Latest Updates
-
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
400 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சனி ரவி புஷ்ய யோகம்: இந்த 5 ராசிகளுக்கு நல்ல நிதி பலன்கள் கிடைக்கும்...
Shani Ravi Pushya Yoga After 400 Years: 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். அதுவும் நவம்பர் மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த நவம்பர் மாதத்தில் பல கிரகங்களின் ராசி மாற்றங்கள் நிகழ்வதால், இந்த மாதமானது பல ராசிக்காரர்களின் வாழ்க்கையையே முழுமையாக மாற்றக்கூடியதாக இருக்கவுள்ளது.
அதோடு தீபாவளிக்கு முன் சுக்கிர பெயர்ச்சி நிகழ்கிறது. அதைத் தொடர்ந்து மறுநாளே சனி வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார். இது தவிர தீபாவளிக்கு முன் ஒரு இரண்டு நாட்கள் மிகவும் மங்களகரமான நாட்களாக, பலருக்கு செல்வத்தை வாரி வழங்கக்கூடிய நாட்களாக இருக்கவுள்ளது.

ஏனெனில் இந்த இரண்டு நாட்களும் ரவி புஷ்ய யோகமும், சனி புஷ்ய யோகமும் உருவாகவுள்ளது. அதுவும் நவம்பர் 4 ஆம் தேதி சனிக்கிழமை சனி புஷ்ய யோகமும், நவம்பர் 5 ஆம் தேதி ரவி புஷ்ய யோகமும் உருவாகவுள்ளது.
400 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் யோகம்
ஜோதிடத்தின் படி, சுமார் 400 ஆண்டுகளுக்கு பிறகு புஷ்ய நட்சத்திரத்தில் சனியும், சூரியனும் பயணித்து அபூர்வ யோகத்தை உருவாக்குகிறார்கள். தீபாவளிக்கு முன் வரும் இந்த யோக காலத்தில் ஆடை, ஆபரணங்கள் போன்றவற்றை வாங்கினால், அது வீட்டில் பெருகும் என்று கூறுப்படுகிறது.
மேலும் சனி, சூரியனால் உருவாகும் இந்த யோகங்களால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. சொல்லப்போனால் சில ராசிக்காரர்களைத் தேடி பணம் வரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
நவம்பர் 4-ல் புஷ்ய யோகம்
புஷ்ய நட்சத்திரமானது நவம்பர் 04 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த யோகம் நவம்பர் 05 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை நீடித்திருக்கும். இந்த காலகட்டத்தில் சூரியன் மற்றும் சனி புஷ்ய யோகம் உருவாகிறது.
அத்துடன் சனி பகவான் சச ராஜயோகத்தையும், குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகமும், இது தவிர சங்க, லட்சுமி, ஷர்ஷ் சரல், மித்ரா போன்ற யோகங்களும் கூடுவதால், இந்நாள் மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது.
அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
ஜோதிடத்தின் படி, தீபாவளிக்கு முன் இந்த அரிய யோகம் உருவாகியிருப்பதால், 5 ராசிக்காரர்கள் மிகவும் அற்புதமான பலன்களைப் பெறவுள்ளார்கள். குறிப்பாக மேஷம், மிதுனம், கடகம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் சனி, குரு மற்றும் லட்சுமி தேவியின் பரிபூர்ண ஆசியைப் பெறவுள்ளார்கள். இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். அதோடு நல்ல பண வரவும் கிடைப்பதோடு, நீண்ட நாட்களாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications