Just In
- 1 hr ago இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- 8 hrs ago கும்ப ராசியில் உதயமாகும் சனி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது..
- 11 hrs ago உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கா? மறந்தும் இந்த சப்ளிமென்டுகளை எடுக்காதீங்க.. அப்புறம் கஷ்டப்படுவீங்க..
- 12 hrs ago உங்க மூக்கு மேல கருப்பா சொரசொரன்னு இருக்கா? அப்ப தினமும் நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க...
Don't Miss
- News ஆட்டத்தை கலைத்த பாஜக.. பெரிய கூட்டணி இல்லாமல் களம் இறங்கும் அதிமுக.. வேட்பாளர்கள் பட்டியல் எப்போது?
- Finance 20000 ரூபாய்க்கு கீழ் பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் - பட்ஜெட் ஷாப்பிங்
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Movies விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டரில் நடிக்க மறுத்த நடிகர்கள்.. என்ன காரணம் தெரியுமா?
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் எவ்வளவு மோசமான சூழ்நிலையிலும் நல்ல வாழ்க்கைத்துணையாக இருப்பார்களாம்...
கணவன்-மனைவி உறவை பொறுத்தவரை விட்டுக்கொடுப்பதும், விட்டுவிடாமல் இருப்பதும் அவசியமாகும். அனைவருக்கும் இப்படியான திருமண உறவு அமைகிறதா என்றால் அதற்கான பதில் நிச்சயம் இல்லை என்பதுதான்.
திருமண உறவு என்பது ஆண், பெண் புரிதலை அடிப்படையாகக் கொண்டது. எந்தவொரு உறவும் நிலையாக இருக்க அங்கு இருவருக்குள்ளும் அன்பு, புரிதல், நம்பிக்கை, ஒருவரையொருவர் மதிப்பது போன்ற குணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். குறிப்பாக கணவன்-மனைவி உறவை பொறுத்தவரை விட்டுக்கொடுப்பதும், விட்டுவிடாமல் இருப்பதும் அவசியமாகும்.
அனைவருக்கும் இப்படியான திருமண உறவு அமைகிறதா என்றால் அதற்கான பதில் நிச்சயம் இல்லை என்பதுதான். தனிமனித விமர்சனம் என்பது பெரும்பாலும் அனைவரையும் காயப்படுத்தும் ஒன்றாகும். அதிலும் தங்களின் வாழ்க்கைத்துணையே தொடர்ந்து தன் மீது விமர்சனம் வைக்கும்போது அது ஒருவரை வெகுவாக பாதிக்கும். ஆனால் சிலர் இதனை எதிர்கொள்வதுடன் சிறந்த வாழ்க்கைத்துணையாகவும் இருப்பார்கள். இதற்கு அவர்களின் பிறந்த ராசியும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த குணங்கள் இருக்குமென்று பார்க்கலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் அடிப்படையிலேயே இரக்க குணமும், உதவி செய்யும் குணமும் கொண்டவர்கள். தங்கள் துணை தன் மீது வைக்கும் விமர்சனத்தைக் கூட நேர்மறையாக எடுத்துக் கொள்வார்கள். இவர்கள் தங்கள் துணையின் விமர்சனக் குரலை அவர்களிடம் கருணை மற்றும் இரக்கத்தைக் காட்டுவதன் மூலம் சமப்படுத்த முனைவார்கள். தங்கள் துணை மேலாதிக்க நிலையில் இருங்க விரும்பினால் அதற்காக தங்களின் உணர்வுகளை விட்டுக்கொடுக்க தயங்கமாட்டார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தங்களுக்குள் பல உயர்ந்த குணங்கள் உள்ளதை நன்கு அறிவார்கள், ஆனால் எப்போதும் தங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள விரும்புவார்கள். அவர்கள் பெரும்பாலும் சீராக இருப்பது, கவனம் செலுத்துவது மற்றும் முடிவுகளை எடுப்பதில் சிரமங்களைக் கொண்டுள்ளனர். தங்களின் சிறந்த நலன்களைக் கொண்ட ஒரு துணையைக் கொண்டிருப்பது அவர்களுக்கு நல்லது என்று அவர்கள் நம்புகிறார்கள். தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை விமர்சனமாக கூறும் துணை இருப்பதை இவர்கள் விரும்புகிறார்கள். அதேசமயம் தங்கள் துணையின் விமர்சனங்கள் நியாயமற்றதாக இருந்தால் அந்த உறவில் இருந்து வெளியேற அதையே காரணமாக பயன்படுத்திக் கொள்வார்கள்.
MOST READ: இரண்டே ஆண்டுகளில் 5 கோடி பேரை கொன்ற கொடூர வைரஸ்... மனித வரலாற்றின் மிகவும் ஆபத்தான வைரஸ்கள்...
கடகம்
கடக ராசிக்காரர்கள் விமர்சனம் செய்பவர்களுடன் உறவில் இருந்தால், அவர்களின் துணை ஆரம்பகாலத்தில் அவ்வாறு இருக்கமாட்டார்கள், ஆனால் நாட்கள் செல்ல செல்ல இது அதிகரிக்கத் தொடங்கும். ஆனால் எவ்வளவு விமர்சனங்கள் செய்தாலும், கடினமான உறவாக இருந்தாலும் இவர்கள் அந்த உறவை விட்டு வெளியேற மாட்டார்கள். அவர்கள் தங்கள் துணையின் விமர்சனத்தை ஆழமாக கவனிப்பார்கள், அவர்கள் உண்மையில் என்ன சொல்ல முயலுகிறார்கள் என்பதை அறிய முயற்சிப்பார்கள். தங்கள் துணையின் விமர்சனத்தால் கோபப்படாமல் அவர்கள் எந்த சூழ்நிலையில் அவ்வாறு பேசினார்கள் என்று புரிந்து கொண்டு நிலையை சுமூகமாக்குவார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் தங்களை தாங்களே விமர்சித்துக் கொள்வார்கள், தங்களின் துணையும் விமர்சனம் செய்பவர்களாக இருக்கும்போது இவர்கள் ஏற்கனவே நம்பியதை அது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. மற்றவர்களின் பார்வையில் அவர்களால் விஷயங்களைக் காண முடிகிறது, அது வேறொருவரின் மதிப்பீட்டிற்கு இது உண்மை. இவர்கள் செய்ய முயற்சிக்கும் ஒரு விஷயம், உடனுக்குடன் செயல்படக்கூடாது என்பதுதான், இது அவர்களின் நடத்தைக்கு கூடுதல் கட்டுப்பாட்டை அளிக்கிறது. நேர்மையான விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள தயாரான மனநிலையில் இல்லாதபோது இவர்கள் தங்கள் துணையை புறக்கணிப்பார்கள்.
MOST READ: தேங்காயின் தோற்றமும் அது கோவிலில் உடைக்கப்படுவதற்கு பின்னால் இருக்கும் ரகசியமும் என்ன தெரியுமா?
மகரம்
மகர ராசிக்காரர்கள் தங்களின் மதிப்பு மற்றும் திறமை மீது சந்தேகம் கொள்ளும் நேரங்கள் வர வாய்ப்புள்ளது. இவர்கள் எப்போதும் சிறப்பாக செயல்படவும், இருக்கவும் முயலுவார்கள், எனவே அவர்களுக்கு வழிகாட்ட உதவுவதற்காக அவர்கள் தங்கள் துணையை நாடுவார்கள். மகர ராசிக்காரர்கள் இதை நேர்மையான பின்னூட்டமாகப் பார்க்கிறார்கள், மேலும் அவர்களது துணை தங்கள் வெற்றியில் பங்கு பெற்றதைப் போலவே நினைக்கிறார்கள். மகர ராசிக்காரர்கள் தங்களின் கடினமான முதலாளிகளை கையாள நன்கு அறிவார்கள், அதையே தங்களின் துணையிடமும் இவர்கள் செய்வார்கள். புகழ்ச்சியைக் காட்டிலும் விமர்சிப்பது மக்களுக்கு எளிதாக இருக்கும் என்பதை அவர்கள் அறிவார்கள், எனவே அவர்களின் கூட்டாளர் அவர்களைப் பாராட்டும்போது, அது ஏதோவொன்றைக் குறிக்கிறது.