Latest Updates
-
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்..
அனுமனின் முழு அருளும் கிடைக்கணுமா? அப்ப அனுமன் ஜெயந்தி அன்று உங்க ராசிக்கேற்ற பொருளை கொடுத்து வணங்குங்க...
ஜோதிட சாஸ்திரத்தில், ஒருவர் ராசிக்கேற்ப பொருட்களை அனுமனுக்கு படைத்தால், வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என கூறப்பட்டுள்ளது. இப்போது இதுக்குறித்து விரிவாக காண்போம்.
சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் தான் அனுமன் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தியானது 2022 ஏப்ரல் 16 ஆம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அனுமனை வழிபடுவதன் மூலம் சிறப்பான பலனைப் பெறலாம். அனுமனின் முழு அருளும் கிடைக்க அனுமன் ஜெயந்தி சிறந்த நாளாக கருதப்படுகிறது. இந்தியா முழுவதும் அனுமன் ஜெயந்தி மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுவதுண்டு. ஸ்ரீராம பக்தரான அனுமன் அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பவராக கருதப்படுகிறார். அனுமனின் நாமத்தை அனுமன் ஜெயந்தி அன்று மட்டுமின்றி, தினமும் கூறுவதன் மூலம் அனைத்து தொல்லைகளும் விலகுவதாக நம்பப்படுகிறது.

அனுமன் பிறந்த நாளன்று அனுமனை மனதார வணங்கி வந்தால், வாழ்வில் உள்ள தடைகள், கவலைகள், வேதனைகள் நீங்கி, அனுமனின் அருளால் விரும்பிய பலன்கள் கிடைக்கும். ஜோதிட சாஸ்திரத்தில், ஒருவர் ராசிக்கேற்ப பொருட்களை அனுமனுக்கு படைத்தால், வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என கூறப்பட்டுள்ளது. இப்போது இதுக்குறித்து விரிவாக காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள், அனுமன் ஜெயந்தி நாளன்று அனுமனுக்கு உளுத்தால் தயாரிக்கப்பட்ட லட்டுகளை செய்து படைத்து வணங்குவது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! நீங்கள் அனுமன் ஜெயந்தி நாளில் துளசி விதைகளை அனுமனுக்கு படைத்து அர்ச்சனை செய்து வழிபடுங்கள். இதனால் அனுமனின் அருளைப் பெறலாம்.

மிதுனம்
மிதுன ராசியைச் சேர்ந்தவர்கள், அனுமன் பிறந்த நாளான அனுமன் ஜெயந்தி அன்று நல்ல மணம் கொண்ட துளசி தைலத்தை அனுமனுக்கு படைத்து வணங்குவது நல்லது.

கடகம்
கடக ராசிக்காரர்கள் அனுமன் பிறந்த நாளன்று நெய் சேர்த்து உளுத்து புட்டு செய்து அனுமனுக்கு படைத்து வணங்குவதன் மூலம், வாழ்வில் உள்ள தொல்லைகள் நீங்கி, அனுமனின் ஆசியைப் பெறலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! நீங்கள் அனுமனின் பரிபூர்ண அருளைப பெற வேண்டுமானால், அனுமன் ஜெயந்தி அன்று சுத்தமான நெய்யால் தயாரிக்கப்பட்ட ஜிலேபியை அனுமனுக்கு படைத்து வணங்க வேண்டும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள், அனுமன் பிறந்த அனுமன் ஜெயந்தி நாளில் அனுமனுக்கு வெண்ணெயைப் படைத்து வணங்கினால், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் மற்றும் அனுமனின் அருளும் கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களே, நீங்கள் அனுமனுக்கு மோத்திச்சூர் லட்டு வாங்கி படைத்து வணங்கினால், உங்களுக்கு அனுமனின் ஆசி கிடைத்து, வாழ்வில் உள்ள இன்னல்கள் தீரும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள், அனுமனுக்கு உளுந்து லட்டுகளை அனுமன் ஜெயந்தி நாளில் படைத்து வணங்க வேண்டும். இதனால் நற்பலன்கள் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! அனுமன் ஜெயந்தி நாளில் நீங்கள் அனுமனுக்கு துளசி விதைகளை மோத்திச்சூர் லட்டுகளின் மீது தூவி படைக்க வேண்டும். இதன் மூலம், அனுமன் மகிழ்ந்து அவரின் ஆசியை முழுமையாக வழங்குவார்.

மகரம்
மகர ராசியைச் சேர்ந்தவர்கள், அனுமன் பிறந்த அனுமன் ஜெயந்தி நாளன்று மோத்திச்சூர் லட்டுகளை வழங்க வேண்டும். இதனால் வாழ்வில் நீங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள், அனுமன் ஜெயந்தி நாளில் அனுமனுக்கு செந்தூரம் பூசுவது நல்லது. இதனால் அவர் மகிழ்ந்து பரிபூர்ண அருளை வழங்குவார்.

மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று அனுமன் ஜெயந்தி என்பதால், அனுமனுக்கு கிராம்புகளைக் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். இதனால் பிரச்சனைகள், வறுமைகள், கவலைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து, அனுமனின் அருளால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.



Click it and Unblock the Notifications