Latest Updates
-
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
கருட புராணத்தின் படி, மரணம் ஒருவரை நெருங்கும் முன் இந்த அறிகுறி-லாம் தெரியுமாம்...
ஒருவர் செய்த செயல்களின் அடிப்படையில் என்ன தண்டனை கிடைக்கும் என்பது குறித்தும் கருட புராணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ஒருவரை மரணம் நெருங்கும் முன் தெரியும் அறிகுறிகள் குறித்தும் கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்து மதத்தில் உள்ள 18 புராணங்களில் ஒன்று தான் கருட புராணம். இதில் மனிதனின் பிறப்பு- இறப்பு, வினைகள், பாவ புண்ணிய பலன்கள் பற்றி விவரித்துக் கூறப்பட்டுள்ளது. சுருக்கமாக கூற வேண்டுமானால், கருட புராணத்தில் மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து நிலைகளும் விளக்கப்பட்டுள்ளன.

ஒருவர் செய்த செயல்களின் அடிப்படையில் என்ன தண்டனை கிடைக்கும் என்பது குறித்தும் கருட புராணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ஒருவரை மரணம் நெருங்கும் முன் தெரியும் ஒருசில அறிகுறிகள் குறித்தும் கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிகுறிகளை ஒவ்வொருவரும் முன்னரே தெரிந்து வைத்துக் கொண்டால், தங்களின் கடைசி ஆசைகளை அல்லது முக்கியமான விஷயங்களை தங்கள் குடும்பத்தினரிடம் கூறலாம். இப்போது மரணம் நெருங்கும் முன் வரும் அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.

அறிகுறி #1
ஒருவரை மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றால், அவருக்கு காரணமின்றி திடீரென்று மனம் சரியில்லாமல் போகும். அந்நேரத்தில் அவர் இதுவரை செய்த பாவங்கள் நினைவிற்கு வரும். அந்த பாவ காரியங்களை நினைத்து வருத்தம் கொள்வார். இதைக் கொண்டு ஒருவரை மரணம் நெருங்குகிறது என்பதை அறியலாம்.

அறிகுறி #2
கருட புராணத்தின் படி, ஒருவரது மரணம் நெருங்குகிறது என்றால் அந்நபரின் கையில் உள்ள ரேகைகள் மறையத் தொடங்கும். எனவே திடீரென்று கையில் உள்ள ரேகைகள் மங்கத் தொடங்குகிறது என்றால், உஷாராகிக் கொள்ளுங்கள்.

அறிகுறி #3
கருட புராணத்தின் படி, பூமியில் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிவடையும் போது, சில நாட்களுக்கு முன்பு கனவுகள் மூலம் சில சமிக்ஞைகள் வரும். அதுவும் அந்த கனவுகளில் உங்கள் முன்னோர்கள் வருவார்கள். அப்படி வரும் போது அவர்கள் அழுவதையோ அல்லது அவர்கள் ஓடிப்போவதையோ கண்டால், உங்களைத் தேடி மரணம் வருகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அறிகுறி #4
கருட புராணத்தின் படி, ஒருவர் எப்போது தங்களைச் சுற்றி எதிர்மறை ஆற்றல் நிரம்பியிருப்பதை உணர்கிறார்களோ, அப்போது அவர்களுக்கு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடைப்பெறப் போகிறது என்று அர்த்தம்.

அறிகுறி #5
கருட புராணத்தின் படி, ஒருவரை மரணம் நெருங்கும் போது, அந்நபர் வித்தியாசமான மற்றும் மர்மமான விஷயங்களைப் பார்க்கத் தொடங்குவார். உதாரணமாக, தீயில் சிக்குவது, வெள்ளத்தில் மாட்டிக் கொள்வது, நிலநடுக்கத்தில் சிக்குவது போன்ற விஷயங்களை காண நேரிடும். இது தவிர, வானில் இருந்து ஒரு பிரகாசமான ஒளியைக் காண நேரிடும். இந்நிலையில் அந்நபரின் நேரம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications











