Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.
2020 திருவண்ணாமலை திருகார்த்திகை தீபம் எப்போது?
கார்த்திகை தீப தினத்தன்று, அருணாச்சல மலை மீது ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரள்வது வழக்கம்.
சிவபெருமானின் திருத்தலங்களில் 'நினைத்தாலே முக்தி தரும்' தலம் என்றால் அது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை என்று கூறியதுமே அனைவருக்கும் நினைவிற்கு வரக்கூடிய ஒரு விஷேசம், திருகார்த்திகை தீபம் தான். கார்த்திகை தீப தினத்தன்று, அருணாச்சல மலை மீது ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரள்வது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு பேருந்துகளும் எதுவும் இயக்கப்பட மாட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகார்த்திகை தீபம் ஏன் கொண்டாடப்படுகிறது?
‘அருணாச்சலா' என்ற வார்த்தைக்கு புனிதமான ஒளிப்பிழம்பு மலை என்ற பொருளும் உண்டு. சிவபெருமான் ஜோதி பிழம்பாக காட்சியளித்த நன்னாளை தான் திருகார்த்திகை தீபத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் திருவண்ணாமலை, அருணாச்சல மலை மீது தீபம் ஏற்றப்படும். இதன்மூலம் அகங்காரம், பொறாமை, ஆணவம் என்ற தீமைகள் நீங்கும் என்ற ஐதீகம் பரவலாக நம்பப்படுகிறது.
முக்தி தலமாக விளக்கும் திருவண்ணாமலையில், திருகார்த்திகை திருவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரமும், பொர்ணமி நாளும் நினையக்கூடிய நாளில் தான் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவானது, தமிழ் மாதம் கார்த்திகை 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. இந்த திருவிழாவானது, டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவடைகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருகார்த்திகை தீபம் நவம்பர் 29 ஆம் தேதி நடைபெறுகிறது.

கார்த்திகை தீபம்
கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியானது நவம்பர் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணி அளவில் திருக்கோவில் கருவறையின் முன்பு பரணி தீபம் ஏற்றப்படும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு பரணி தீபத்திற்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து மாலை ஆறு மணி அளவில் , சுமார்2,668 அடி உயரம் கொண்ட அருணாச்சல மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படும்.

கார்த்திகை பிரம்மோத்ஸவ திருவிழா
இந்த கார்த்திகை தீபம் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது, இது கார்த்திகை பிரம்மோத்ஸவம் திருவிழா என்று பரவலாக அறியப்படுகிறது.
முதல் நாள் (20/11/2020): கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. காலை மற்றும் இரவு அருணாச்சலேஸ்வரர் வெள்ளி வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. வீதி உலாவில் பஞ்சமூர்த்திகளும் உடன் அழைத்து செல்லபடுவர். கணபதி, முருகன், சண்டிகேஸ்வரர், அருணாச்சலேஸ்வரர் மற்றும் பார்வதி தேவி ஆகியோர் பஞ்சமூர்த்திகளாவர்.
2 ஆம் நாள் (21.11.2020): இந்திர வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா.
3 ஆம் நாள் (22.11.2020): 1008 சங்கு அபிஷேகம். காலை மற்றும் இரவில் பஞ்சமூர்த்திகள் சிம்ம வாகனத்தில் வீதிஉலா.
4 ஆம் நாள் (23.11.2020) - இரவு காமதேனு வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா. உடன் புனித மரம் கர்பவிருக்ஷமும் சிவபெருமான் அருகில் இடம் பெற்றிருக்கும்.
5 ஆம் நாள் (24.11.2020) - கலசா பூஜையைத் தொடங்கும், இரவில் 25 அடி உயர வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெறும்.

பரணி தீபம் எப்போது?
6 வது நாள் (25.11.2020) - காலை 63 நயன்மார்க்கள் வீதிஉலா. இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி தேரில் கோயிலை சுற்றி வீதி உலா வருவர்.
7 ஆம் நாள் (26.11.2020) - மகா ரதத்தில் பஞ்ச மூர்த்திகளின் வீதிஉலா. வலத்துடன் தொடங்குகிறது,
8 ஆம் நாள் (27.11.2020) - காலை பஞ்சமூர்த்திகள் பிரம்மாண்டமான குதிரை வாகனத்தில் வீதிஉலா மேற்கொள்வர். இரவு பகவான் ஸ்ரீ பிச்சாண்டவர் உற்சவம் நடைபெறும்.
9 ஆம் நாள் (28.11.2020) - பஞ்சமூர்த்திகள் கைலாச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.
10 ஆம் நாள் (29.11.2020) - அதிகாலை நான்கு மணியளவில் பரணி தீபம். பின்னர், சுப்ரமணிய சுவாமி பிரம்ம தீர்த்தவாரி விழா. மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் தரிசனம், அர்த்தநாரீஸ்வரர் ஆலய தரிசனம் மற்றும் மகா தீபம் தரிசனம். இரவு தங்க ரிஷப வாகனத்தில் பெரிய நாயகர் பவனி.



Click it and Unblock the Notifications