Just In
- 7 min ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 50 min ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 1 hr ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 2 hrs ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
Don't Miss
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- News சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்!
- Movies அச்சச்சோ.. என்ன ஆச்சு?.. ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. விசாரணைக்கு வர உத்தரவு!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்த 6 ராசிக்காரர்களின் சிரிப்பில் எல்லாரும் மயங்கிடுவாங்களாம்...அவ்வளவு அழகாக சிரிப்பாங்களாம்..!
துலாம் ராசிக்காரர்கள் அழகு மற்றும் ஆளுமையின் சிறந்த தொகுப்பாளராக இருப்பார்கள். அவர்கள் ஒரு கவர்ச்சியான புன்னகையைக் கொண்டுள்ளனர், ஆனால், அது மேஷத்தைப் போல பிரகாசமாக இருக்காது.
மனிதர்களாய பிறந்த நாம் அனைவருக்கும் உணர்ச்சி உள்ளது. கோபம், சிரிப்பு, அழுகை, அன்பு போன்ற உணர்ச்சிகளை அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப நாம் தருகிறோம். ஒவ்வொரு நபர்களுக்கும் அவர்களின் உணர்ச்சிகள் மாறுபடுகின்றன. உணர்ச்சிகளை வெளிப்படுத்த்தும் திறன் எல்லாருக்கும் ஒரே மாதிரி இல்லை. சிலர் எதற்கெடுத்தாலும் அழுவார்கள். சிலர் எதற்கெடுத்தாலும் சிரிப்பார்கள். ஆனால், சிரிப்பு என்பது நேர்மறை எண்ணங்கள் மற்றும் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். சிலர், சிரிக்கும்போது, மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருப்பார்கள். அவர்களின் சிரிப்பை பலர் விரும்புவார்கள்.
ஒருவரின் சிரிப்புக்காகவே அவர்களை விரும்பும் நபர்கள் இருக்கலாம். சிரிப்பு என்பது அழகு மற்றும் அதன் தனித்துவத்திற்காக தனித்து நிற்கிறது. புன்னகை பொதுவாக ஒரு நபர் சிரிக்கும்போது அவரது அழகை அதிகரிக்கிறது. யாரின் சிரிப்பு கவர்ச்சியாக இருக்கிறது என ஜோதிடம் கூறுகிறது. அந்த வகையில் மற்றவர்களை மயக்கும் சிரிப்பை கொண்டிருக்கும் ராசிக்காரர்களைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
மேஷம் (21 மார்ச் - 19 ஏப்ரல்)
மேஷ ராசிக்காரர்களின் சிரிப்பு மிகவும் கவர்ச்சியானது. அவர்கள் அழாகான வடிவம் கொண்ட உதடுகளால் சரியான அளவில் கச்சித்தமாக சிரிப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் சிரிப்புக்கு பெயர் பெற்றவர்கள். இந்த ராசிக்காரர்கள் வாயைத் திறந்து சிரிக்கும்போது, முத்துக்கள் வார்ப்பது போன்று இருக்கும். இதை நீங்கள் அவர்களிடம் கூறும்போது, அவர்கள் வழக்கத்தை விட அதிகமாகச் சிரிப்பார்கள். மேலும் அவர்கள் வழக்கமாக தங்கள் நேர்மறை மற்றும் குறிப்பிட்ட அளவு ஆறுதலையும் தங்கள் புன்னகையால் வெளிப்படுத்துகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் பொதுவாக குறைவாக சிரித்தாலும், அவர்களின் புன்னகை பிரகாசமாகவும் கவலையற்றதாகவும் இருக்கும்.
ரிஷபம் (20 ஏப்ரல் - 20 மே)
ரிஷப ராசிக்காரர்கள், அவர்களின் சிரிப்புக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் சிரிக்கும்போது, அவர்களின் ஒட்டுமொத்த குணமும் அவர்களின் புன்னகையில் தெரிகிறது. இந்த ராசிக்காரர்கள் தங்கள் உணர்வுகளை அரிதாகவே வெளிப்படுத்துகிறார். ஆனால் அவர்கள் மிகவும் அழகாக புன்னகைக்கிறார்கள். ரிஷப ராசிப் பெண்கள் மிகவும் சுயநலம் மிக்கவர்கள் மற்றும் அவர்களின் புன்னகையை மைனஸ் பாயிண்ட் என்று நினைக்கிறார்கள். இதனால், அவர்கள் தங்கள் அழகான பிரகாசமான புன்னகையை அழகான உதட்டுக்குள் மறைக்கிறார்கள். இந்த ராசிக்கார பெண்கள் புன்னகைப்பதைப் பார்ப்பது உங்களுக்கு ஒரு வரமாக இருக்கலாம்.
சிம்மம் (ஜூலை 23 - ஆகஸ்ட் 22)
சிம்ம ராசிக்காரர்களின் புன்னகை கவலையற்றதாகவும், அப்பாவியாகவும் தோன்றலாம். அதனால், இந்த ராசிக்காரர்கள் அனைவரும் எப்போதும் புன்னகைக்கிறார்கள். மேலும் அவர்களின் மகிழ்ச்சியான மற்றும் நேர்மறை ஆற்றல் அதை உறுதி செய்கிறது. சிம்ம ராசி பெண்கள் எப்போதும் பிரகாசமாக சிரிக்கிறார்கள். அவர்கள் உற்சாகம் மற்றும் நேசம் நிறைந்தவர்கள். அவர்கள் சிரிக்கும்போது, எப்பொழுதும், அவர்களின் முகத்தில் ஒரு புத்துணர்ச்சி இருக்கும். சிம்ம ராசிக்கார ஆண் பயமுறுத்தும் தோற்றத்தை கொண்டிருக்கலாம், ஆனால் அவர் சிரிக்கும்போது, அது நேர்மையையும் மென்மையையும் வெளிப்படுத்துகிறது. இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவலையற்ற மக்கள், வசதியாக இருப்பதை இவர்கள் விரும்புகிறார்கள்.
துலாம் (23 செப்டம்பர் - 22 அக்டோபர்)
துலாம் ராசிக்காரர்கள் அழகு மற்றும் ஆளுமையின் சிறந்த தொகுப்பாளராக இருப்பார்கள். அவர்கள் ஒரு கவர்ச்சியான புன்னகையைக் கொண்டுள்ளனர், ஆனால், அது மேஷத்தைப் போல பிரகாசமாக இருக்காது. துலாம் ராசிக்காரர்கள் மிதமாகவும், நேர்த்தியாகவும் சிரிக்கிறார்கள். எனவே அந்த புன்னகை அழகாக தோன்றுவதற்கு நிச்சயமாக ஒரு காரணம் இருக்கிறது. துலாம் ராசி பெண்கள் மற்ற பெண்களை விட நிறத்தில் அழகாகவும், பெரிய கண்களை உடையவர்களாகவும், அனைவரையும் கவர்ந்திழுக்கும் நட்பு புன்னகையை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். துலாம் ராசிக்காரர்கள் சிரிக்கும்போது கண்களை சுருக்கிக் கொள்வார்கள், அது மிகவும் மென்மையாகவும் அழகாகவும் இருக்கும்.
மீனம் (19 பிப்ரவரி - 20 மார்ச்)
மீன ராசிக்காரர்கள் தங்கள் ஒழுங்கற்ற மனநிலைகளுக்கு இடையே, அப்பாவி மற்றும் அழகான புன்னகைகளை நமக்கு வழங்குகிறார்கள். மீன ராசி பெண்களுக்கு வளைந்த பற்கள் இருக்கும். இது மிகவும் அழகாக இருக்கும். இவர்கள் ஒவ்வொரு முறையும் யாரேனும் ஒரு ஜோக் சொல்லும் போது ஒரு அப்பாவி புன்னகையுடன் பதிலளிக்கிறார்கள். மேலும் நகைச்சுவையை விட மக்கள் இதைக் கவனத்தில் கொள்கிறார்கள். புன்னகை எப்போதும் ஒரு நபரின் அழகை மேம்படுத்தும். மீன ராசிக்காரர்கள் அழகாகவும் அன்பாகவும் புன்னகைக்கிறார்கள். அதே நேரத்தில் தங்கள் வலியை மறைத்துக்கொண்டு எப்போதும் புன்னகைக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் புன்னகையுடன் பார்க்க விரும்பும் பாசமும் அக்கறையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
கும்பம் (20 ஜனவரி - 18 பிப்ரவரி)
கும்ப ராசிக்காரர்கள் மற்றவர்களை ஈர்க்கும் வசீகரமான சிரிப்பை கொண்டிருப்பார்கள். அதனால், அவர்கள் பேசுவதற்கும் புன்னகைப்பதற்கும் வாய் திறக்கும்போது, அனைவரையும் கவருவார்கள். கும்ப ராசிக்காரர்கள் தங்கள் சிறப்பான புன்னகையால், அனைவரையும் எளிதாக ஈர்ப்பார்கள். இந்த ராசிக்கார பெண் சிரிக்கும்போது, அவள் புத்திசாலியாகவும் அழகாகவும் இருப்பாள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவளது வாய் மற்றும் பற்கள் மிக அருகாமையில் இருக்கிறது. இது சிரிக்கும்போது, அவளது அழகைக் கூட்டுகிறது. கும்ப ராசி ஆண்கள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட குளிர்ச்சியாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் புன்னகையை வெளிப்படுத்தும் போது அவர்களின் ஆளுமை வெளிப்படுகிறது. காரணம் இல்லாமல் தேவையில்லாமல் அவர்கள் புன்னகைக்க மாட்டார்கள்.