Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
30 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் நிகழும் சனி சூரிய சுக்கிர சேர்க்கை: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Sun Saturn Venus Conjunction In Aquarius After 30 Years: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் கிரகங்களின் இயக்கங்களினால் சில சமயங்களில் ஒருசில கிரகங்களின் சேர்க்கைகள் பல ஆண்டுகளுக்கு பின் நிகழும். அவ்வாறு நிகழும் கிரக சேர்க்கைகள் அனைத்து ராசிகளிலுமே ஒரு சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கும்ப ராசியில் ஒரு அரிய சேர்க்கை சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது.
அதாவது கும்ப ராசியில் ஏற்கனவே சனி பகவான் பயணித்து வருகிறார். அதேப் போல் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் தான் சுக்கிரனும் கும்ப ராசியில் நுழைந்தார். இந்நிலையில் மார்ச் 15 ஆம் தேதி சூரியன் கும்ப ராசியில் நுழையவுள்ளார். இதனால் கும்ப ராசியில் சனி, சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகிய 3 கிரகங்களும் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர். இந்த 3 கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

இம்மாதிரியான திரிகிரக யோகமானது 30 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளதால், இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிதி நிலையிலும், தொழில் வாழ்க்கையிலும் முன்னேற்றத்தைக் காணவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி, சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் ரீதியாக பல நல்ல செய்திகளைப் பெறக்கூடும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். செல்வம் பெருகும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி சூரியன் மற்றும் சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகம் தொடர்பாக பல நல்ல செய்திகளைப் பெறுவார்கள். வியாபாரிகளின் திட்டங்கள் நல்ல வெற்றியைப் பெறும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் ஆதரவு கிடைக்கும். முக்கியமாக தந்தை இக்காலத்தில் மிகவும் ஆதரவாக இருப்பார்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி சூரிய மற்றும் சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். செய்யும் காரியங்கள் மற்றும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண முதலீடு தொடர்பான திட்டங்கள் வெற்றி பெறும். சிலர் இக்காலத்தில் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











