Latest Updates
-
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க.. -
அவரைக்காய் வாங்குனா சாம்பார் வைக்காம இந்த மாதிரி கூட்டு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
வெயிலுக்கு வாழைத்தண்டை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், உடல் சூடும் குறையும்.. -
அரசியலில் பெரிய தலைவராக வரும் அதிர்ஷ்டமும், தகுதியும் உள்ள 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு வரக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 3 விதைகளை நீரில் ஊற வெச்சு சாப்பிடுங்க.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்..
இந்த 5 ராசிக்காரங்கள காதலிக்கிறவங்க ரொம்ப பாவம்... ஏனா இவங்க சைக்கோத்தனமா காதலிப்பாங்களாம்...!
நீங்கள் ஒருவருடன் காதல் உறவில் இருக்கும்போது, ஒரு சிறிய பொஸசிவ் எண்ணம் முதலில் நன்றாக இருக்கும்.
நீங்கள் ஒருவருடன் காதல் உறவில் இருக்கும்போது, ஒரு சிறிய பொஸசிவ் எண்ணம் முதலில் நன்றாக இருக்கும். ஆனால் அது தொடரும்போது பொஸசிவ் எண்ணம் அதிகரிக்கும்போது உங்கள் துணைக்கு பல தொல்லைகளுக்கு ஆளாவார்கள். பொதுவாக பொஸசிவ் எண்ணம் கொண்டவர்கள் பகிர்ந்து கொள்ளும் குணம் கொண்டவர்கள் அல்ல, பகிர்ந்து கொள்ள நிர்பந்திக்கப்படும்போது அவர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாவதாக உணரலாம்.

இந்த அதீத பொஸசிவ் எண்ணம் காதலில் நுழையும்போது அதற்குப்பிறகு அந்த காதலில் நிம்மதி என்பது இருக்காது. உங்கள் காதல் வாழ்க்கையை அது முற்றிலும் சீர்குலைக்கும். சில ராசிக்காரர்கள் காதலில் அதீத பொஸசிவ் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுடன் காதலில் இருக்கும்போது நீங்கள் அனைத்திற்குமே பயப்பட வேண்டிய நிலை ஏற்படும். எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களின் பொஸசிவ் எண்ணம் அவர்களின் பாதுகாப்பை உணர வேண்டிய அவசியத்திலிருந்து வருகிறது. எனவே ஒரு காதல் உறவில் இருக்கும்போது, அவர்கள் மிகவும் சுயநலமாக உணரலாம். இவர்கள் தங்கள் துணையிடமிருந்து முழுமையான விசுவாசத்தையும் உண்மையையும் எதிர்பார்க்கிறார், ஏனெனில் அவர்கள் தனக்கு மட்டுமே சொந்தமானவர்கள் என்று இவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் அழகாகவும் ஆடம்பரமாகவும் இருக்கும் விஷயங்களை விரும்புகிறார்கள், மற்றவர்களிடம் அதனை கொடுப்பது மட்டுமின்றி அவற்றை தொடக்கூட அனுமதிக்க மாட்டார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் ஒரு சந்தேகத்திற்கிடமான மற்றும் பொறாமை கொண்ட தன்மையைக் கொண்டிருப்பதால் அவர்கள் கைவிடப்படுவோமோ அல்லது துரோகத்திற்கு ஆளாகி விடுவோமோ என்று அஞ்சுகிறார்கள். அவர்கள் தங்கள் கூட்டாளரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறார்கள். பொஸசிவ் எண்ணம் என்பது உணர்ச்சிரீதியான மூச்சுத் திணறல் என்று அவர்கள் உணரலாம், ஆனால் அவர்கள் தங்கள் மீது பரிதாபம் வரவேண்டுமென்பதற்காக அதைச் செய்யவில்லை, மாறாக தங்களின் நலனுக்காக செய்கிறார்கள்.

சிம்மம்
எல்லோரும் தங்களுடையது குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும் என்று இவர்கள் விரும்புவார்கள். அவர்கள் அழகான மனிதர்களையும் விஷயங்களையும் விரும்புகிறார்கள், அவர்களைக் கொண்டிருப்பதற்காக பாராட்டப்பட விரும்புகிறார்கள். அவர்கள் தங்களை அதிகப்படியான பொஸசிவ் எண்ணம் கொண்டவர்கள் என்று நினைப்பதில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் வாழ்க்கையில் உள்ளதைப் பாராட்டுவதாக அவர்கள் உணர்கிறார்கள். இவர்கள் எப்போதுமே தங்கள்உடைமைகளைப் பற்றி தற்பெருமை காட்ட விரும்புகிறார்கள், அதற்காக எதையும் செய்வார்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு எப்படி ஒட்டிக்கொள்வது என்பது தெரியும், அவர்கள் அக்கறை காட்டுவதால் அதைக் கூறி அதை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள். அவர்களின் எண்ணங்கள் நன்றாக இருக்கலாம், ஆனால் அவை இன்னும் தன்னுடையது என்ற சிந்தனை அதிகமாகவே உள்ளவர்கள். அவர்கள் எப்போதும் துணையை கைக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சில நேரங்களில் அவர்களின் துணையால் சுவாசிக்க கூட முடியாது. தங்கள் துணை எப்போதும் தன்னை விட்டு பிரிய மாட்டார் என்று அவர்கள் நம்ப தொடங்க வேண்டும், அதுவரை அவர்களின் துணை படாதபாடு பட்டே தீரவேண்டும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் தங்களிடம் இருப்பவைகளுக்காக கடினமாக போராடுகிறார்கள், எனவே அவர்கள் பொஸசிவாக இருப்பதற்கான உரிமையை சம்பாதிக்கிறார்கள் என்று அவர்கள் உணர்கிறார்கள். அவர்கள் தங்கள் வீடு மற்றும் உடைமைகள் என அனைத்தையும் காட்ட விரும்புகிறார்கள். அவை விலை உயர்ந்ததாக இருக்காது, ஆனால் அந்த விஷயங்களை நினைத்து அவர்கள் பெருமிதம் கொள்வதாக கூறுவார்கள். சில நேரங்களில், யாராவது ஒருவர் அவர்களின் உடமியில் பங்கு கோரும்போது அவர்களின் பொஸசிவ் எண்ணம் தீவிரமடையும்.



Click it and Unblock the Notifications











