Just In
- 2 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 3 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 3 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 4 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வியாழக்கிழமைகளில் மறந்தும் இந்த விஷயங்களை செஞ்சுடாதீங்க... இல்லன்னா பண பிரச்சனையை சந்திப்பீங்க...
உங்களுக்கு குரு பகவானின் அருள் வேண்டுமென விரும்பினால், ஒருசில செயல்கள்/விஷயங்களை வியாழக்கிழமைகளில் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் வியாழக்கிழமை குரு பகவானுக்கு உரியது.
கிரகங்களில் குரு/வியாழன் மிகப்பெரிய கிரகமாக கருதப்படுகிறது. அதேப் போல் இது கடவுள்களின் குருவாகவும் உள்ளது. ஜாதகத்தில் குரு வலுவான நிலையில் இருந்தால், அனைத்து பிரச்சனைகளும் விலகும் என்று கூறப்படுகிறது. மறுபுறம், குரு பலவீனமான நிலையில் இருந்தால், அது அந்நபரின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும், நிதி பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். இது தவிர, திருமணத்தில் பல தடைகள் மற்றும் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
உங்களுக்கு குரு பகவானின் அருள் வேண்டுமென விரும்பினால், ஒருசில செயல்கள்/விஷயங்களை வியாழக்கிழமைகளில் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் வியாழக்கிழமை குரு பகவானுக்கு உரியது. இப்போது வியாழக்கிழமை என்ன செய்யக்கூடாது மற்றும் என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வியாழக்கிழமைகளில் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:
தலைமுடி, நகம் வெட்டக்கூடாது
ஜோதிடத்தின் படி, வியாழக்கிழமைகளில் தலைக்கு குளிப்பது, தலைமுடியை வெட்டுவது, நகம் வெட்டுவது, ஷேவிங் செய்வது போன்றவற்றை செய்யக்கூடாது. இவ்வாறு செய்வதன் மூலம், பணம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிப்பதோடு, உங்களின் முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்தும்.
வீட்டை சுத்தம் செய்வது
வியாழக்கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்யலாம். ஆனால் விஷேசங்களுக்கு சுத்தம் செய்வதாக இருந்தால், அதை வியாழக்கிழமைகளில் செய்யக்கூடாது. மேலும் வீட்டின் குப்பைகளை வியாழக்கிழமைகளில் தூக்கி எறியக்கூடாது. இது தவிர இந்நாளில் எந்த கெட்ட அல்லது மோசமான வேலைகளையும் செய்யாதீர்கள்.
சலவைக்கு கொடுக்கக்கூடாது
வியாழக்கிழமைகளில் துணியை சலவைக்கு கொடுக்கவோ அல்லது அச்சிடும் பணியையோ செய்யாதீர்கள். முக்கியமாக எப்போதாவது துவைக்கும் துணிகளை வியாழக்கிழமைகளில் துவைக்காதீர்கள். இருப்பினும், நீங்கள் தினமும் துவைக்கும் துணிகளைத் துவைக்கலாம்.
வியாழக்கிழமைகளில் செய்ய வேண்டிய விஷயங்கள்:
விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியை வணங்கவும்
வியாழக்கிழமைகளில் விஷ்ணு பகவான் மற்றும் லட்சுமி தேவியை தவறாமல் வழிபடுங்கள். விஷ்ணு மற்றும் லட்சுமி தேவி செல்வத்தின் அடையாளங்கள். முடிந்தால், இந்நாளில் விஷ்ணு பகவான் மற்றும் லட்சுமி தேவிக்கு சிறப்பு வழிபாடு செய்யுங்கள். இது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கி, செல்வ செழிப்புடன் இருக்க உதவும்.
பசுவிற்கு உணவளிக்கவும்
வியாழக்கிழமைகளில் கடலை மாவில், வெல்லம் மற்றும் மஞ்சள் சேர்த்து பிசைந்து, அதை பசு மாட்டிற்கு உணவளியுங்கள். மேலும் குளிக்கும் போது, நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து குளியுங்கள்.
தானம் கொடுக்கவும்
வியாழக்கிழமைகளில் அவரவரின் திறன்களுக்கு ஏற்ப ஏழைகளுக்கு தானம் வழங்கலாம். அதுலம் கடலை பருப்பு, வாழைப்பழம், மஞ்சள் நிற ஆடைகள் போன்றவற்றை தானம் செய்வது மிகவும் நல்லது.
நல்ல வேலையை ஆரம்பிக்க சிறந்த நாள் தானா?
வியாழக்கிழமைகளில் தொடங்கப்படும் பணிகள் வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டியிருக்கும். எனவே நீங்கள் வியாழக்கிழமைகளில் எந்த ஒரு சுப வேலையையும் தொடங்கலாம். உதாரணமாக, நகை வாங்குவது, வீடு வாங்குவது போன்ற விஷயங்கள். முக்கியமாக வியாழக்கிழமைகளில் கல்வி தொடர்பான வேலையைத் தொடங்க மிகவும் நல்ல நாளாக கருதப்படுகிறது.
(மறுப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டவை. தமிழ் போல்ட்ஸ்கை அதை உறுதிப்படுத்தவில்லை.)