Just In
- 36 min ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 2 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- 5 hrs ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- 5 hrs ago இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- Movies Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
- News ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
லக்ஷ்மி தேவியை வழிபடும் போது பிள்ளையாரையும் சேர்த்து வழிபடுவதற்கான காரணம் என்ன தெரியுமா?
பொதுவாக லக்ஷ்மி தேவியை வழிபடும் போது விநாயகரையும் சேர்த்தே நாம் வழிபடுகிறோம். செல்வத்தின் தெய்வமான லட்சுமியை தனி தெய்வமாக வணங்க முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை.
பொதுவாக லக்ஷ்மி தேவியை வழிபடும் போது விநாயகரையும் சேர்த்தே நாம் வழிபடுகிறோம். செல்வத்தின் தெய்வமான லட்சுமியை தனி தெய்வமாக வணங்க முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. லக்ஷ்மியை வழிபடும்போது ஏன் விநாயகரையும் வழிபடுகிறோம் என்று தெரியாமலேயே நாம் அதனை பல காலமாக செய்து வருகிறோம்.
இந்து மதத்தில் உள்ள பல்வேறு கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் ஒரே கடவுளின் வெவ்வேறு அம்சங்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிள்ளையாரும், லக்ஷ்மி தேவியும் ஒன்றாக வழிபடபடுவதற்கான காரணம் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
விநாயகரின் ஆசீர்வாதம்
விநாயகர் மிகவும் புத்திசாலித்தனமான கடவுளாக கருதப்படுகிறார். விநாயகரின் பிரதிநிதித்துவம் அவர் எவ்வாறு ஞானத்தை பிரதிபலிக்கிறார் என்பதை நிரூபிக்கிறது. விநாயகர் நேர்மையான பாதையில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்குபவராகவும் கருதப்படுகிறார். எனவே அவர் ஒரு புதிய தொழிலைத் தொடங்குவது, ஒரு புதிய வீட்டிற்குள் நுழைவது, அல்லது எந்த முக்கிய வேலையைத் தொடங்கும் முன் எந்த ஒரு சுப காரியத்தின் தொடக்கத்திலும் வணங்கப்படுகிறார்.
லக்ஷ்மி தேவியின் முக்கியத்துவம்
லக்ஷ்மி தேவி செல்வத்தின் அதிபதி என்பது நாம் நன்கு அறிந்துதான். செழிப்பு இல்லாமல் செல்வம் இருந்து என்ன பயன்? செல்வத்தை சரியாக பயன்படுத்த புத்திசாலித்தனம் இன்றி என்ன பயன்? உலகில் உள்ள அனைத்து பொருள் ஆதாயங்களும் புத்திசாலித்தனம் இல்லாமல் நிரந்தரமாக இருக்குமா?
இருவரின் ஆசீர்வாதம்
பாதையில் உள்ள தடைகளை நீக்காமல் யாராவது பெரிய செழிப்பை அடைய முடியுமா? அதற்காகத்தான் விநாயகர் மற்றும் லக்ஷ்மி தேவி இருவரையும் பாரம்பரிய முறைப்படி நாம் இருவரும் ஒன்றாக வழிபட வேண்டும்.
நோக்கம்
விநாயகர் மற்றும் லக்ஷ்மி தேவியை ஒன்றாக வழிபடுவதன் நாம் பொருள் செல்வத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ள வேண்டியதில்லை, அதேசமயம் விவேகத்தையும் ஞானத்தையும் இலக்காகக் கொள்ள வேண்டும் என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது.
பூஜையின் நோக்கம்
இந்து மதத்தில் புத்திசாலித்தனம் மற்றும் ஞானத்துடன் செழிப்பு மற்றும் செல்வத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் பொருள் மற்றும் ஆன்மீகத் தேவைகளுக்கு இடையே மிகச் சிறந்த சமநிலையை பராமரிக்கிறது.
சரஸ்வதி
சில சமயங்களில், லட்சுமி, விநாயகர் மற்றும் கற்றலின் தெய்வமான சரஸ்வதி தேவி ஒன்றாக வழிபடபடுகிறார்கள், ஏனெனில் லட்சுமி (செல்வம்) மட்டும் எங்கள் குறிக்கோளாக இல்லை என்பதை மீண்டும் அடையாளப்படுத்துகிறார்கள். மேலும், பெரும்பாலான படங்கள் அல்லது சிற்பங்களில், விநாயகரின் வலது பக்கத்தில் லக்ஷ்மி தேவியின் சிலை வைக்கப்படுகிறது.