Just In
- 16 min ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 59 min ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 1 hr ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 2 hrs ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
Don't Miss
- News வேலி தாண்டிய வெள்ளாடு.. கோவை லாட்ஜ் டூ திருச்சி லாட்ஜ்.. வெறும் 14 வயசு தான்.. என்ன கொடுமை இதெல்லாம்
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Movies அச்சச்சோ.. என்ன ஆச்சு?.. ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. விசாரணைக்கு வர உத்தரவு!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
கும்ப ராசியில் சனியும் சுக்கிரனும் இணைந்திருப்பதோடு, கேதுவின் பார்வையும் விழுகிறது. இதன் காரணமாக விபரீத ராஜயோகம் உருவாகிறது.
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது அதனால் சில சமயங்களில் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்கள் 12 ராசிகளிலுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜனவரி 17 ஆம் தேதி சனி கும்ப ராசிக்கு சென்றார், அதன் பின் ஜனவரி 22 ஆம் தேதி சுக்கிரன் கும்ப ராசிக்கு சென்றார். இதனால் கும்ப ராசியில் சனியும் சுக்கிரனும் இணைந்திருப்பதோடு, கேதுவின் பார்வையும் விழுகிறது. இதன் காரணமாக விபரீத ராஜயோகம் உருவாகிறது.
இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தினால் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவதோடு, தொழிலில் முன்னேற்றத்தையும் காண்பார்கள். இப்போது அந்த 4 ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதைப் பாருங்கள்.
தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகியிருப்பதால், வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகத்தை செய்யும் தனுசு ராசிக்காரர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இந்த யோக காலத்தில் உங்கள் கடன்கள் அனைத்தையும் அடைத்துவிடுவீர்கள். ஒருவேளை கடன் வாங்க நினைத்தால், அது எளிதில் கிடைக்கும். முதலீடுகள் செய்வதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும்.
மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகியிருப்பதால், மீன ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். பிப்ரவரி 15 வரை இந்த ராசிக்காரர்கள் எந்த வேலையை செய்தாலும் அதில் வெற்றி காண்பார்கள். புதிய தொழிலை தொடங்க நினைத்தால், அதை பிப்ரவரி 15-க்குள் செய்தால் அந்த தொழிலில் வெற்றிகரமாக ஓடும். மேலும் வணிகர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வாகனம் மற்றும் சொத்து வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகியிருப்பதால், இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நற்பலன்களைப் பெறுவார்கள். அதே வேளையில் உங்களைத் தேடி பிணம் வரும். ஒருவேளை உங்கள் பணம் சிக்கியிருந்தால், அது இந்த காலத்தில் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் வரும். வணிகர்கள் இந்த யோக காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் இந்த விபரீத ராஜயோகம் உருவாகியிருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி 15 வரை லாபகரமான காலமாக இருக்கும். உங்கள் நிதி நிலை நன்கு வலுவாக இருக்கும். மேலும் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் மிகவும் அற்புதமாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புக்கள் உங்களைத் தேடி வரும். வணிகர்களுக்கு இக்காலம் லாபத்தை அள்ளித் தரும் காலமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)