சூரிய கிரகணத்தன்று மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தின் போது சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி நிகழ்கிறது. அதுவும் இந்த சூரிய கிரகணம் மேஷ ராசியில் நிகழ்கிறது. கிரகணம் ஒரு வானியல் நிகழ்வாக இருந்தாலும், ஜோதிடத்தில் இது மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. சூரிய கிரகணம் அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. அதில் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும், சில ராசிக்காரர்களுக்கு பாதகமாகவும் இருக்கும். முக்கியமாக ஆண்டின் முதல் சூரிய கிரகணம் சனி அமாவாசை அன்று வருகிறது. இந்நாளில் சனிச்சரி அமாவாசை யோகம் உருவாகிறது. இந்த முதல் சூரிய கிரகணத்தின் போது சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மேஷ ராசியில் நிகழ்கிறது. எனவே இது மேஷ ராசியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் இக்காலத்தில் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். எதிரிகள் அதிக ஆதிக்கம் செலுத்தலாம். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். இல்லாவிட்டால் காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. முடிந்தால் சூரிய கிரகணத்தின் போது பயணம் செய்வதைத் தவிர்த்திடுங்கள்.

கடகம்

கடகம்

கடக ராசியின் அதிபதி சந்திரன். சூரிய கிரகணத்தின் போது, சந்திரன் ராகுவுடன் மேஷ ராசியில் இருப்பார். இதனால் இக்காலத்தில் இந்த ராக்காரர்களுக்கு அதிக மன உளைச்சல் ஏற்படும். திடீரென்று மனதில் ஒருவித பயம் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் ஆதிக்கம் செலுத்தும். இக்கால கட்டத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். பொறுமையாக இருங்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த சூரிய கிரகணத்தின் போது கௌரவ இழப்பை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் பேச்சில் நிதானத்தைக் கடைபிடியுங்கள். சர்ச்சைகளில் இருந்து விலகி இருப்பது நன்மை பயக்கும். எதிரிகளால் பெரும் பிரச்சனையை சந்திக்கலாம். மேலும் செலவுகள் அதிகமாக இருக்கும்.

 சூரிய கிரகணத்தின் போது தீய விளைவுகளை தவிர்க்கும் வழிகள்:

சூரிய கிரகணத்தின் போது தீய விளைவுகளை தவிர்க்கும் வழிகள்:

சூரிய கிரகணத்தின் போது மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று ராசிக்காரர்களும் காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் மோசமான விளைவுகளைத் தவிர்க்கலாம். அதுமட்டுமின்றி, கிரகணத்தின் போது உங்களின் இஷ்ட தெய்வத்தை வணங்குவது நல்லது. அதோடு சூரிய கிரகணத்தின் போது உங்கள் சிந்தனையை நேர்மறையாக வைத்து தானம் செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion