Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
அனுமனின் முழு அருளும் கிடைக்கணுமா? அப்ப அனுமன் ஜெயந்தி அன்று உங்க ராசிக்கேற்ற பொருளை கொடுத்து வணங்குங்க...
ஜோதிட சாஸ்திரத்தில், ஒருவர் ராசிக்கேற்ப பொருட்களை அனுமனுக்கு படைத்தால், வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என கூறப்பட்டுள்ளது. இப்போது இதுக்குறித்து விரிவாக காண்போம்.
சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் தான் அனுமன் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தியானது 2022 ஏப்ரல் 16 ஆம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அனுமனை வழிபடுவதன் மூலம் சிறப்பான பலனைப் பெறலாம். அனுமனின் முழு அருளும் கிடைக்க அனுமன் ஜெயந்தி சிறந்த நாளாக கருதப்படுகிறது. இந்தியா முழுவதும் அனுமன் ஜெயந்தி மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுவதுண்டு. ஸ்ரீராம பக்தரான அனுமன் அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பவராக கருதப்படுகிறார். அனுமனின் நாமத்தை அனுமன் ஜெயந்தி அன்று மட்டுமின்றி, தினமும் கூறுவதன் மூலம் அனைத்து தொல்லைகளும் விலகுவதாக நம்பப்படுகிறது.

அனுமன் பிறந்த நாளன்று அனுமனை மனதார வணங்கி வந்தால், வாழ்வில் உள்ள தடைகள், கவலைகள், வேதனைகள் நீங்கி, அனுமனின் அருளால் விரும்பிய பலன்கள் கிடைக்கும். ஜோதிட சாஸ்திரத்தில், ஒருவர் ராசிக்கேற்ப பொருட்களை அனுமனுக்கு படைத்தால், வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என கூறப்பட்டுள்ளது. இப்போது இதுக்குறித்து விரிவாக காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள், அனுமன் ஜெயந்தி நாளன்று அனுமனுக்கு உளுத்தால் தயாரிக்கப்பட்ட லட்டுகளை செய்து படைத்து வணங்குவது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! நீங்கள் அனுமன் ஜெயந்தி நாளில் துளசி விதைகளை அனுமனுக்கு படைத்து அர்ச்சனை செய்து வழிபடுங்கள். இதனால் அனுமனின் அருளைப் பெறலாம்.

மிதுனம்
மிதுன ராசியைச் சேர்ந்தவர்கள், அனுமன் பிறந்த நாளான அனுமன் ஜெயந்தி அன்று நல்ல மணம் கொண்ட துளசி தைலத்தை அனுமனுக்கு படைத்து வணங்குவது நல்லது.

கடகம்
கடக ராசிக்காரர்கள் அனுமன் பிறந்த நாளன்று நெய் சேர்த்து உளுத்து புட்டு செய்து அனுமனுக்கு படைத்து வணங்குவதன் மூலம், வாழ்வில் உள்ள தொல்லைகள் நீங்கி, அனுமனின் ஆசியைப் பெறலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! நீங்கள் அனுமனின் பரிபூர்ண அருளைப பெற வேண்டுமானால், அனுமன் ஜெயந்தி அன்று சுத்தமான நெய்யால் தயாரிக்கப்பட்ட ஜிலேபியை அனுமனுக்கு படைத்து வணங்க வேண்டும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள், அனுமன் பிறந்த அனுமன் ஜெயந்தி நாளில் அனுமனுக்கு வெண்ணெயைப் படைத்து வணங்கினால், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் மற்றும் அனுமனின் அருளும் கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களே, நீங்கள் அனுமனுக்கு மோத்திச்சூர் லட்டு வாங்கி படைத்து வணங்கினால், உங்களுக்கு அனுமனின் ஆசி கிடைத்து, வாழ்வில் உள்ள இன்னல்கள் தீரும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள், அனுமனுக்கு உளுந்து லட்டுகளை அனுமன் ஜெயந்தி நாளில் படைத்து வணங்க வேண்டும். இதனால் நற்பலன்கள் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! அனுமன் ஜெயந்தி நாளில் நீங்கள் அனுமனுக்கு துளசி விதைகளை மோத்திச்சூர் லட்டுகளின் மீது தூவி படைக்க வேண்டும். இதன் மூலம், அனுமன் மகிழ்ந்து அவரின் ஆசியை முழுமையாக வழங்குவார்.

மகரம்
மகர ராசியைச் சேர்ந்தவர்கள், அனுமன் பிறந்த அனுமன் ஜெயந்தி நாளன்று மோத்திச்சூர் லட்டுகளை வழங்க வேண்டும். இதனால் வாழ்வில் நீங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள், அனுமன் ஜெயந்தி நாளில் அனுமனுக்கு செந்தூரம் பூசுவது நல்லது. இதனால் அவர் மகிழ்ந்து பரிபூர்ண அருளை வழங்குவார்.

மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று அனுமன் ஜெயந்தி என்பதால், அனுமனுக்கு கிராம்புகளைக் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். இதனால் பிரச்சனைகள், வறுமைகள், கவலைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து, அனுமனின் அருளால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











