Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
மகரத்தில் புதன் இருப்பதால் பிப்ரவரி 27 வரை இந்த 5 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்..
மகரத்தில் உள்ள புதனால் எந்த ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதைக் காணலாம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நவகிரகங்களில் புதன் இளவரசனாக கருதப்படுகிறார். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். புதன் குறுகிய நாட்களிலேயே ராசியை மாற்றக்கூடியவர். இவர் 2023 பிப்ரவரி 07 ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியானார். இந்த மகர ராசியில் ஏற்கனவே சூரியன் பயணித்து வருவதால், மகரத்தில் சூரியன்-புதன் சேர்க்கையால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது.

புதன் இந்த மகர ராசியில் பிப்ரவரி 27 ஆம் தேதி இருந்து, பின் கும்ப ராசிக்குள் நுழைவார். புதன் மகர ராசிக்கு சென்றுள்ளதால், அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சிலர் பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும். இப்போது மகரத்தில் உள்ள புதனால் எந்த ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதைக் காணலாம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் தங்களின் வேலைகளில் தடைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பண இழப்பை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் உங்கள் பேச்சை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இது தவிர இக்காலத்தில் உங்களின் கோபம் உங்களை சிக்கலில் சிக்க வைக்கக்கூடும் என்பதால் கோபம் கொள்வதை குறைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இந்த காலத்தில் உங்கள் தந்தையுடன் பிரச்சனைகளை சந்திக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகளும் ஏற்படலாம்.

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் கடக ராசிக்காரர்கள் பணியிடத்தில் அதிக வேலைப்பளு காரணமாக ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம். இக்காலத்தில் பண பரிவர்த்தனைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. உங்களின் ரகசியங்களை இக்காலத்தில் யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அரசு வேலை செய்பவர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உங்களின் வேலைகளில் தடைகள் ஏற்படும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் பல சவால்களை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில் உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மாத இறுதியில் பண பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இக்காலத்தில் யாருடனும் சண்டை போடாதீர்கள். காதலிப்பவர்கள் இக்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக பேசும் போது உங்கள் பேச்சை கவனிக்க அறிவுறுத்தப்படுகிறது.

தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் எதிரிகள் அதிகம் தொந்தரவு செய்வார்கள். ஆனால் நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் உடன் பிறந்தவர்களுடனான உறவு மோசமடைய வாய்ப்புள்ளது. எனவே இக்காலத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மகரம்
மகர ராசியின் முதல் வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் தேவையற்ற பயணங்களையும், செலவுகளையும் சந்திக்க நேரிடும். பழைய நோய்கள் மீண்டும் இக்காலத்தில் உங்களை தொந்தரவு செய்யும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் பணத்தை முதலீடு செய்வதாக இருந்தால், நன்கு சிந்தித்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பண இழப்பு ஏற்படும். மாணவர்கள் இக்காலத்தில் படிப்பில் பிரச்சனைகளை சந்திக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications