Just In
- 4 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 7 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 7 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 9 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உங்கள் வீட்டில் இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்களால் ஒருபோதும் நினைத்த செல்வத்தை அடைய முடியாத
வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் வீட்டில் சில பொருட்களை வைத்திருந்தால் அவை உங்கள் செல்வத்தை நீக்கி, வறுமையை ஏற்படுத்தும்.
அனைவரின் வாழ்க்கையிலும் பணத்தேவைகள் என்பது இருக்கும். நமது பணத்தேவைகளை பூர்த்தி செய்வதற்கே நமது வாழ்க்கையின் பெரும்பாலான நேரம் சரியாய் போய்விடுகிறது. சிலருக்கோ எவ்வளவோ முயற்சித்தாலும் தங்கள் வாழ்க்கையில் இருக்கும் பணத்தேவைகளை பூர்த்தி செய்ய இயலாது. அதற்கு காரணம் அவர்களின் வாஸ்து தோஷமாகவும் இருக்கலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் வீட்டில் சில பொருட்களை வைத்திருந்தால் அவை உங்கள் செல்வத்தை நீக்கி, வறுமையை ஏற்படுத்தும். நீங்கள் செல்வத்தை ஈர்க்க விரும்பினால் உங்கள் வீட்டை விட்டு உடனடியாக இந்த பொருட்களை வெளியேற்றி விடுங்கள்.
புறாக்கூடு
வீட்டில் ஒரு புறாக்கூடு வைத்திருப்பது வறுமையுடன் வீட்டில் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கிறது என்று கூறப்படுகிறது. உங்களிடம் வீட்டில் ஒன்று இருந்தால், அதை உடனடியாக வீட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் வேலையை பாருங்கள்.
தேன் கூடு
தேன் கூடு உங்களுக்கு ஆபத்தானது மட்டுமல்ல உங்கள் வீட்டிற்குள் துரதிர்ஷ்டத்தையும், வறுமையையும் ஈர்க்கிறது. உங்கள் வீட்டிலிருந்து தேன்கூடை அகற்ற ஒரு நிபுணர்களின் அறிவுரைப்படி நடந்து கொள்ளுங்கள்.
சிலந்தி வலை
வீட்டில் ஒரு சிலந்தி வலை இருப்பது என்பது உங்கள் வாழ்க்கையில் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளின் அறிகுறியாகும். உங்கள் வீட்டில் சிலந்தி வலையைக் கண்டால் உடனடியாக அகற்றி, உங்கள் வீட்டை முடிந்தவரை சுத்தமாக வைத்திருங்கள்.
MOST READ: முட்டை சாப்பிடும்போது இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியமான முட்டை ஆபத்தானதாக மாறும்...!
உடைந்த கண்ணாடி
உடைந்த கண்ணாடிகள் வாஸ்து சாஸ்திரத்தின் படி துரதிர்ஷ்டத்தின் அறிகுறி என்று கருதப்படுவது மட்டுமல்லாமல், அவை வறுமையுடன் உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல்களையும் ஈர்க்கக்கூடும். உடைந்த கண்ணாடிகள் அனைத்தையும் உடனடியாக தூக்கி எறியுங்கள்.
வௌவால்
வெளவாலால் ஏற்பட்ட ஆபத்தைத்தான் இப்போது உலகமே அனுபவித்துக் கொண்டிருக்கிறது. உடல்நலக்குறைவு, துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகள், வறுமை அல்லது மரணம் ஆகியவற்றை ஏற்படுத்துவதாக வெளவால்கள் கருதப்படுகின்றன. நீங்கள் வெளவால்களைப் பார்க்கும் ஒரு பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அனைத்து ஜன்னல்களையும் கதவுகளையும் மூடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உடைந்த சுவர்கள்
உங்கள் சுவரில் சில விரிசல்கள் இருந்தால் அதனை உடனடியாக சரிசெய்யவும். இவை உங்கள் வீட்டின் அழகை கெடுப்பதோடு மட்டுமில்லாமல் உங்கள் வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலையும் ஈர்க்கிறது.
MOST READ: உங்க ஆயுளில் பல ஆண்டுகளை அதிகரிக்க இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...
கசியும் குழாய்கள்
கசிவு குழாய்கள் தண்ணீரை வீணாக்குவது மட்டுமல்லாமல், நேர்மறை ஆற்றல்கள் வீட்டை விட்டு வெளியே செல்வவதற்கான அறிகுறியாகவும் இருக்கிறது. கசியும் குழாயை உடனடியாக சரிசெய்யப்படுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
பழைய பூக்கள்
நீங்கள் தினமும் கடவுளை வழிபடும்போது, அவருக்கு பழைய பூக்களை வழங்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வழிபடுவதற்கு முன் உங்கள் பூஜை அறையை நன்கு சுத்தம் செய்யுங்கள். பழைய பூக்களை வைத்திருப்பது வறுமைக்கு வழிவகுக்கும்.
MOST READ: இந்தியாவில் பெண்கள் இந்த இடங்களுக்கு தெரியாமல் கூட போகக்கூடாது... மீறி போனா பிரச்சினைதான்...!
பணத்தை ஈர்ப்பது எப்படி?
உங்கள் வீட்டில் வடக்கு மூலையில் ஒரு அறை இருந்தால், அது நீல நிறத்தில் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள், சிவப்பு மற்றும் மெரூன் போன்ற நிழல் நிறங்களைத் தவிர்க்கவும்.
மணி பிளாண்ட்
மணி பிளாண்ட் செடிகளை ஒரு பச்சை குவளைக்குள் வைத்திருப்பது வீட்டில் பணத்தை ஈர்க்கும். நீங்கள் அதை ஒரு கிளை மீது வளர விடலாம் மற்றும் உங்கள் வீட்டின் சுவர்களை ஓரளவு மறைக்கலாம். இது உங்கள் வீட்டிற்கு பணத்தை ஈர்க்கும்.
வீட்டின் நுழைவாயில்
ஒரு அழகான நுழைவு உங்கள் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது. எனவே உங்கள் நுழைவு நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மரத்தில் செதுக்கப்பட்ட கணவன், மனைவியின் பெயர்களைக் கொண்ட ஒரு பெயர் தட்டு தொங்குவதும் வீட்டில் நல்ல வாஸ்துவை ஈர்க்கிறது.
சமையலறை
சமையலறை வீட்டின் தென்கிழக்கு மூலையில் வைக்கப்பட வேண்டும். சமையலறையின் நிறம் இளஞ்சிவப்பு, மெவ் அல்லது மஞ்சள் போன்ற வெளிர் வண்ணங்களில் இருக்க வேண்டும். கறுப்பு மற்றும் சாம்பல் நிறங்களைத் தவிர்க்கவும்.
MOST READ: இந்த பொருட்களில் தினமும் ஏதாவது ஒன்று சாப்பிட்டால் நீங்கள் ஆரோக்கிய வாழ்க்கை வாழ்றீங்கனு அர்த்தம்!
மீன் தொட்டி
உங்கள் படுக்கை அறையின் வடகிழக்கு மூலையில் ஒரு மீன்தொட்டியை வைத்திருங்கள். மேலும் வழக்கமான மீன் உணவுடன் சில மாவு பந்துகளுடன் தினமும் மீன்களுக்கு உணவளிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்வது உங்கள் வீட்டில் பணத்தையும் மகிழ்ச்சியையும் தரும்.