Latest Updates
-
Lunar Eclipse 2026: சந்திர கிரகணத்தின் போது நிலா ஏன் சிவப்பு நிறமாக மாறுகிறது தெரியுமா? -
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் தன யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தட்டுக்கடை புதினா தக்காளி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லிக்கு செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 03 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கவலை அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்...! -
ஒரே நேரத்தில் வக்ர நிலையில் 4 கிரகங்கள்: மார்ச் 04 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்.. -
30 ஆண்டுக்கு பின் உருவாகும் கேந்திர திரிகோண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகிறது...! -
கருப்பான முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப கடலை மாவை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
கல்யாண பந்தி உருளை பட்டை மசாலா ரெசிபி... இதை செஞ்சு பாருங்க... சாம்பார், ரசம் சாதத்துக்கு பட்டாசா இருக்கும்... -
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு அசைவ சுவையில் சூப்பர் சைடு டிஷ் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க.. -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் ரொம்ப ஈகோ பிடித்தவர்களாக இருப்பார்களாம்... நீங்க பிறந்த மாதம் இதுல இருக்கா?
2023-ல் இந்த 5 ராசிக்காரங்க சனி பகவானின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகப் போறாங்க..
30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசிக்கு செல்லும் சனி பகவான், அந்த ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை இருப்பார். கும்ப ராசிக்கு சனி பகவான் நுழைந்ததும், அதன் விளைவாக 5 ராசிக்காரர்கள் சனியின் பிடியில் சிக்கவுள்ளார்கள்.
புதிய ஆண்டான 2023 ஆம் ஆண்டிற்குள் நுழையவுள்ளோம். இந்த புத்தாண்டில் பல முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. இப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். கிரகங்களில் சனி, குரு, ராகு, கேது போன்ற கிரகங்கள் ராசியை மாற்றுவதற்க பல மாதங்கள் ஆகும். இதனால் இந்த கிரகங்களின் தாக்கம் மற்ற கிரகங்களை விட சற்று அதிகமாவே இருக்கும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அதாவது ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசிக்கு செல்கிறார்.

30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசிக்கு செல்லும் சனி பகவான், அந்த ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை இருப்பார். கும்ப ராசிக்கு சனி பகவான் நுழைந்ததும், அதன் விளைவாக 5 ராசிக்காரர்கள் சனியின் பிடியில் சிக்கவுள்ளார்கள். அதில் 3 ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. 2 ராசிக்காரர்களுக்கு அஷ்டம மற்றும் அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது. இப்போது 2023 ஆம் ஆண்டில் நடக்கும் சனிப் பெயர்ச்சிக்கு பின் எந்தெந்த ராசிக்காரர்கள் சனியின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு 2023-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சிக்கு பின் ஏழரை சனியின் கடைசி கட்டம் தொடங்குகிறது. எனவே இந்த காலம் மகர ராசிக்காரர்களுக்கு சற்று கடினமாகவே இருக்கும். இந்த காலகட்டத்தில் உடல் ரீதியாக, மன ரீதியாக மட்டுமின்றி, நிதி ரீதியாகவும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஆகவே 2023 ஆம் ஆண்டில் மகர ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்
2023-ல் நடக்கும் சனிப் பெயர்ச்சிக்கு பின் கும்ப ராசிக்கு ஏழரை சனியின் இரண்டாவது கட்டம் தொடங்குகிறது. எனவே கும்ப ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டில் சற்று கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அதோடு, எந்த ஒரு முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்பும் நன்கு சிந்திக்க வேண்டும். மேலும் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். சனி பகவான் கும்ப ராசியின் அதிபதி என்பதால், பிரச்சனைகளை மட்டுமே கொடுக்காமல் சற்று நற்பலன்களையும் வழங்குவார். இருப்பினும் இந்த ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாகவே இருக்கும்.

மீனம்
2023 ஆம் ஆண்டில் நடக்கும் சனிப்பெயர்ச்சிக்கு பின் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் தொடங்குகிறது. ஜோதிடத்தில் ஏழரை சனியில் 3 கட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு பலன்களைப் பெறக்கூடும். அதில் ஏழரை சனியின் முதல் கட்டம் நடக்கும் ராசிக்காரர்கள் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும். இந்நிலையில் கும்ப ராசிக்கு சனி பகவான் சென்ற பின்னர், மீன ராசிக்காரர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கடகம்
2023-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் கடக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சனி செல்வதால், கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்குகிறது. இதனால் கடக ராசிக்காரர்கள் சனியின் தாக்கத்தால் பல சிரமங்களுக்கு ஆளாவார்கள். பண பரிவர்த்தனைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புகளை சந்திக்க நேரிடும். மேலும் உடல் ரீதியாகவும் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளதால், ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2023 சனிப்பெயர்ச்சிக்கு பின் அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது. இந்த சனியின் தாக்கத்தால் விருச்சிக ராசிக்காரர்கள் அதிக சர்ச்சைகளில் சிக்க நேரிடும் என்பதால் தேவையற்ற சண்டைகளில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தொழில் மற்றும் வேலைக்காக நிறைய அலைச்சலை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த ராசிக்காரர்கள் சனிக்கிழமை தோறும் சனி பகவானை வழிபட்டு வந்தால், சனியின் மோசமான தாக்கத்தை சற்று குறைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











