Latest Updates
-
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...!
பாகிஸ்தானையே நடுங்க வைத்த நிழல் உலக தாதா ரெஹ்மான் டகைட்: 'துரந்தர்' திரைப்படத்தில் வருவது உண்மையா?
சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான 'துரந்தர்' திரைப்படம் இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்பை த்ரில்லர் பல நிஜ வாழ்க்கை கேரக்டர்களை நினைவுபடுத்துகிறது. இந்த திரைப்படத்தில் பயமுறுத்தும் ரெஹ்மான் பலோச்சாக அக்ஷய் கண்ணா நடித்துள்ளது பரவலான பாராட்டைப் பெற்று வருகிறது.
திரைப்படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் அவர் நடித்த நிஜ வாழ்க்கை கதாபாத்திரம் அவர்கள் திரையில் காட்டியதை விட மிகவும் பயமுறுத்துவதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர். ரன்வீர் சிங் படத்தின் ஹீரோவாக இருந்தாலும், அக்ஷய் கன்னாவின் நடிப்புதான் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது மற்றும் ஒரு காலத்தில் லியாரியை ஆதிக்கம் செலுத்திய கராச்சி சட்டவிரோத கும்பலைப் பற்றிய ஆர்வத்தை மக்களிடையே தூண்டியுள்ளது.

2000-களின் பிற்பகுதியில் கராச்சியின் பரபரப்பான நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள 'துரந்தர்', பாகிஸ்தானில் இந்தியாவின் ரகசிய நடவடிக்கைகளைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. ரெஹ்மான் டகைட் என அறிமுகப்படுத்தப்படும் அக்ஷய் கன்னாவின் கதாபாத்திரம், லியாரியின் குற்றவியல் அமைப்பின் மையத்தில் நிகழ்கிறது, இந்த கதாபாத்திரம் பாகிஸ்தானின் மிகவும் பிரபலமான அண்டர்வேர்ல்ட் தாதாக்களில் ஒருவராவார்.
லியாரியைச் சேர்ந்த ஆபத்தான டான்
ரெஹ்மான் டகைட் என்று பரவலாக அறியப்படும் சர்தார் அப்துல் ரெஹ்மான் பலோச், லியாரியின் ஆபத்தான மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பாதைகளில் இருந்து தாதாவாக மாறினார். 1975 ஆம் ஆண்டு குற்றவியல் பின்னணி கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்த அவர், ஒரு சிறுவனாக போதைப்பொருள் வர்த்தகத்தில் நுழைந்தார், அவர் தனது இளம் பருவத்திலேயே ஒருவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. அவர் ஒரு மிகப்பெரிய தாதாவாக ஆரம்பப்புள்ளியாக இருந்தது இந்த சம்பவம்தான்.
முதல் சம்பவம்
ரெஹ்மான் தனது 19 வயதில் தனது மிகவும் அதிர்ச்சியூட்டும் செயல்களில் ஒன்றைச் செய்தார், அவர் தனது தாயை கழுத்தை நெரித்து, சீலிங் ஃபேனில் தொங்கவிட்டார். 'துரந்தர்' இந்த சம்பவத்தை காட்சிப்படுத்தியுள்ளது. ரெஹ்மான் பின்னர் 1990-களின் பிற்பகுதியில் ஹாஜி லாலு தலைமையிலான கும்பலில் சேர்ந்தார், மேலும் 2001 இல் லாலு கைது செய்யப்பட்ட பிறகு அந்த கேங்கின் தலைவராக மாறினார்.
'துரந்தர்' திரைப்படத்தில் டேனிஷ் பாண்டோர் நடித்த உசைர் பலோச் தனது இரண்டாவது தளபதியாகவும், பாபா லாட்லாவை ஒரு முக்கிய அமலாக்க அதிகாரியாகவும் கொண்டு, ரெஹ்மான் லியாரியை மிரட்டி பணம் பறித்தல், கடத்தல், ஒப்பந்தக் கொலைகள் மற்றும் அரசியல் செல்வாக்கு போன்றவற்றின் மூலம் அந்த பகுதியின் ராஜாவாக மாறினார். அவரது கூட்டாளிகளான பாபா லாட்லாவும் உசைரும் ரெஹ்மானின் அறிவுறுத்தலின் பேரில் போட்டி கும்பல் உறுப்பினர்களின் தலைகள் துண்டிக்கப்பட்ட தலைகளுடன் "கால்பந்து விளையாடுவார்கள் என்று கூறப்படுகிறது.
கேங் வார்
ரெஹ்மானால் கராச்சியில் கேங் வாரும், அதிகாரப் போட்டியும் தீவிரமடைந்தது. அவரது முக்கிய எதிரி போதைப்பொருள் அதிபர் ஹாஜி லாலுவின் மகன் அர்ஷத் பப்பு. அவர்களின் மோதல்கள் லியாரியை பல வருடமாக கேங்வாரில் மூழ்கடித்தன, நெரிசலான பகுதிகளை மோதல் மண்டலங்களாக மாற்றி, குடியிருப்பாளர்கள் இரண்டு கும்பல்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டனர்.
சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் கூட ரஹ்மானின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 2005 ஆம் ஆண்டு மூத்த அதிகாரி சுல்பிகர் மிர்சாவால் கைது செய்யப்பட்ட பிறகு, அவர் காவலில் இருந்து தப்பித்து, மீண்டும் பலத்துடன் லியாரிக்குத் திரும்பினார், கராச்சியின் பாதாள உலகில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தினார்.
2009 என்கவுண்டரில் கொல்லப்பட்டார்
ரஹ்மான் டகைட்டின் குற்றவியல் வாழ்க்கை ஆகஸ்ட் 2009 இல் கராச்சி காவல்துறை லியாரி கும்பல்களை குறிவைத்து நடத்திய நடவடிக்கையின் போது அவரை சுட்டுக் கொன்றபோது முடிவுக்கு வந்தது. அப்போது அவருக்கு வயது 34 மட்டுமே. அவரது மரணத்திற்குப் பிறகு அவரது உறவினர் உசைர் பலோச் அந்த குழுவுக்கு தலைமை தாங்கினார். ரெஹ்மான் மறைந்த பின்னரும் குற்ற சம்பவங்கள் தொடர்ந்தது.
என்கவுண்டருக்குப் பிறகும் சர்ச்சை நீடித்தது. துப்பாக்கிச் சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக போலீசார் கூறிய போதிலும், அவரது வளர்ந்து வரும் செல்வாக்கைத் தடுக்க இந்த என்கவுண்டர் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்று மற்ற குழுக்கள் தெரிவித்தன.



Click it and Unblock the Notifications












