Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
வாஸ்து முறைப்படி உங்க வீட்டுல இதெல்லாம் மாத்துனா உங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்குமாம் தெரியுமா?
திருமணமாகாத பெண், வீட்டின் வடமேற்கு திசையில் படுத்து தூங்க வேண்டும் மற்றும் வீட்டின் தென்மேற்கு மூலையில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். இப்படி தூங்கினால், திருமண வாய்ப்புகள் அதிகரிக்கும்.
திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியமான திருப்பு புள்ளியாக கருதப்படுகிறது. அனைவருக்கும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அதற்கான தகுதி இருந்தாலும் சில காரணங்களால் திருமணம் தள்ளி சென்று கொண்டே இருக்கலாம். திருமண வயதைத் தாண்டியவுடன், விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கவலை இயற்கையானது. இன்னும் பலர் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் பலருக்கு அவ்வாறு செய்ய முடியாமல் போகிறது. அவர்களுக்கு இன்னும் சரியான துணை கிடைக்காத காரணத்தினாலோ அல்லது தற்சமயம் அவர்கள் தங்கள் மீது அதிக கவனம் செலுத்துவதால் இந்தியாவில் திருமண வயதைத் தாண்டியும் பலர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். இந்த தாமதம் பெற்றோர்களுக்கு கவலையளிக்கிறது.

இந்த காரணங்கள் ஜோதிட ரீதியாகவும் இருக்கலாம் ஆனால் சிலசமயம் உங்கள் வீட்டின் வாஸ்து கூட உங்கள் திருமணம் தாமதவதற்கு காரணமாக இருக்கலாம். நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால், வருத்தப்பட வேண்டாம். சில வாஸ்து குறிப்புகளை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். அவற்றை நீங்கள் பின்பற்றினால் விரைவில் உங்களுக்கு திருமணம் நடக்க உதவும். இக்கட்டுரையில், திருமணத்திற்கு தடங்கலாக இருக்கும் வாஸ்து பிரச்சினைகள் என்னென்ன அதனை எப்படி சரிசெய்யலாம் என்று பார்க்கலாம்.

படுக்கையில் தூங்கும் திசை
திருமணமாகாத பெண், வீட்டின் வடமேற்கு திசையில் படுத்து தூங்க வேண்டும் மற்றும் வீட்டின் தென்மேற்கு மூலையில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். இப்படி தூங்கினால், திருமண வாய்ப்புகள் அதிகரிக்கும். அதேபோல், திருமணமாகாத ஆண்களும் வடகிழக்கு திசையில் தூங்க வேண்டும் மற்றும் தென்கிழக்கு திசையில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.

பெட்ஷீட் நிறம்
இளஞ்சிவப்பு, மஞ்சள், வெளிர் ஊதா அல்லது வெள்ளை போன்ற வெளிர் நிற பெட்ஷீட்டில் தூங்குவது நல்லது. இது சரியான வகையான ஆற்றலை அறைக்குள் ஈர்க்கும் மற்றும் திருமணம் செய்ய விரும்பும் நபருக்கு நேர்மறை அதிர்வுகளை எண்ணங்களை உருவாக்கும். வீட்டில் நேர்மறை ஆற்றல்களுக்கு உதவ, வீட்டின் அறைகள் வெளிர் வண்ணங்களில் வரையப்பட வேண்டும். கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தை அறவே தவிர்க்க வேண்டும்.

இரும்பு பொருட்கள்
திருமணம் செய்ய விரும்புபவர்கள் படுக்கைக்கு அடியில் இரும்புப் பொருட்களை வைத்து தூங்கக் கூடாது. படுக்கை அறையில் இரும்பு பொருட்கள் வைத்திருப்பது சுத்தமற்றது மற்றும் அவசியமற்றது. அறையில் நேர்மறை ஆற்றலை அனுமதிக்கும் நபர் தனது அறையை சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

கனமான பொருள்கள்
கனமான பொருட்களை வைப்பது அல்லது வீட்டின் நடுவில் படிக்கட்டு வைப்பது திருமணத்தை தாமதப்படுத்தும் என்பதால் அது பரிந்துரைக்கப்படவில்லை. வாஸ்து படி, கனமான பொருள்கள் திருமணத்தின் சுப சக்தி வீட்டிற்குள் வருவதை கடினமாக்குகிறது. அதனால், அவற்றை வீட்டின் மூலையில் அல்லது வெளிப்புறத்தில் வைப்பது நல்லது.

சுவர் நிறம்
வீடு முழுவதும் ஒளி வண்ண சுவர்கள் இருக்க வேண்டும். பொதுவாக வீட்டிற்குள் வெளிர் நிழல்கள் மிகவும் பரிந்துரைக்கப்படுகின்றன. ஏனெனில் அவை திருமண உறவுகளையும் , நபருக்கான திட்டங்களையும் நேர்மறையாக தொடங்க உதவும். உண்மையில் இருண்ட நிறங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். அவை, எதிர்மறை எண்ணங்களை உருவாக்கலாம்.

கண்ணாடி
உங்கள் படுக்கையறையில் கண்ணாடிகள் இருப்பதைத் தவிர்க்கவும். இது தம்பதிகளிடையே கருத்து வேறுபாட்டிற்கு வழிவகுக்கும். ஒருவேளை கண்ணாடி இருந்தால், அவற்றை இரவில் மூடி வைக்கவும். இது தவிர, உங்கள் அறையை நன்கு வெளிச்சமாக வைத்திருங்கள். இது தம்பதியினரிடையே காதலுக்கும் நெருக்கத்திற்கும் வழிவகுக்கும்.



Click it and Unblock the Notifications











