Latest Updates
-
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க..
மீனத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்கு நல்ல லாபம் கிடைக்கப் போகுது..
2023 மார்ச் மாதத்தில் மீன ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் நல்ல செல்வத்தைப் பெறப் போகும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும். அவ்வாறு ராசியை மாற்றும் போது சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கையால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகி, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் 2023 மார்ச் 15 ஆம் தேதி சூரியன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து மார்ச் 16 ஆம் தேதி புதனும் மீன ராசிக்கு செல்கிறார். இதனால் மார்ச் 16 ஆம் தேதி மீன ராசியில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

புதன் மற்றும் சூரியன் சேர்க்கையால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம் ஒரு மங்களகரமான யோகம் என்பதால், அந்த யோக காலத்தில் சில ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலன்களைப் பெறுவார்கள். வியாபாரம் செய்பவர்கள் தொழிலில் நல்ல லாபத்தைக் காண்பதோடு, முன்னேற்றத்தையும் காண்பார்கள். இப்போது 2023 மார்ச் மாதத்தில் மீன ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் நல்ல செல்வத்தைப் பெறப் போகும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இது வருமான வீடு என்பதால், இந்த யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களின் வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு ஏற்படப் போகிறது. மேலும் இதுவரை ஏதேனும் முதலீடு செய்திருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து பெரிய லாபத்தைப் பெறலாம். அதோடு இக்காலத்தில் செய்யும் முதலீடுகளும் நல்ல லாபத்தைத் தரும். இக்காலத்தில் உங்கள் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படப் போகிறது. திருமணமானவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் இக்காலத்தில் அரசியலில் இருக்கும் மிதுன ராசிக்காரர்கள் நல்ல மரியாதையைப் பெறுவார்கள் மற்றும் கௌரவம் அதிகரிக்கும். சிலருக்கு நல்ல பதவிகளும் கிடைக்கலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் இந்த யோக காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் இக்காலத்தில் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இது அதிர்ஷ்ட வீடு என்பதால், கடக ராசிக்காரர்களுக்கு இக்காலம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இக்காலத்தில் செய்யும் அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். மேலும் உங்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தால், இக்காலம் அதற்கு சாதகமாக இருக்கும். வேலை தொடர்பான பயணங்களை செய்ய வாய்புள்ளது. இக்காலகட்டத்தில் உங்கள் தந்தையுடனான உறவு அற்புதமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications