Just In
- 2 hrs ago
இந்த பழக்கங்கள் உங்ககிட்ட இருந்தா உடனே மாத்துங்க... இல்லன்னா அது உங்களை ஏழையாக்கிடும்...
- 3 hrs ago
தம்பதிகள் குண்டா இருந்தா குழந்தை பிறக்காதா? ஆய்வு சொல்லும் உண்மை என்ன தெரியுமா?
- 4 hrs ago
குளிர்காலத்தில் கிடைக்கும் இந்த 'ஒரு' காய் உங்க இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை குறைக்க உதவுமாம்!
- 4 hrs ago
இந்த பொருட்களை இரவில் ஊறவைத்து வெறும் வயிற்றில் சாப்பிடுவது உங்கள் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா?
Don't Miss
- Finance
மும்பை, டெல்லி எல்லாம் வேண்டாம்.. சென்னை தான் வேண்டும்.. அடம்பிடித்து வந்த Popeyes..!
- Sports
யாருப்பா நீ.. பிராஸ்வெல் அதிரடி சதம்.. இந்தியாவுக்கு மரண பயத்தை காட்டிய நியூசிலாந்து.. திரில்லர்
- News
சேகுவேரா இன்று இருந்திருந்தால் வேங்கைவயல் சம்பவத்தை எதிர்த்து குரல் கொடுத்திருப்பார் : திருமாவளவன்
- Movies
விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டணி.. பூரண நலமடைய ஈசனை பிரார்த்திக்கிறேன்.. எச். ராஜா ட்வீட்!
- Automobiles
இந்த பைக்குகளுக்கு பெட்ரோல் கொஞ்சோண்டு போதும்... ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த ஃப்ளெக்ஸி ஃப்யூவல் டூ-வீலர்கள்!
- Technology
ரோபோட்டுக்கு உணர்ச்சி இல்லைனு யார் சனா சொன்னது? 'எல்லாமே' இருக்குனு நிரூபிச்சுட்டாங்க.!
- Travel
நியூயார்க் டைம்ஸின் 2023 ஆம் ஆண்டு பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய மாநிலம்!
- Education
பெட்ரோலிய கழகத்தில் ரூ.81 ஆயிரத்தில் பணி வாய்ப்பு...!
சனி பகவானின் கோபத்தைக் குறைக்கணுமா? அப்ப சனி அமாவாசை அன்று இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...
சனி அமாவாசை என்பது சனிக்கிழமையில் வரும் அமாவாசை ஆகும். இந்த முறை சித்திரை மாத அமாவாசை சனிக்கிழமையில் வருகிறது. அதோடு சனிக்கிழமையில் வரும் அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுவாக அமாவாசை நாட்களில் மக்கள் புண்ணிய நதிகளில் நீராடி, ஏழைகளுக்கு தங்களால் முடிந்த அளவு அன்னதானம் செய்வார்கள். இது பாவத்தைப் போக்கி புண்ணியத்தை சேர்க்கிறது.
மேலும் சனிக்கிழமை சனி பகவானுக்கு உரிய நாளாகும். இந்நாளில் சனி பகவானை வழிபடுவது மிகவும் நல்லது. அதிலும் சனி அமாவாசை நாளில் சனி பகவானை வழிபட்டு ஒருசில பரிகாரங்களை செய்து வந்தால், ஏழரை சனி மற்றும் பிற சனி தோஷங்களில் இருந்தும் விடுபடலாம். இப்போது சனி அமாவாசை எப்போது, அதன் தேதி என்ன மற்றும் ஏழரை சனி மற்றும் சனி தோஷங்களில் இருந்து விடுபடுவதற்கான சில பரிகாரங்கள் குறித்து காண்போம்.

2022 சனி அமாவாசை தேதி
சித்திரை மாத அமாவாசை 2022 ஏப்ரல் 30 ஆம் தேதி வருகிறது. இந்த அமாவாசை திதி சனிக்கிழமையில் வருகிறது. எனவே இந்த சனிக்கிழமையில் சனி பகவானை வழிபட்டால், அவரின் கோபத்தைக் குறைத்து அருளைப் பெறலாம்.

2022 சனி அமாவாசை தின கிரக நிலைகள்
சித்திரை அமாவாசை அன்று கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலை சற்று அரிதானது. ஏனெனில் இந்நாளில் சூரியன், சந்திரன் மற்றும் ராகு மேஷ ராசியிலும், சனி மற்றும் செவ்வாய் கும்ப ராசியிலும் இருப்பார்கள். அதேப் போல் குருவும், சுக்கிரனும் மீன ராசியில் சேர்ந்து இருப்பார்கள்.

சனி பகவானை இப்படி வழிபடுங்கள்
சனி அமாவாசை தினத்தன்று காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு, மரத்தின் அடியில் ஒரு கருப்பு துணியை விரிக்க வேண்டும். பின் அந்த துணியில் சனி தேவரின் சிலை, யந்திரம் மற்றும் வெற்றிலையை வைத்த பின், கடுகு எண்ணெய் விளக்கை ஏற்ற வேண்டும். பின் நீல நிற பூக்களை சனி பகவானுக்கு அர்ப்பணிக்கவும். பின்னர் பூரி போன்ற எண்ணெயில் பொரித்த உணவை சனி பகவானுக்கு படைத்து வணங்க வேண்டும்.

கடுகு எண்ணெய் விளக்கு ஏற்றுங்கள்
சனி அமாவாசை தினத்தன்று மாலை வேளையில் சனி பகவானுக்கு கடுகு எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றுங்கள் அதோடு சனி பகவானுக்கு கருப்பு நிற துணியை வாங்கி கொடுங்கள். பின்னர் சனி சாலிசாவை பாராயணம் செய்யுங்கள். அதுமட்டுமின்றி, அரச மரத்தடியில் சனி பகவானை நினைத்து தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பித்ரு தோஷத்தில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.

அனுமனை வணங்குங்கள்
சனி அமாவாசை நாளில் சனி பகவானை மட்டுமின்றி, அனுமனையும் வணங்குங்கள். அனுமனின் பக்தர்களுக்கு சனி பகவான் எப்போதும் ஆசியை வாரி வழங்குவார். எனவே சனி பகவானின் அருளைப் பெற நினைத்தால், சனி அமாவாசை அன்று கண்டிப்பாக அனுமனை நினைத்து அனுமன் சாலிசாவை பாராயணம் செய்யுங்கள். மேலும் அனுமனை தரிசனம் செய்து வழிபட்டால், சனியின் தோஷங்கள் அனைத்தும் நீங்கி, வாழ்வில் உள்ள தடைகளும் நீங்கும்.

ருத்ராட்சம் அணியுங்கள்
சனி அமாவாசை அன்று ஏழு முகம் கொண்ட ருத்ராட்சத்தை வாங்கி கங்கை நீரில் கழுவி அணியுங்கள். இப்படி செய்தால் வாழ்வில் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் சனி அமாவாசை அன்று 'ஓம் ப்ரம் ப்ரேம் ப்ருண் சஹ சனிச்சராய நம' மற்றும் 'ஓம் சனிச்சராய நம' ஆகிய இரண்டு மந்திரங்களையும் சொல்ல வேண்டும். முக்கியமாக இந்நாளி ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும்.

பித்ரு தோஷம் நீங்குவதற்கு...
சனி அமாவாசை நாளன்று அரச மரத்தின் கீழ் நான்கு முக தீபம் ஏற்றி சனி பகவானை வழிபட வேண்டும். இதனால் செல்வமும், புகழும் பெருகும். அதுவும் கடுகு எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் பணப் பிரச்னைகள் நீங்குவதுடன், பணப் பற்றாக்குறையும் இருக்காது என்பது நம்பிக்கை.

கருப்பு நிற பொருட்களை தானம் செய்யுங்கள்
சனி அமாவாசை அன்று ஏழைகளுக்கு கருப்பு உளுத்தம் பருப்பு, கருப்பு நிற துணி போன்ற பொருட்களை தானம் செய்தால், சனி தோஷம் நீங்கி, சனிபகவானின் அருள் கிட்டும்.