ஆரோக்கியத்தை தரும் தன்வந்திரி பகவான் வழிபாடு!

நோய்களையெல்லாம் தீர்க்கும் தெய்வம்... தன்வந்திரி பகவான். தமிழகத்தில், தன்வந்திரி பகவானுக்கென்று கோயில்கள் அவ்வளவாக இல்லை. ஆனாலும் பிற்காலத்தில், தன்வந்திரிக்கு சில இடங்களில் கோயில்கள் கட்டப்பட்டு, வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

அதேசமயம், தன்வந்திரி பகவானை வீட்டிலிருந்தே வழிபடலாம். நோயாளிகள்தான் வழிபடவேண்டும் என்றில்லை. நோயுற்றவர்களுக்காக எவர் வேண்டுமானாலும் வேண்டிக்கொண்டு, தன்வந்திரியை வழிபடலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

there is no disease will come because of dhanvanthiri lor of medicine here

பொதுவாகவே, திரயோதசி எனப்படும் பிரதோஷ நாள், சிவனாருக்கு உரிய நாள் என்பது போல், நரசிம்மருக்கு உகந்த நாள் என்பது போல, தன்வந்திரி பகவானுக்கும் திரயோதசி ரொம்பவே விசேஷம். குறிப்பாக, தேய்பிறை திரயோதசி, அதாவது அமாவாசைக்கு முன்னதாக வருகிற திரயோதசி ரொம்பவே விசேஷம். தவிர, எந்த நாளிலும் தன்வந்திரியை வணங்கலாம். பூஜிக்கலாம். விரதம் மேற்கொள்ளலாம்.

தன்வந்திரி தேவர்களின் மருத்துவர்

தன்வந்திரி தேவர்களின் மருத்துவராகக் கருதப்படுகிறார். சாகர மதனம் பாகவத புராணம், மகாபாரதம் மற்றும் விஷ்ணு புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாற்கடலைக் கலக்கியதில் இருந்து அமிர்தம் பிறந்தது.. அதை உட்கொண்டதால் தேவர்கள் அழியாமல் போனார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. எனவே, மக்கள் தன்வந்திரியை இந்நாளில் வழிபடுகின்றனர். நல்ல ஆரோக்கியம் மற்றும் உடல் ஒற்றுமைக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

தனத்ரயோதசியின் சூழலில் செல்வம் மற்றும் செழிப்புடன் தொடர்புடையது. லட்சுமி-குபேர் வழிபாட்டிற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் மக்கள் பொருள் செல்வம் மற்றும் செழிப்புக்காக குபேரனுடன் லட்சுமி தேவியை வழிபடுகிறார்கள். உலக செல்வங்களின் பொக்கிஷமாக கருதப்படும் குபேரனை செல்வத்தின் தெய்வமான ஸ்ரீ லட்சுமியுடன் சேர்த்து வழிபடுகின்றனர்.

இந்து புராணங்களின் படி, மருத்துவத்தின் கடவுளாக போற்றப்படுபவர் தன்வந்திரி பகவான். இவர் மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து தெய்வங்களுக்கும் மருத்துவராக கருதப்படுகிறார். மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றாக குறிப்பிடா விட்டாலும் தன்வந்திரி, மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறார். பழங்கால மருத்துவம் என போற்றப்படும் ஆயுர்வேத மருத்துவ முறையை அளித்தவர் இவரே. அதனால் இவரை ஆயுர்வேதத்தின் தந்தை என்றும் குறிப்பிடுகிறார்கள்.

மரணம் இல்லாத நிலையை பெற வேண்டும் என்பதற்காக தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தை எடுப்பதற்காக பாற்கடலை கடைந்தனர். அப்போது ஐப்பசி மாத தேய்பிறையின் 13 வது நாளில் பாற்கடலில் இருந்து வெளிப்பட்டவரே தன்வந்திரி பகவான். இவர் அவதரித்த தினத்தையே தந்தேராஸ் தினமாக வடஇந்தியர்கள் கொண்டாடுகிறார்கள்.

இளமையான, வலிமையான தோற்றம் கொண்டவர் தன்வந்திரி பகவான். அகன்ற மார்பும், கருநீல நிற தோற்றத்தையும் கொண்டவர். வலிமையான கரங்கள், சிவந்த கண்கள், சிங்கத்தை போன்ற நடையும் கொண்டவர். மஞ்சள் நிற ஆடை, எண்ணெயின் அபிஷேகம் செய்யப்பட்ட சுருண்ட முடி, மின்னுள் முத்துக்கள் கொண்ட காதணிகளுடன் காட்சி அளிக்கக் கூடியவர் தன்வந்திரி பகவான். பாற்கடலில் இருந்து தோன்றியவர் என்பதால் கையில் சங்கு, சக்கரம், மூலிகைகள், அமிர்த கலசம் ஆகியவற்றை தனது நான்கு திருக்கரங்களில் ஏந்தியவராக காட்சி அளிக்கிறார் தன்வந்திரி.

தன்வந்திரி மந்திரம்

ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய
வாசுதேவாய தன்வந்திரயே
அமிர்த கலச ஹஸ்தாய சர்வபய வினாசனாய
சர்வ ரோக நிவாரணாய த்ரிலோகாய பதயே
த்ரி லோக்ய நிதயே ஸ்ரீ மகா விஷ்ணு ஸ்வரூபாய
ஸ்ரீ தன்வந்திரி ஸ்வரூபாய ஸ்ரீ ஸ்ரீ ஒளஷதாய
சக்ர நாராயணா நமஹ!!"

மந்திரத்தின் அர்த்தம்

சுதர்சன வாசுதேவ தன்வந்திரி என போற்றப்படும் கடவுளை வணங்குகிறோம். அவர் மரணம் இல்லாத வாழ்வு தரும் அமிர்த கலவசத்தை கையில் ஏந்தியவராக உள்ளார். அவர் அனைத்து நோய்கள், பயங்கள் ஆகியவற்றை அகற்றக் கூடியவர். மூன்று உலகங்களையும் காப்பவர் அவரே. ஆத்மாவை தூய்மையாக்கி, குணப்படுத்தக் கூடியவர் அவரே. ஆயுர்வேதத்தின் கடவுளான அவரை வணங்குவோம்.

தமிழ்கத்தில் தன்வந்திரியின் கோயில் உள்ள இடம் எது?

தமிழகத்தில் வாலாஜாப்பேட்டை, கோவை - ராமநாதபுரம் உள்ளிட்ட பல இடங்களில் தன்வந்திரி பகவானுக்கு தனி கோவில் உள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் ஆலயத்தில் தன்வந்திரி பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சென்று வழிபட்டால் அனைத்து விதமான நோய்களும் நீங்கும். மிக பிரபலமான கோவில்கள் பலவற்றிலும் தன்வந்திரி பகவானுக்கு கோவில் உள்ளது.

Story first published: Saturday, June 29, 2024, 16:49 [IST]
Desktop Bottom Promotion