Latest Updates
-
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
சனி பகவானின் பரிபூர்ண அருளைப் பெற வேண்டுமா? அப்ப சனிக்கிழமைகளில் இத செய்யுங்க...
சனி பகவானின் அருளைப் பெறுவதற்கு, அவருக்குரிய தினமான சனிக்கிழமைகளில் அவரை வழிபட்டு, ஒருசில விஷயங்களை சனிக்கிழமைகளில் செய்து வந்தால், வாழ்வில் தொடர்ச்சியாக சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
வேத ஜோதிடத்தின் படி, ஒருவர் வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் வெற்றி பெற வேண்டுமானால் சனி பகவானின் அருளைப் பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால், வாழ்வில் பலவிதமான இன்னல்களை சந்திக்க நேரிடும். பொதுவாக சனி பகவான் ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கக்கூடியவராக நம்பப்படுகிறது. எனவே வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காணவும், நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நடக்கவும் வேண்டுமானால், சனி பகவானை அருளைப் பெற முயற்சிக்க வேண்டும்.

சனி பகவானின் அருளைப் பெறுவதற்கு, அவருக்குரிய தினமான சனிக்கிழமைகளில் அவரை வழிபட்டு, ஒருசில விஷயங்களை சனிக்கிழமைகளில் செய்து வந்தால், வாழ்வில் தொடர்ச்சியாக சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இப்போது சனிபகவானின் ஆசியைப் பெற சனிக்கிழமைகளில் செய்ய வேண்டிய அந்த பரிகாரங்கள் என்னவென்பதைக் காண்போம்.

பரிகாரம் #1
சனி பகவானின் ஆசியைப் பெற சனிக்கிழமைகளில் கருப்பு எள்ளு விதைகள், மாவு மற்றும் சர்க்கரை போன்றவற்றை எறும்புகளுக்கு கொடுங்கள். இது வாழ்க்கையில் ஒட்டுமொத்த வெற்றியைப் பெற உதவுவதாக கூறப்படுகிறது.

பரிகாரம் #2
சனிக்கிழமைகயில் கருப்பு நிற பசுக்கள் மற்றும் நாய்களுக்கு பிரட் சாப்பிட கொடுங்கள் மற்றும் பறவைகளுக்கு உணவளியுங்கள். இப்படி செய்வதனால் சனி பகவானின் எதிர்மறை விளைவுகளைத் தடுக்க உதவி புரியும்.

பரிகாரம் #3
சனிபகவானின் அருளைப் பெற விரும்பினால், சனிக்கிழமைகளில் ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்யுங்கள். இதனால் சனி பகவான் மகிழ்ச்சியடைந்து, உங்களுக்கு நல்ல ஆசியை வழங்குவார்.

பரிகாரம் #4
வாழ்வில் சனி பகவானால் ஏற்படும் இடையூறுகளை நீக்க, சனிக்கிழமைகளில் கருப்பு குதிரை ஆணியால் ஆன மோதிரத்தை அணிய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி, நற்பலன்கள் கிடைக்கும்.

பரிகாரம் #5
உங்களின் ஆசைகள் விரைவில் நிறைவேற, உங்களின் உயரத்திற்கு ஏற்ப சிவப்பு பட்டு நூலை எடுத்து, சனிக்கிழமை மாலை வேளையில் நீரில் கழுவி, பின் மாங்காய் இலைகளை எடுத்து, மனதில் உங்களின் ஆசைகளை நினைத்துக் கொண்டு இலையில் இந்த நூலை சுற்றி, பின் ஆற்றில் போட வேண்டும். இப்படி செய்தால், உங்களின் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

பரிகாரம் #6
ஏழரை சனி மற்றும் சனியின் தாக்கம் கொண்டவர்கள் சனிக்கிமைகளில் அரச மரத்தை வணங்கி, அந்த மரத்தை ஏழு முறை சுற்ற வேண்டும். அப்படி சுற்றும் போது 'ஓம் ஷம் சனிச்சாய நமஹ' என்னும் மந்திரத்தை சொல்ல வேண்டும். இதனால் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் கிடைக்கும்.

பரிகாரம் #7
அனுமன் சனி பகவானின் நண்பன். எனவே சனி பகவானின் அருளைப் பெற விரும்பினால், அனுமனை சனிக்கிழமைகளில் வழிபடுங்கள். முக்கியமாக சனி சாலிசாவை சனிக்கிழமைகளில் பாராயணம் செய்யுங்கள்.

பரிகாரம் #8
நீங்கள் நிறைய நிதி பிரச்சனையை எதிர்கொண்டிருந்தால், சனிக்கிழமைகளில் அரச மரத்தின் கீழ் 4 முக விளக்கை ஏற்றி வைத்து, சனி பகவானை வழிபடுங்கள். இது பொருளாதார பிரச்சனையைப் போக்கி, குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைக்கச் செய்யும்.

பரிகாரம் #9
சனிக்கிழமைகளில் கருப்பு உளுந்து, கருப்பு பருப்பு மற்றும் கருப்பு நிற ஆடைகளை தானம் செய்தால், சனி பகவானால் சந்திக்கும் பிரச்சனைகள் குறைந்து, சனியின் அருள் கிடைக்கும்.

பரிகாரம் #10
நீங்கள் அடிக்கடி ஏதேனும் ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டு வந்தால், செம்பு பாத்திரத்தில் நீரை நிரப்பி, அதில் எள்ளு விதைகளைப் போட்டு, அதைக் கொண்டு சிவபெருமானுக்கு சனிக்கிழமைகளில் அர்ச்சனை செய்யுங்கள். இதனால் ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











