Latest Updates
-
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...!
தாஜ்மஹால் கட்ட நிலம் கொடுத்தவர் யார்? அதற்கு ஈடாக அவருக்கு என்ன கொடுக்கப்பட்டது தெரியுமா?
இந்தியாவின் மிகவும் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலைகளில் ஒன்று உலக காதலர்களின் சின்னமாக அறியப்படும் தாஜ்மஹால். தாஜ்மஹால் சார்ந்த மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றான தாஜ் மஹோத்சவம் பிப்ரவரி 18 முதல் மார்ச் 2 வரை தாஜ்மஹாலின் கிழக்கு வாயிலுக்கு அருகிலுள்ள ஷில்ப்கிராமில் கொண்டாடப்படுகிறது. 13 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா, இந்தியாவின் வளமான கலைகள், கைவினைப்பொருட்கள், கலாச்சாரங்கள், நடனம், இசை மற்றும் உணவு வகைகளை வெளிப்படுத்தும் ஒரு கோலாகலமான விழாவாக இருக்கிறது.
தாஜ்மஹால் நம் நாட்டின் மிகவும் அழகான வரலாற்று நினைவுச்சின்னம் என்பதை நாம் நன்கு அறிவோம், இது இந்திய-இஸ்லாமிய கட்டிடக்கலையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அடையாளமாக இருக்கிறது. தாஜ் மஹோத்சவக் குழு தாஜ் மஹோத்சவத்தை ஏற்பாடு செய்கிறது.

யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள ஆக்ரா நகரத்தில் தாஜ்மஹால் உள்ளது, ஷாஜகான் தலைநகரை டெல்லிக்கு மாற்றுவதற்கு முன்பு முகலாயப் பேரரசின் ஏகாதிபத்திய நகரமாக ஆக்ரா இருந்தது. ஆக்ராவின் கட்டிடக்கலை உலக புகழ்பெற்றது, இந்தியாவின் மிக அழகான வரலாற்று இடமான தாஜ்மஹாலில் எண்ணற்ற ரகசியங்களும், சர்ச்சைகளும் உள்ளது.
1983 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ தாஜ்மஹாலை உலக பாரம்பரிய தளமாக அறிவித்தபோது, அது இந்த நினைவுச்சின்னத்தை "இந்தியாவில் இஸ்லாமிய கலையின் ரத்தினம் மற்றும் உலக பாரம்பரியத்தின் உலகளவில் போற்றப்படும் தலைசிறந்த படைப்புகளில் ஒன்று" என்று விவரித்தது.
தாஜ்மஹாலின் கட்டுமானம்
முகலாயப் பேரரசர் ஷாஜகான் தனது விருப்பமான ராணி மும்தாஜ் மஹாலை மிகவும் நேசித்தார், இது இந்திய வரலாற்றின் மிகவும் முக்கியமான காதல் கதையாகும். எனவே ஜூன் 17, 1631 அன்று, தனது 14வது குழந்தையின் பிறப்பின் போது மும்தாஜ் இறந்தபோது, ஷாஜகான் துக்கத்தில் மூழ்கினார். அவர் ஒரு வருடம் அவளுருக்காக துக்கம் அனுசரித்தார், மேலும் 1631 ஆம் ஆண்டிலேயே, மும்தாஜ் மஹாலின் கல்லறையை உருவாக்க ஆணையிட்டார். தாஜ்மஹாலின் கட்டுமானம் 1648 இல் நிறைவடைந்தது.
நிலம் வழங்கியவர்
தாஜ்மஹால் கட்டப்பட்ட நிலம் ஆக்ராவின் சுவர் நகரத்தின் தெற்கே இருந்தது. முகலாயப் பேரரசின் அரசவையில் மூத்த தளபதியும் உயர் பதவியில் இருந்த மன்சப்தாரும், அம்பர் இராச்சியத்தின் கச்வாஹா ராஜ்புத் ஆட்சியாளருமான மிர்சா ராஜா ஜெய் சிங் I தான் ஷாஜகானுக்கு நிலத்தை வழங்கினார். அதற்கு ஈடாக, ஆக்ராவின் மையத்தில் ஒரு பெரிய அரண்மனையைப் பெற்றார். அவர் கொடுத்த நிலம், பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கும் கட்டிடக்கலையின் தலைசிறந்த படைப்பைக் கொண்டிருக்கும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.
உலகின் பல்வேறு நாடுகளின் பங்களிப்பு
தாஜ்மஹால் கட்டுமானத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. கல்லறை வளாகத்தை கட்ட செங்கல் மற்றும் சுண்ணாம்பு சாந்து முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டன, மீதமுள்ள இடங்கள் வெள்ளை பளிங்குக் கற்களால் உருவாக்கப்பட்டது. குறிப்பாக, ராஜஸ்தானின் மக்ரானாவில் இருந்து வெள்ளை பளிங்கு வந்தது, அதே நேரத்தில் சிவப்பு மணற்கல் உத்தரபிரதேசத்தின் ஃபதேபூர் சிக்ரியிலிருந்து வந்தது.
உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல விலைமதிப்பற்ற கற்கள் இறக்குமதி செய்யப்பட்டன, சீனா ஜேட் மற்றும் படிகத்தையும், திபெத் டர்க்கைஸையும், ஆப்கானிஸ்தான் லாபிஸ் லாசுலியையும், இலங்கை சபையரையும், அரேபியா கார்னிலியனையும் பங்களித்தன. ஒட்டுமொத்தமாக, 28 வகையான விலைமதிப்பற்ற மற்றும் விலையுயர்ந்த கற்கள் வெள்ளை பளிங்கில் பதிக்கப்பட்டன.
கலைஞர்களின் பங்களிப்பு
20,000 க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஓவியர்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தனர். புகாராவிலிருந்து சிறப்பு சிற்பிகள், கையெழுத்துப் பிரதிகள் பெர்சியா மற்றும் சிரியாவிலிருந்து வந்தன, பலுசிஸ்தானிலிருந்து கல் வெட்டும் கலைஞர்கள், தென்னிந்தியாவிலிருந்து வடிவமைப்பாளர்கள் மற்றும் இத்தாலியிலிருந்து கைவினைஞர்கள் கட்டுமானத்திற்காக வந்தனர். ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலையின் உச்சத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த நினைவுச்சின்னம், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் பங்களிப்பை உள்ளடக்கி உருவாக்கப்பட்டு கம்பீரமாக நிற்கிறது.



Click it and Unblock the Notifications












