Just In
- 22 min ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 1 hr ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 1 hr ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 2 hrs ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
Don't Miss
- News வாங்களேன்.. உட்கார்ந்து பேசி உங்களுக்கு நல்லா புரிய வைக்கிறேன்.. மோடிக்கு கார்கே கடிதம்
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இந்த 5 ராசிக்காரங்க உங்கள காயப்படுத்திட்டு காணாம போயிருவாங்க... கழட்டிவிடுறது ரொம்ப ஈஸி இவங்களுக்கு!
யார் உங்களை எப்போது விட்டு செல்வார்கள் என்று உங்களால் ஒருபோதும் யூகிக்க முடியாது. பெரும்பாலான நேரங்களில் அது உங்கள் நண்பர், காதலன்/காதலி அல்லது குடும்ப உறுப்பினராக இருக்கலாம்.
யார் உங்களை எப்போது விட்டு செல்வார்கள் என்று உங்களால் ஒருபோதும் யூகிக்க முடியாது. பெரும்பாலான நேரங்களில் அது உங்கள் நண்பர், காதலன்/காதலி அல்லது குடும்ப உறுப்பினராக இருக்கலாம். ஏனெனில் அவர்களின் பிரிவுதான் உங்களுக்கு வலியை ஏற்படுத்தும். அத்தகையவர்களுக்கு சகிப்புத்தன்மை மிகக் குறைவு, துரோகம் செய்யப்படுவதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியாது மற்றும் அவர்களின் அகராதியில் மன்னிப்பு என்ற வார்த்தையே இருக்காது.
ஒருவர் ஒவ்வொரு சூழ்நிலையிலும் எப்படி நடந்துகொள்வார் என்பதை அறிவது முக்கியம், குறிப்பாக நீங்கள் அவரது மோசமான சூழ்நிலையில் உடனிருந்தால். அவர்கள் உங்களை மன்னிப்பார்களா, அல்லது விட்டு சென்று விடுவார்களா? என்பதை கணிக்க வேண்டும். இதற்கு நமது ஆளுமைப் பண்புகளை மிகத் துல்லியமாக மதிப்பிடக்கூடிய நமது பிறந்த இராசிகளுக்குள் பதில் உள்ளது. அதன்படி உங்களை விட்டு பிரிய துளியும் யோசிக்காத ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கும்பம்
எளிதில் பொய் சொல்லும் அல்லது தங்கள் அன்புக்குரியவர்களுக்கு துரோகம் செய்யும் நபர்களை அவர்களால் மன்னிக்க முடியாது. இந்த ராசிக்காரர்கள் அவர்களை விட்டு வெளியேற நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். ஆனால் அவர்களது துணை அவர்களிடம் மன்னிப்பு கேட்டால், அவர்கள் அவர்களை மன்னித்தது போல் செயல்படலாம், ஆனால் அவர்கள் செய்ததை அவர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
சிம்மம்
இவர்களுக்கு விசுவாசம் மிகவும் முக்கியமானது. இவர்கள் பொதுவாக அனைவரிடமும் மிகவும் அன்பானவர்களாக இருப்பார்கள், மேலும் சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் அருகில் இருக்க வேண்டுமென்று அனைவரும் எதிர்பார்க்கலாம். ஆனால் அவர்களின் கருணைக்கு தகுதியற்றவர்களுக்கு அவர்கள் விசுவாசமாக இருக்க மாட்டார்கள், உடனடியாக அவர்கள் வாழ்க்கையிலிருந்து வெளியேறிவிடுவார்கள். சிம்ம ராசிக்காரர்கள் உண்மையில் இரண்டாவது வாய்ப்புகளை வழங்குவதை நம்புவதில்லை.
விருச்சிகம்
யாராவது தங்களுக்கு மோசமான காயத்தை ஏற்படுத்தினால் இவர்கள் மிகவும் பயமுறுத்துவார்கள். ஒரு நபரை முதுகில் குத்த அவர்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள், குறிப்பாக இவர்கள் துரோகம் அல்லது காயம் அடைந்தால். அவர்கள் எல்லாவற்றையும் மிகவும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வார்கள் மற்றும் சிறிய தவறுக்கு கூட மிகவும் புண்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் விசுவாசமான மனிதர்களாக இருந்தாலும், இவர்களால் நீண்ட காலமாக ஒரு உறவில் நீடித்திருக்க முடியாது, ஏனென்றால் அவர்களுக்கு மன்னிக்கத் தெரியாது.
ரிஷபம்
இவர்கள் மிகவும் விசுவாசமானவர்கள், அன்பான ஒருவரால் காயப்படுவதை இவர்களால் தாங்க முடியாது. இவர்கள் நிலைமையை மதிப்பீடு செய்து, தங்கள் நேரத்தை எடுத்துக்கொண்டு அந்த நபரை மன்னிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்ற முடிவுக்கு வருவார்கள். இருப்பினும், பெரும்பாலான நேரங்களில், இது எதிர்மறையான பிரதிபலிப்பாகும், ஏனெனில் இவர்களால் தங்கள் நம்பிக்கையைப் பறித்த ஒருவரை மன்னிக்க முடியாது.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் துரோகம் செய்யப்பட்டதாக உணர்ந்தால், அவர்கள் தங்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மீது கோபத்தை பொழிவார்கள். அவர்கள் ஒரு நபரை எளிதில் மன்னிக்க மாட்டார்கள், பெரும்பாலான நேரங்களில், அவர்களை வாழ்க்கையில் இருந்து துண்டித்துவிடுவார்கள். நம்பிக்கை அல்லது நேர்மையைப் பற்றி கவலைப்படாதவர்களுக்கு நேரம், ஆற்றல் மற்றும் முயற்சியை செலவு செய்வது மதிப்புக்குரியது அல்ல என்று அவர்கள் நினைக்கிறார்கள்.