Just In
- 22 min ago வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- 47 min ago இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
- 3 hrs ago 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- 4 hrs ago உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
Don't Miss
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்த ராசிக்காரங்க கோபத்தால அவங்க அழிவை அவங்களே தேடிக்குவாங்க... பார்த்து பழகுங்க இவங்ககிட்ட...!
கோபம் அனைவருக்குமான உணர்வாக இருந்தாலும் சிலர் அதுவே தங்களின் முதன்மையான குணம் என்றும் தங்களின் ஆளுமை என்றும் நினைப்பார்கள்.
மனிதராக பிறந்த அனைவருக்குமே கோபம் என்பது பொதுவான உணர்வாகும். தேவைப்படும் இடத்தில் நியாயமான கோபத்தை அவசியம் வெளிப்படுத்த வேண்டும். நம்முடைய நியாயமான உணர்வுகளை வெளிப்படுத்த கோபம் சரியான உணர்வாகும். ஆனால் தேவையற்ற இடங்களில் நாம் வெளிப்படுத்தும் முறையற்ற கோபம் நம்முடைய அழிவிற்கு வழிவகுக்கும். கோபத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும்.
கோபம் அனைவருக்குமான உணர்வாக இருந்தாலும் சிலர் அதுவே தங்களின் முதன்மையான குணம் என்றும் தங்களின் ஆளுமை என்றும் நினைப்பார்கள். இதனால் அவர்களின் அழிவை அவர்களே தேடிக்கொள்வார்கள். இதற்கு காரணம் அவர்கள் பிறந்த ராசியாகவும் இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் கோபத்தால் அழிவை தேடிக்கொள்வார்கள் என்று பார்க்கலாம்.
மேஷம்
இவர்கள் பேசுவதை விட செய்து காட்டுவதில் ஆர்வம் உடையவர்கள். சிறப்பான நாட்களில் இவர்கள் ஆற்றலும், உற்சாகமும் நிறைந்து காணப்படுவார்கள். ஆனால் ஏதேனும் இவர்களை கோபமூட்டினால் இவர்களின் செயல்பாடுகள் முற்றிலும் வேறானதாக இருக்கும். கோபத்தில் இருக்கும்போது இவர்கள் மற்றவர்கள் மனது கஷ்டப்படுவதை பற்றி துளியும் யோசிக்காமல் பேசுவார்கள். தங்களின் கோபத்தால் இவர்கள் தங்களையே காயப்படுத்திக் கொள்வார்கள். இவர்களின் கோபம் நீண்ட காலம் நீடிக்காது, ஆனால் அந்த குறுகிய காலத்தில் இவர்கள் பேரழிவை ஏற்படுத்துவார்கள். இவர்களின் கோபம் மற்றவர்களை பயமுறுத்துவதாகவும் இருக்கும்.
விருச்சிகம்
தேள் அதன் கோபத்திற்கும், வஞ்சத்திற்கும் நன்கு அறியப்பட்டது. பொதுவாகவே இவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடிய, அர்ப்பணிப்புள்ள, மர்மங்கள் நிறைந்தவர்கள். இந்த குணங்கள் இவர்களுக்கு நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் இவை அனைத்தையும் இவர்களின் கோபம் சிதைத்துவிடும். இவர்கள் தங்களின் கோபத்தை மறைக்கும் ஆற்றல் கொண்டவர்கள், தங்களின் கோபத்தை வெளிப்படுத்த சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். யாராவது இவர்களை துன்புறுத்தினால் உடனடியாக அதனை வெளிப்படுத்தமாட்டார்கள், ஆனால் சரியான நேரத்தில் அதனை வெளிப்படுத்தும்போது அது நாசத்தை உண்டாக்கும். இவர்களை பற்றி அறிந்தவர்கள் இவர்களிடம் பழகவே அஞ்சுவார்கள்.
MOST READ: லாக்கப் கொலை முதல் போதைமருந்து கடத்தல் வரை செய்யும் உலகின் மிகமோசமான காவல்துறை இருக்கும் நாடுகள்...
ரிஷபம்
உங்களின் கோபம் அனைவரையும் ஆச்சரியப்படுத்துவதாக இருக்கும். ஏனெனில் எப்போதும் இவர்கள் நிதானமாகவும், பொறுமையாகவும் நடந்து கொள்வார்கள். ஆனால் இவர்களின் பொறுமை சோதிக்கப்படும்போது இவர்களின் மறுமுகம் வெளிப்படும். இவர்களின் கோபம் வெளிப்படும் போது அது கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி இவர்களின் கோபம் உடனடியாக சரியாகக் கூடியதல்ல. இவர்களின் கோபம் நாட்கள், மாதங்கள் ஏன் வருடங்கள் வரை கூட நீடிக்கும். அவர்கள் எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும் சரி கோபம் இவர்களை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும்.
சிம்மம்
ராசியிலேயே சிங்கத்தை அடையாளமாக கொண்ட இவர்கள் அவர்களின் கோபத்தால் அனைவராலும் அறியப்பட்டவர்களாக இருப்பார்கள். கோபத்தை வெளிப்படுத்த இவர்கள் தாமதிக்கவோ, யோசிக்கவோ மாட்டார்கள். இவர்களை தூண்டுவது மிகவும் எளிதானது, இவர்களுக்கு சவால் விட்டாலே போதும் இவர்களின் கோபம் வெளிப்படும். தங்களின் திறனை நிரூபிக்க இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். இவர்களை பற்றி தெரிந்த யாரும் இவர்களிடம் சவால் விடமாட்டார்கள்.
தனுசு
இவர்கள் வெடிகுண்டை போன்றவர்கள். கோபத்தில் இவர்கள் வெடிக்கும்போது அது நாசத்தை ஏற்படுத்தும். பொதுவாக இவர்கள் அமைதியானவர்களாகவே இருப்பார்கள், ஆனால் இவர்கள் வெடிக்கும்போது அது அனைவராலும் மறக்க முடியாததாக இருக்கும். கோபத்தில் இருக்கும்போது இவர்கள் மோசமான வார்த்தைகளை உபயோகிப்பார்கள், உடல்ரீதியான தாக்குதலை கூட நிகழ்த்துவார்கள். கோபத்தில் இவர்கள் ஏற்படுத்தும் அழிவுகளை இவர்களால் சரி செய்யவும் முடியாது.
MOST READ: ஜூலை மாசம் கிரக மாற்றத்தால இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் அடிக்கபோகுதாம்... உங்க ராசி என்ன?
மீனம்
இதனை நம்புவது மிகவும் கடினம்தான், ஏனெனில் மீன ராசிக்காரர்கள் அமைதியானவர்கள் என்று அனைவரும் நினைப்பார்கள். ஆனால் இவர்களும் கோபத்தால் அழிவை ஏற்படுத்தக் கூடியவர்கள்தான்.இவர்களின் கோபம் உச்சக்கட்டத்தை அடைய ஒரு நொடி போதும். அந்த ஒரு நொடியில் இவர்கள் வித்தியாசமாக நடந்து கொள்வார்கள். தங்களை தேடிவரும் பல வாய்ப்புகளை இவர்களின் ஒரு நொடி கோபம் கெடுத்துவிடும்.