சனி வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க நிறைய பிரச்சனைகளை சந்திக்கப் போறாங்க... உஷாரா இருங்க..

சனி பகவான் 2022 ஜூன் 05 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ரமாக மாறி பயணிக்கவுள்ளார். சனி வக்ரமாவதால் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைத்தாலும், சில ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளையும் சந்திப்பார்கள்.

ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படுகிறார். கிரகங்களிலேயே சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகும். சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 வருடங்கள் ஆகும். 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி சனி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறினார். அதன் பின் சனி ஜூன் மாதத்தில் பின்னோக்கி பயணிக்கிறார். அதாவது சனி வக்ர நிலையில் கும்ப ராசியில் பயணிக்க ஆரம்பிக்கிறார். சனி பின்னோக்கி நகர்வதால், நிச்சயம் இது அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

Sani Vakra Peyarchi In Kumbh Rasi Problems Increase For These Zodiac Signs In Tamil

வேத ஜோதிடத்தில் சூரியன் மற்றும் சந்திரனைத் தவிர, அனைத்து கிரகங்களுமே பின்னோக்கி நகரக்கூடியவை. சனி பகவான் ஒரு நீதிமான். இத்தகைய சனி ஒருவரது ஜாதகத்தில் அசுப வீட்டில் இருந்தால், அது வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். அதுவே சுப வீட்டில் இருந்தால், அவர் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
2022-இல் சனி

2022-இல் சனி

சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சனி 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி மகர ராசியை விட்டு வெளியேறி தனது இரண்டாவது சொந்த ராசியான கும்ப ராசிக்குள் நுழைந்தார். கிரகங்களிலேயே ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கி பயணிக்கக்கூடியவர் தான் சனி. அப்படி பயணிக்கும் போது சிறிது காலம் வக்ர நிலையில் பயணிப்பார். இந்நிலையில் சனி பகவான் 2022 ஜூன் 05 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ரமாக மாறி பயணிக்கவுள்ளார். சனி வக்ரமாவதால் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைத்தாலும், சில ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளையும் சந்திப்பார்கள். இப்போது சனி வக்ரமாவதால் அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்

கடகம்

சனி பகவான் கும்ப ராசியில் நுழையும் போதே கடக ராசிக்காரர்களுக்கு சனி தையா ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் ஜூன் 5 ஆம் தேதி சனி வக்ரமாவதால், கடக ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் அதிக கவனம் தேவை. பண இழப்பிற்கான வாய்ப்புள்ளது. இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால், அதை திரும்ப பெற முடியாது.

மகரம்

மகரம்

சனி வக்ர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் பல மோசமான பலன்களைப் பெறப் போகிறார்கள். உத்தியோகத்தில் பல்வேறு தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். வாழ்க்கைத் துணையுடன் உறவு சற்று மோசமாகும்.

விருச்சிகம்

விருச்சிகம்

ஏற்கனவே விருச்சிக ராசியில் சனி தையா நடக்கிறது. இந்நிலையில் சனியின் வக்ர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மூதாதையர் சொத்து தொடர்பான சச்சரவுகள் வரலாம். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். இக்காலத்தில் பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion