Latest Updates
-
1 கப் தயிரும், 2 கத்திரிக்காயும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. செம டேஸ்ட்டா இருக்கும்.. -
புதிய பாபா வாங்கா கணிப்பின் படி அமெரிக்கா-ஈரான் போருக்கு பின் அமெரிக்காவின் நிலை என்னவாகும் தெரியுமா? -
IPL 2026: இந்த ஆண்டின் சிஎஸ்கே அணியில் உள்ள மிகச்சிறந்த 5 வீரர்கள்! இவர்களால் ஆட்டமே அதிரடியா இருக்கப்போகுது! -
அலட்சியமாக இருக்குறதுல இந்த 4 ராசிக்காரங்கள யாராலும் அடிச்சிக்கவே முடியாதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
கும்ப ராசியில் உதயமாகும் செவ்வாய்: மார்ச் 26 முதல் இந்த 6 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது.. -
4 கத்திரிக்காயும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 23 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரும் நாளாக இருக்குமாம்...! -
சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் பெரிய வெங்காயம் இருந்தா 10 நிமிடத்தில் இந்த சட்னியை அரைங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்! -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 மாவட்டங்கள் என்னென்ன தெரியுமா?
சனிபகவான் நேர்பாதையில் திரும்பும் போது இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்..
சனி பகவான் அக்டோபர் 11 ஆம் தேதி, பிற்போக்கு நிலையில் இருந்து நேர்பாதைக்கு திரும்புகிறார். இப்படி சனி பகவான் தனது நேர் பாதையில் திரும்புவதற்கு முன் ஒருசில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலனை வழங்குவார்.
சனி பகவான் ஒரு கொடுமையானவராக கருதப்படுகிறார். ஆனால் உண்மையில் சனி பகவான் அனைவருக்குமே நியாயமான நீதியை வழங்கக்கூடியவர். கெட்டது செய்பவர்களுக்கு திருந்துவதற்கான வாய்ப்பை அளிப்பவர் மற்றும் நல்லது செய்வபவர்களுக்கு மகிழ்ச்சியை வாரி வழங்குவார். இப்படி தான் சனி பகவான் அனைவருக்கும் நீதியை வழங்குகிறார். சனி பகவான் ஒரு நல்ல நிலையில் இருக்கும் போது, அது ஒருவரின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

சனி பகவானால் ஆண்டியையும் அரசனாக்க முடியும். அப்படிப்பட்ட சனி பகவான் அக்டோபர் 11 ஆம் தேதி, பிற்போக்கு நிலையில் இருந்து நேர்பாதைக்கு திரும்புகிறார். இப்படி சனி பகவான் தனது நேர் பாதையில் திரும்பும் போது ஒருசில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலனை வழங்குவார். இக்கட்டுரையில் சனி பகவான் நேர்பாதையில் திரும்பும் போது எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கப் போகிறார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களின் கௌரவம் மற்றும் நிலையில் உயர்வு இருக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களின் பணிகள் பாராட்டப்படும். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன. லாபம் அதிகம் கிடைக்கும். மொத்தத்தில், ரிஷப ராசிக்காரர்களுக்கு இது ஒரு வசந்த காலமாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் எந்த வேலையிலும் வெற்றி காண்பார்கள். வியாபாரம் மற்றும் வேலைக்கான மிகச்சிறந்த காலம். உங்களின் வேலைகள் பாராட்டப்படும். பணம் மற்றும் லாபம் இருக்கும். இதனால் உங்களின் நிதி நிலைமை வலுவாக இருக்கும். திருமண வாழ்க்கை சந்தோஷம் நிறைந்திருக்கும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களின் கெரளவம் மற்றும் நிலை மேம்படும். குடும்ப வாழ்க்கையில் உறவுகள் மிகவும் இனிமையாக இருக்கும். உங்கள் துறையில் நீங்கள் வெற்றி அடைவீர்கள். உங்களின் வேலைகள் சிறப்பான பாராட்டைப் பெறும். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்களின் நிதி நிலை வலுவாக இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களின் மன அழுத்தம் குறையும். தடைப்பட்ட வேலைகள் முடிக்கப்படும். குடும்ப உறுப்பினர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள். இதனால் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு நன்றாக இருக்கும். உங்களின் வாழ்க்கை முறையில் சில நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். இக்காலத்தில் நீங்கள் எதையும் பொறுமையாகவும் சிறப்பாகவும் மதிப்பிடுவதால், உங்களின் முடிவெடுக்கும் திறன் நன்றாக இருக்கும். மொத்தத்தில் எதிலும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, நல்ல முடிவைப் பெறுவீர்கள்.



Click it and Unblock the Notifications











