Latest Updates
-
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க
கிருஷ்ண ஜெயந்திக்கு எப்படி பூஜை செய்யணும், எவ்வாறு விரதம் இருக்கணும் தெரியாதா? இத படிங்க...
பகவான் கிருஷ்ணர் பிறந்ததை நினைவுகூறும் வகையில் நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகை தான் கிருஷ்ண ஜென்மாஷ்டமி. தென்னிந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.
பகவான் கிருஷ்ணர் பிறந்ததை நினைவுகூறும் வகையில் நாடு முழுவதும் கொண்டாடப்படும் வண்ணமயமான பண்டிகை தான் கிருஷ்ண ஜென்மாஷ்டமி. தென்னிந்தியாவில் இப்பண்டிகையானது கிருஷ்ண ஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகை கிருஷ்ண பக்ஷத்தின் எட்டாம் நாள் அதாவது அஷ்டமி நாளில் வருகிறது. இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 19 அன்று நாள் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில், உயிர்களைப் பாதுகாப்பவரான விஷ்ணு, தீமைகளை எதிர்த்துப் போராடுவதற்காக கிருஷ்ணராக பூமியில் அவதரித்தார் என்று நம்பப்படுகிறது. விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கிருஷ்ணர் கருதப்படுகிறார்.

கிருஷ்ண ஜெயந்தி கதை
சுமார் 5,200 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் பகவான் கிருஷ்ணர் பிறந்தார். இது துவாபர் யுகம் என்றும் அழைக்கப்படுகிறது. விஷ்ணுவின் மிக சக்தி வாய்ந்த மனித அவதாரமாக கிருஷ்ணர் கருதப்படுகிறார்.
இந்த நாளில் பக்தர்கள் நல்ல ஆரோக்கியத்துக்காகவும், சந்தோஷத்திற்காகவும் விரதத்தைக் கடைப்பிடித்து கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்வார்கள். பூஜை சடங்கு நள்ளிரவில் நடைபெறுகிறது. ஏனெனில் கிருஷ்ணர் நள்ளிரவில் ஒரு சிறையில் பிறந்தார், அங்கு அவரது தாயும் தந்தையும் அவரது மாமா மன்னர் கன்சாவால் பூட்டப்பட்டனர்.
பகவான் கிருஷ்ணரின் பெற்றோரான, தேவகி மற்றும் வாசுதேவர் மதுராவின் கொடூரமான மன்னர் கம்சாவால் சிறையில் தள்ளப்பட்டனர். தேவகியின் திருமண நாளில் (கம்சாவின் சகோதரி), அவரது எட்டாவது மகன் கன்சாவைக் கொன்றுவிடுவான் என்று அசரீரீ கூறியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கம்சா தனது சகோதரி மற்றும் மைத்துனர் இருவரையும் சிறைக்குள் அடைத்தார். கிருஷ்ணர் பிறக்கும் வரை கம்சன் அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் அனைவரையும் கொன்றார்.
பகவான் கிருஷ்ணர் பிறந்த இரவு, கம்சாவின் தாக்குதலில் இருந்து குழந்தையை காப்பாற்ற பிருந்தாவனத்திற்கு கொண்டு செல்லுமாறு தெய்வீக குரல் வாசுதேவருக்கு அறிவுறுத்தியது.

பூஜை தேதி
இந்த ஆண்டு கிருஷ்ண ஜென்மாஷ்டமி ஆகஸ்ட் 19, 2022 அன்று கொண்டாடப்படுகிறது. மக்கள் இந்நாளில் விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள். ஆகஸ்ட் 19 நள்ளிரவில் கிருஷ்ணரை வழிபடுவார்கள். வழிபாட்டிற்குப் பிறகு, அவர்கள் நோன்பை முடித்துக் கொள்வார்கள்.

பூஜை நேரம்
* அஷ்டமி திதி தொடக்கம் - ஆகஸ்ட் 18, 2022 அன்று நள்ளிரவு 01:49 மணி முதல்
* அஷ்டமி திதி முடிவு - ஆகஸ்ட் 19, 2022 அன்று நள்ளிரவு 2:47 மணி வரை
* பூஜை நேரம் - காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை

விரத முறை
மக்கள் நாள் முழுவதும் விரதத்தைக் கடைப்பிடித்து, நள்ளிரவில் கிருஷ்ணர் பிறந்த பிறகு தான் அதை முடிக்கிறார்கள். மேலும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாட புதிய ஆடைகளை அணிந்து, நடனமாடுகிறார்கள், பாடுகிறார்கள்.
மேலும் இந்த நாளில், நாடு முழுவதும் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் கிருஷ்ணர் சிலை அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. பூஜை சடங்கு நள்ளிரவில் நடைபெறுகிறது, அதில் பகவான் கிருஷ்ணரின் சிலை வழிபடப்படுகிறது. மக்கள் கிருஷ்ணருக்குப் பிடித்த பூக்கள், பழங்கள் மற்றும் இனிப்புகளைப் படைத்து, தங்கள் குடும்பத்தின் நலனுக்காக பிரார்த்தணை செய்கிறார்கள்.

தஹி ஹண்டி
ஜென்மாஷ்டமியின் இரண்டாம் நாளில் கொண்டாடப்படும் மற்றொரு முக்கியமான பண்டிகை தான தஹி ஹண்டி. இந்த பண்டிகை மகாராஷ்டிரா மற்றும் இந்தியாவின் பிற மேற்கு மாநிலங்களில் பிரபலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், தயிர் பானைகள் (தஹி) ஒரு உயரத்தில் தொங்கவிடப்படுகின்றன. இது ஒரு மனித பிரமிட் மூலம் இளைஞர் குழுக்களால் உடைக்கப்படுகிறது. தஹி ஹண்டி பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் ஒரு குழந்தையாக கிருஷ்ணர் வெண்ணெய் மற்றும் தயிரை ஒரு உயரமான பானையில் கட்டி வைப்பர். அதை அடைய கிருஷ்ணர் தனது நண்பர்களுடன் சேர்ந்து எடுத்து உண்டு மகிழ்வார். இதை நினைவுக்கூறும் வகையில் மக்கள் இந்த பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.



Click it and Unblock the Notifications











