Just In
- 1 hr ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 2 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 3 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 4 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
Don't Miss
- Sports பட்டிதரால் தப்பித்த ஆர்சிபி.. ட்விஸ்ட் கொடுத்த உனாத்கட்.. ஐதராபாத் அணிக்கு சவாலான இலக்கு!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: 1202 வேட்பாளர்கள்..15.88 கோடி வாக்காளர்கள்;1.67 லட்சம் வாக்குச் சாவடிகள்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
உங்களை சுற்றி ஆன்மாக்கள் இருந்தால் உங்களுடன் எப்படி தொடர்பு கொள்வார்கள் தெரியுமா? பயப்படாம படிங்க...!
அமானூஷ்ய உலகம் என்பது எப்போதும் நம்மை கவர்ந்திழுக்கும் ஒன்றாகும். நம்மை சுற்றி ஆன்மாக்கள் இருக்கிறது என்பது உற்சாகமாகவும் அதேசமயம் பயமாகவும் இருக்கும் ஒரு உணர்வாகும்.
அமானூஷ்ய உலகம் என்பது எப்போதும் நம்மை கவர்ந்திழுக்கும் ஒன்றாகும். நம்மை சுற்றி ஆன்மாக்கள் இருக்கிறது என்பது உற்சாகமாகவும் அதேசமயம் பயமாகவும் இருக்கும் ஒரு உணர்வாகும். நமது அருகில் ஆன்மாக்கள் இருக்கிறது எனும்போது அவை நிச்சயமாக நம்மை தொடர்பு கொள்ள முயற்சிக்கும்.
உயிருள்ளவர்களுக்கும், ஆன்மாக்களுக்கும் இடையே பொருட்களே ஊடகங்களாக செயல்படும். ஆன்மாக்களுடனான தொடர்பு என்பது இயற்கைக்கும்,அறிவியலுக்கும் அப்பாற்பட்டது. ஆனால் உலகம் முழுவதும் பலர் தங்கள் சொந்த அனுபவங்களில் இருந்து ஆன்மாக்கள் எப்படி தொடர்பு கொள்ளும் என்பதை விளக்கியுள்ளனர். அவற்றில் சில பொதுவான வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
விளக்குகள் செயலிழப்பது
ஆவிகள் மின்சாரம் கையாளும் திறன் கொண்டவை என்று உளவியலாளர்கள் நம்புகின்றனர், ஒளிரும் விளக்கு பல்புகள் உங்கள் அறையில் ஆவிகள் இருப்பதைக் குறிக்கும் அறிகுறியாக இருக்கலாம். உங்கள் அறையின் விளக்குக்குள் அடிக்கடி செயலிழந்தால் ஆன்மாக்கள் உங்களுடன் தொடர்பு கொள்ள வாய்ப்புள்ளது. புதிய விளக்குகள் கூட இந்த நிகழ்வின் போது செயலிழக்கும். புதிய விளக்குகள் செயலிழப்பது ஆன்மாக்களின் இருப்பை உறுதி செய்யும்.
அறை வெப்பநிலை மாறுவது
கதவு மற்றும் ஜன்னல்கள் மூடப்பட்ட போதிலும் வெப்பத்தின் திடீர் வீழ்ச்சியும் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட உயிரினத்தின் இருப்பைக் குறிக்கிறது. இது அறையில் உள்ள அனைவராலும் அல்லது ஆவி தொடர்பு கொள்ள முயலும் ஒரு குறிப்பிட்ட நபராலும் உணரப்படலாம்.
சத்தங்கள்
உங்களின் பெயரை யாராவது சொல்லி அழைப்பது போல உணர்வது அல்லது மற்றவர்களுக்கு கேட்காத சத்தம் உங்களுக்கு மட்டும் கேட்பது, ஆன்மாக்கள் உங்களை தொடர்பு கொள்ள முயற்சிப்பதன் அர்த்தமாக இருக்கலாம். சில நேரங்களில் சீரற்ற பாடல்கள் நம் தலைக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்த பாடல் அல்லது இசைக்கு இறந்த நபருடன் ஏதாவது தொடர்பு உள்ளது என்பதை நாம் உணர்ந்தால், அது அவர்கள் உங்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்கள்.
MOST READ: அடேங்கப்பா! இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்கள் என்னென்ன பொக்கிஷங்களை திருடி சென்றுள்ளார்கள் தெரியுமா?
கடிகாரம் நிறுத்தப்படுவது
சில நிமிடங்களாக கடிகாரம் ஒரே நேரத்தை காட்டுவது போல நாம் உணர்ந்தால் அது ஆன்மாக்களின் வேலையாக இருக்கலாம். அந்த நேரம் அவர்கள் இறந்த நேரமாகவோ அல்லது உங்களுக்கும், அவர்களுக்கும் பொதுவான நெருக்கமான நேரமாகவோ இருக்கலாம்.
பட்டாம்பூச்சி
பண்டைய சீனர்கள் பட்டாம்பூச்சிகள் கோகோன்களிலிருந்து காற்றில் பறக்கும் குறுகிய ஆயுட்காலமாக மாற்றப்படுவதால் வாழ்க்கை மண்டலத்தை விட்டு வெளியேறிய மக்களின் அடையாளமாக அவை இருப்பதாக நம்பினர். ஒரு நபரின் மரணத்திற்குப் பிறகு பட்டாம்பூச்சிகள் அல்லது அதனுடன் தொடர்புடைய மையக்கருத்துக்களைப் பார்ப்பது அந்த நபர் ஆவி உலகத்திற்கு நகர்ந்ததற்கான அறிகுறியாகும்.
தொடுஉணர்வுகள்
டிக்லிஷ் மற்றும் அழுத்தம் வகை உணர்வுகள் பெரும்பாலும் முகம் மற்றும் உடலில் உணரப்படும். இது முடியை அடிப்பது, காலில் விவரிக்க முடியாத வலி போன்றவை ஏற்படலாம். அவ்வாறு நீங்கள் உணரும்போது உங்கள் முகத்தின் வலது பக்கத்தை தொடும்படி சத்தமாகக் கூறுங்கள், அதன்பின் நீங்கள் வலது பக்கத்தில் தொடுதலை உணர்ந்தால் அது உங்களுக்கு தெரிந்தவர்களின் ஆன்மாவாக இருக்கும் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.
MOST READ: ஆண்கள் நீண்ட காலத்திற்கு விந்தணுக்களை வெளியேற்றாமல் இருந்தால் என்ன பக்கவிளைவுகள் ஏற்படும் தெரியுமா?
டெலிபதி எண்ணங்கள்
உங்கள் எண்ணங்களில் இல்லாத வார்த்தைகளை உங்கள் தலையில் பேசுவதை நீங்கள் கேட்கிறீர்கள் என்றால், ஒரு ஆவி உங்களுக்கு என்ன சொல்ல முயல்கிறது என்பதை நீங்கள் கேட்கலாம். உங்களுக்கு புரிவதற்காக இது பல முறை மீண்டும் மீண்டும் செய்யப்படலாம்.
வாசனைகள்
சாத்தியமில்லாத இடங்களில் திடீரென மலர் வாசனை வெடிப்பது ஒரு ஆவியின் இருப்பைக் குறிக்கிறது என்று கூறப்படுகிறது. மலர் வாசனை மட்டுமின்றி நீங்கள் இருக்கும் இடத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத வாசனை திடீரென வந்தால் அங்கு ஆன்மாக்கள் உறுதியாக இருக்கலாம்.
MOST READ: தென்னிந்தியாவையே கட்டி ஆண்ட சோழர்கள் இறுதியில் யாரால் தோற்கடிக்கப்பட்டார்கள் தெரியுமா?
புகைப்படங்கள்
சுவர் மற்றும் புகைப்படங்கள் மற்றும் டேபிள் பிரேம்கள் விழுவது, வளைந்திருப்பது அல்லது படத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் புகை போல மாறுவது அமானுஷ்ய சக்தியின் இருப்பைக் குறிக்கிறது. இது இறந்தவரின் படங்களில் அதிகம் நடக்கும் என்று கூறப்படுகிறது. டிஜிட்டல் கேமரா மூலம் க்ளிக் செய்யப்படும் புகைப்படங்கள் சில நேரங்களில் உருண்டை போன்ற கட்டமைப்புகளைக் கொண்ட படங்களை உருவாக்குகின்றன. இவை லென்ஸ் அல்லது ஃபோகஸின் பிரச்சனைகள் அல்ல, ஆனால் கேமராவில் பிடிக்கப்பட்ட ஆவிகள் என்று உளவியலாளர்கள் நம்புகிறார்கள். அவர்கள் புகைப்படக் கலைஞரிடம் தங்கள் இருப்பை முன்னிலைப்படுத்த முயற்சி செய்யலாம்.