருந்து பௌர்ணமி திதி தொடங்கி மே 23 இரவு 8 மணி வரை திதி உள்ளது..
செய்ய வேண்டியவை..
1. இன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, உங்களின் விருப்பத்திற்குரிய தெய்வங்களை வழிபடுவதால் அந்த தெய்வத்தின் பரிபூரண ஆசிகள் உங்களுக்கு கிடைக்கும்.
2. மாலை வேளையில் வானில் தோன்றும் சந்திர பகவானை தரிசித்து வழிபடுவது மிகவும் சிறந்தது.
3. இந்த வைகாசி பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம், சோளிங்கர், பழனி போன்ற மலை சார்ந்த கோயில்களில் இருக்கும் இறைவனை வழிபட்டு கிரிவலம் மேற்கொள்ளலாம்.
4. மற்ற எல்லா தானங்களிலும் விட சிறந்த தானம் அன்னதானம் என்பது நமது முன்னோர்களின் கருத்தாக உள்ளது. எனவே புண்ணியம் மிகுந்த இந்த வைகாசி பவுர்ணமி தினத்தன்று தயிர்சாதம், எலுமிச்சை சாதம், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றை பக்தர்களுக்கு தானமாக வழங்குவது உங்களின் பாவ வினைகளை போக்கி புண்ணியத்தை உண்டாக்கும்.
5. இதனால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் மற்றும் மனம் சார்ந்த நோய்கள், குறைபாடுகள் நீங்கும். பொருளாதார கஷ்ட நிலைகள் நீங்கி செல்வ சேர்க்கை உண்டாகும்.
6. இத்தகைய சக்தி மிகுந்த நாளில், தேவி வழிபாடு தீயசக்தியில் இருந்து நம்மைக் காக்கும்.
செய்யக்கூடாதவை
1. மது அல்லது அசைவ உணவை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்..
2. வெங்காயம், பூண்டு மற்றும் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
3. மற்றவர்கள் தயாரித்த உணவை உட்கொள்வதற்குப் பதிலாக நீங்களே உணவைச் சமைத்து சாப்பிடுங்கள்...
4. பொய், ஏமாற்றுதல் அல்லது சூதாட்டம் போன்ற ஒழுக்கக்கேடான நடத்தைகளில் ஈடு படுவதைத் தவிர்க்க வேண்டும்..
5. இந்த நாள் நேர்மறை மற்றும் ஆன்மீகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பதால், வன்முறை மற்றும் ஒழுக்கக்கேடான வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்..
6. முக்கியமாக இன்று உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு மறுக்காமல் உதவி புரிவது நல்லது..



Click it and Unblock the Notifications