Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
பாகிஸ்தான் ராணுவத்தில் மேஜராக இருந்த இந்திய உளவாளி 'பிளாக் டைகர்' எப்படி பாகிஸ்தானில் சிக்கினார் தெரியுமா?
ஒவ்வொரு நாட்டையும் பாதுகாப்பதில் காவல்துறை, இராணுவம் மட்டுமின்றி அந்நாட்டின் உளவுத்துறையும் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஒரு நாட்டின் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை வெளியுலகத்திற்கே தெரியாமல் அடையாளம் காண்பது மற்றும் அழிப்பது போன்றவற்றை செய்வதுதான் உளவுத்துறையின் வேலை. துரதிர்ஷ்டவசமாக அவர்களின் சேவைகளும், தியாகங்களும் அங்கீகரிக்கப்படாமேலே போகிறது.
உளவுத்துறை அதிகாரிகளின் பல சாகசங்களை நாம் திரைப்படத்தில் பார்த்து ரசித்திருப்போம். ஆனால் நிஜ வாழ்க்கையிலேயே அதுபோன்ற சாகசங்களில் ஈடுபடும் உளவுத்துறை அதிகாரிகளை பற்றி நாம் கேள்விக்கூடபட்டிருக்க மாட்டோம்.

இந்தியாவின் உயர்மட்ட உளவுத்துறை அமைப்புகளின் இந்த பெயர் தெரியாத ஹீரோக்கள், எதிரி நாடுகளில் நம் குடிமக்கள் எதிரிகளின் தீயதிட்டங்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக, தங்கள் அடையாளங்களையும், வாழ்க்கையையும் தியாகம் செய்கிறார்கள். அவர்களில் பலர் நாட்டை காப்பாற்றுவதற்காக தங்கள் உயிரைக் கூட இழக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு இந்தியாவின் சூப்பர் ஹீரோ பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்திய உளவுத்துறை
இந்திய இராணுவம் மற்றும் பிற ஆயுதப் படைகளைப் போலல்லாமல், உளவுத்துறையில் உள்ளவர்களின் செயல்கள் மற்றும் சாதனைகள் மிகவும் அரிதாகவே கௌரவிக்கப்படுகிறது, ஏனெனில் அவர்களின் ரகசிய நடவடிக்கைகள் அரசால் பகிரங்கப்படுத்தப்படுவதில்லை. இந்தியாவின் முதன்மையான உளவு அமைப்பான Research and Analysis Wing(RAW) -ன் உளவாளியான 'Black Tiger' ரவீந்திர கௌசிக், பாகிஸ்தான் இராணுவத்திற்குள் ஊடுருவி, பல ஆண்டுகளாக இந்தியாவிற்கு பாகிஸ்தான் பற்றிய ரகசியங்களை அனுப்பினார், ஆனால் அவரது ரகசிய அடையாளம் ஏஜென்சியாலேயே தவறாக வெளியிடப்பட்டது, இதனால் அவர் எதிரிகளிடம் மாட்டி தூக்கிலிடப்பட்டார்.
'கருப்பு புலி' ரவீந்திர கௌசிக் யார்?
ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீ கங்காநகரைப் பூர்வீகமாகக் கொண்ட ரவீந்திர கௌசிக், இளம் வயதிலேயே RAW உளவு அமைப்பில் சேர்ந்து, அங்கு தனது விதிவிலக்கான உளவுத் திறன்களுக்காக விரைவில் 'கருப்பு புலி' என்ற புனைப்பெயரைப் பெற்றார்.
70-களின் நடுப்பகுதியில், இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உளவு நடவடிக்கைகள் ஆரம்ப கட்டத்தில் இருந்தபோது, RAW அமைப்பு பாகிஸ்தானில் அதன் கண்களாகவும் காதுகளாகவும் மாறக்கூடிய திறமையான ஆட்களைத் தேடியது, எனவே அந்த ஏஜென்சி ரகசிய ஆடிஷன்களை நடத்தியது, இறுதியில் ரவீந்திர கௌசிக் உட்பட சில விதிவிலக்கானதிறமையுள்ள இளைஞர்களையும் பெண்களையும் பணியமர்த்தியது. அவர்கள் பாகிஸ்தான் இராணுவம் உட்பட முக்கியமான பல பாகிஸ்தான் அமைப்புகளுக்குள் ஊடுருவ பயிற்சி அளித்து அனுப்பப்பட்டார்கள்.
'கருப்பு புலி' ரவீந்திர கௌசிக் பாகிஸ்தான் இராணுவத்திற்குள் நுழைந்தார்?
சிறுவயதிலிருந்தே, ரவீந்திர கௌசிக் இயல்பாகவே நடிப்பில் சிறந்தவராக இருந்தார், இது ஒரு RAW ஏஜெண்டாக அவருக்கு ஒரு பெரிய சொத்தாக இருந்தது. இஸ்லாமிய இறையியல் மற்றும் மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் பாடங்களைக் கற்றுக்கொள்வது உட்பட அவர் பாகிஸ்தானுக்குள் நுழைவதற்கு பல மாதங்களுக்கு முன்பே அந்த இளம் உளவாளி பல மாதங்களாகத் தயார்படுத்தப்பட்டார்.
பாகிஸ்தானுக்குள் நுழைதல்
கௌஷிக்கிற்கு நபி அகமது ஷகிர் என்ற புதிய பெயர் வழங்கப்பட்டது, மேலும் பாகிஸ்தானுக்குள் நுழைவதற்கு முன் முன்பு அவரது முழு அடையாளமும், இந்தியாவில் அவரது வாழ்க்கை வரலாறும் அழிக்கப்பட்டன. ரவீந்திரன் ஒரு திறமையான நடிகர் மற்றும் கல்லூரியில் மேடை நாடகங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், மேலும் இந்த திறன் அவர் தனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாத்திரத்தில் நடிக்கத் தொடங்கியபோது அவருக்கு உதவி செய்தது, இது அவரை இந்திய உளவுத்துறை வரலாற்றில் ஒரு லெஜண்ட்டாக மாற்றியது.
பாகிஸ்தானில் குடும்பம்
பாகிஸ்தானுக்குள் நுழைந்த பிறகு, ரவீந்திர கௌஷிக் கராச்சி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார், அங்கு அவர் தனது அடையாளத்தை உறுதி செய்யும் வகையில் பட்டம் பெற்றார். அதன்பின், அவர் பாகிஸ்தான் இராணுவத்திரகுள் சேர்ந்தார், அங்கு அவர் தனது சக ஊழியர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெற்றார். பாகிஸ்தான் இராணுவத்தில் அவர் தொடர்ந்து பதவி உயர்வுகளைப் பெற்றார், மேலும் அவர் ஒரு பாகிஸ்தான் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையைப் பெற்றார். குடும்ப உறவுகளில் இணைந்திருந்தாலும் அவர் தனது தாய்நாட்டுக்கு விசுவாசமாக இருந்தார். தொடர்ந்து பாகிஸ்தான் திட்டங்களைப் பற்றிய தகவல்களை இந்தியாவிற்கு வழங்கி வந்தார்.
எப்படி பிடிபட்டார்?
பல ஆண்டுகளாக, ரவீந்திர கௌசிக் இந்தியாவிற்கு தகவல்களை அனுப்பிக்கொண்டே இருந்தார், ஆனால் 1983-ல், சிறிது காலமாக அவரிடமிருந்து எந்த தகவலும் கிடைக்காததால், அவர் துரோகியாக மாறியிருக்கலாம் என்று RAW சந்தேகித்தது. கௌசிக்கின் நிலையை உறுதிப்படுத்த, RAW மற்றொரு ஏஜென்டை பாகிஸ்தானுக்கு அனுப்பி, ரவீந்திரனைத் தொடர்பு கொள்ள அனுப்பியது.
அந்த அனுபவம் இல்லாத ஏஜெண்ட், பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்பால் பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டதால் அவர் பாகிஸ்தானுக்குள் நுழைந்த காரணம் வெளிப்பட்டது, இதனால் 'கருப்பு புலியின்' அடையாளம் வெளிப்பட்டது, இது அவருக்கு ரவீந்திரனுக்கு பேரழிவை ஏற்படுத்தியது. அந்த ஏஜெண்டின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, ரவீந்திர கௌசிக் பாகிஸ்தான் படைகளால் பிடிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, இறுதியில் தூக்கிலிடப்பட்டார்.



Click it and Unblock the Notifications












