Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
இந்த 5 ராசிக்காரங்க பண்டிகை முடிஞ்சதும் வேற மாதிரி இருப்பாங்களாம்...ஏன் தெரியுமா?
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை, அவர்கள் தங்கள் அருகில் இருப்பவர்களின் கவனிப்பு மற்றும் அன்பின் மத்தியில் உண்மையிலேயே மகிழ்ச்சியாக உணரக்கூடிய ஒரே நேரம் இதுவாகும்.
தீபாவளி, ஆயுத பூஜை, நவராத்திரி, துர்கா பூஜை அல்லது வேறு எந்த பண்டிகையாக இருந்தாலும், பண்டிகைக் காலம் முடிந்த பிறகு சோகமும் மனச்சோர்வும் ஏற்படுவது சகஜம். மகிழ்ச்சி, சிரிப்பு மற்றும் நல்ல அதிர்வுகள் மட்டுமே இருக்கும் ஒரு நேரத்தில் துக்கம் மிகவும் புரிந்துகொள்ளத்தக்கது. ஏனெனில் மக்கள் தாங்கள் மிகவும் நேசிக்கும் நினைவுகளின் மீது ஏக்கம் உணர்கிறார்கள். பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் சொந்தபந்தங்களோடு புத்தாடை அணிந்து, பலவகையான உணவுகள் சமைத்து, அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக கொண்டாடும் தருணத்தை யார்தான் விரும்பமாட்டார்கள். பண்டிகை முடிந்ததும், அந்த சந்தோஷம் இல்லமால், கவலை உங்களை வாட்டலாம்.

ஜோதிடம் பன்னிரண்டு ராசி அறிகுறிகளைக் கொண்டு அவர்களின் ஆளுமைகளின் நுணுக்கங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் அவற்றைப் புரிந்துகொள்வதை எளிதாக்குகிறது. எனவே, பண்டிகைக் காலத்திற்குப் பிறகு கவலையாக உணரக்கூடிய ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

மேஷம்
பண்டிகைகள் முடிந்த பிறகு மேஷ ராசிக்காரர்கள் மிகவும் சோகமாக இருக்கிறார்கள். பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்களில் மற்றவர்களுடன் இருக்கும்போது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால் அது முடிந்தவுடன், அவர்கள் மிகவும் சோகமாகவும் கவலையாகவும் இருக்கிறார்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த சமூகக் குழுவின் சமூக பட்டாம்பூச்சி என்று அழைக்கப்படுகிறார்கள். இயற்கையாகவே, அவர்கள் மக்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட விரும்புகிறார்கள். பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள் அவர்களுக்கு சிறந்த நேரம். ஏனென்றால், அந்த நேரத்தில் மக்களை அதிகம் சுற்றி வருவார்கள். ஆனால் அது முடிந்தவுடன், அவர்கள் மிகவும் தனியாகவும் கவலையாகவும் உணர்கிறார்கள்.

சிம்மம்
சிம்ம ராசி நேயர்கள் திருவிழாக்களின் மகத்துவத்தை வணங்குகிறார்கள் மற்றும் எப்போதும் சிறந்த நேரத்தைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்கள் அனைவருடனும் பழக முயற்சி செய்கிறார்கள். மேலும் பிரகாசமாக பிரகாசிக்க இதுவே சிறந்த நேரம் என்றும் உணர்கிறார்கள். ஆனால் சிம்ம ராசிக்காரர்கள் அனைத்து விழாக்களும் முடிந்தவுடன் மிகவும் மனச்சோர்வடைவார்கள். அடுத்த திருவிழா எப்போது வரும் என்று காத்திருப்பார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை, அவர்கள் தங்கள் அருகில் இருப்பவர்களின் கவனிப்பு மற்றும் அன்பின் மத்தியில் உண்மையிலேயே மகிழ்ச்சியாக உணரக்கூடிய ஒரே நேரம் இதுவாகும். கன்னி ராசிக்காரர்கள் அதிகம் ஒளிரும் காலம் திருவிழாக்கள். பண்டிகைகள் முடிந்து விட்டால் அது அவர்களுக்கு மிகவும் மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. ஆதலால், இந்த ராசிக்காரர்கள் சில நாட்களாக எந்த வேலையும் செய்ய மறுக்கின்றனர்.

மகரம்
திருவிழாக்கள் முடிந்துவிட்டதாக மகர ராசிக்காரர்கள் உணர்கிறார்கள். வேலை, அழுத்தம் மற்றும் தடைகள் நிறைந்த யதார்த்தத்திற்குத் திரும்புவதை அவர்கள் மனமுடைந்து உணர்கிறார்கள். திருவிழாக்கள் என்பது மகர ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையின் அனைத்து துயரங்களையும் கவலைகளையும் மறந்துவிடக்கூடிய நேரம். ஆதலால், இந்த ராசிக்காரர்கள் பண்டிகை மற்றும் திருவிழா நேரங்களை மிகவும் விரும்புகிறார்கள்.

இதர ராசிக்காரர்கள்
ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம், தனுசு, கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பண்டிகைக் காலத்திற்குப் பிறகு தங்கள் வேலையைச் செய்ய அதிக உத்வேகமும் ஊக்கமும் பெறுவார்கள். மகிழ்ச்சியான நேரத்திற்குப் பிறகு, புதிய மனதுடன் தங்கள் அன்றாட வாழ்க்கையின் சலசலப்புக்குத் திரும்புவது முக்கியம் என்று அவர்கள் உணர்கிறார்கள்.



Click it and Unblock the Notifications











