Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
2022 ஆம் ஆண்டு குறித்து நோஸ்ட்ராடாமஸ் என்னவெல்லாம் கணித்துள்ளார் தெரியுமா?
நோஸ்ட்ராடாமஸ் 500 ஆண்டுகளுக்கு முன்பே 2022 இல் என்ன நடக்கும் என கணித்துள்ளார். அதன்படி, 2022 ஆம் ஆண்டு குறித்து நோஸ்ட்ராடாமஸ் என்ன கணித்துள்ளார் என்பதை இப்போது காண்போம்.
பாபா வாங்காவைப் போன்றே, எதிர்காலத்தைக் கணித்து கூறுவதில் வல்லவர் பிரெஞ்சு ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸ். இவர் ஏற்கனவே பல எதிர்கால நிகர்வுகளை கணித்துக் கூறியுள்ளார். இன்றும் நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் மக்களை ஆச்சரியப்படுத்துகின்றன. அவற்றில் சில உண்மையாக நடந்தும் விட்டன. இதனால் தான் நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகளை மக்கள் அறிந்து கொள்ள அதிக ஆவலைக் காட்டுகின்றனர்.

நோஸ்ட்ராடாமஸ் 1503 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்து, 1566 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி இறந்தார். இவர் அடால்ஃப் ஹிட்லரின் ஆட்சி குறித்து, இரண்டாம் உலகப் போர், 9/11 தாக்குதல்கள் மற்றும் பிரெஞ்சு புரட்சி உட்பட பல கணிப்புகளை கணித்துள்ளார். இவரது கணிப்புகளில் 85 சதவீதம் உண்மையாகிவிட்டது. நோஸ்ட்ராடாமஸ் 500 ஆண்டுகளுக்கு முன்பே 2022 இல் என்ன நடக்கும் என கணித்துள்ளார். அதன்படி, 2022 ஆம் ஆண்டு குறித்து நோஸ்ட்ராடாமஸ் என்ன கணித்துள்ளார் என்பதை இப்போது காண்போம்.

அணுகுண்டு வெடிப்பு
நோஸ்ட்ராடாமஸ் 2022 ஆம் ஆண்டு குறித்த தனது குறிப்பில், இந்த ஆண்டு அணுகுண்டு வெடிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அணுகுண்டு வெடிப்பு பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், அணுகுண்டு வெடிப்பால் பூமியின் நிலையும் மாறலாம் என கணித்து கூறியுள்ளார்.

வானில் இருந்து பாறை விழும்
2022 ஆம் ஆண்டில் பூமிக்கு சிறிய கிரகம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நோஸ்ட்ராடாமஸ் கணித்துக் கூறியுள்ளார். அதுவும் வானத்தில் இருந்து ஒரு பெரிய பாறை கடலில் விழும். இதனால் பயங்கரமான சுனாமி போன்ற அலைகள் எழும்பி பூமியின் அனைத்து பக்கங்களிலும் தண்ணீர் வந்து நாசப்படுத்தும். மொத்தத்தில், கடல் நீர் பூமியின் பெரும் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணித்துள்ளார்.

பணவீக்கம்
500 ஆண்டுகளுக்கு முன்பு நோஸ்ட்ராடாமஸ் தனது கணிப்புகளில் 2022 ஆம் ஆண்டில் பணவீக்கம் ஏற்படும் என்பதைக் கணித்துள்ளார். இந்த ஆண்டில் பணவீக்கம் கட்டுப்பாட்டை மீறும். அதுவும் அமெரிக்க டாலரின் விலையில் பெரும் சரிவு ஏற்படும் என்பதை கணித்துள்ளார். மேலும் இந்த ஆண்டில் மக்கள் தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயினில் அதிக பணத்தை முதலீடு செய்வார்கள் என்றும் கணித்து கூறியுள்ளார்.

ரோபோக்கள் மனிதர்களை அழிக்கும்
2022 ஆம் ஆண்டில் உலகில் பெரும் அழிவுக்குப் பின் அமைதி வரும் என்று நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். ஆனால் இந்த அமைதி ஏற்படுவதற்கு முன் உலகம் முழுவதும் 3 நாட்கள், அதாவது 72 மணிநேரம் இருளில் மூழ்கியிருக்கும். அதோடு இந்த ஆண்டில் ரோபோக்கள் மனிதர்களை கட்டுப்படுத்தும். மேலும் ரோபோக்கள் மனித இனத்தையே அழித்துவிடும்.

பிரான்சில் பேரழிவு ஏற்படும்
நோஸ்ட்ராடாமஸின் கணிப்பின் படி, 2022 ஆம் ஆண்டு பிரான்ஸை ஒரு பெரிய புயல் தாக்கும். இது கடுமையான சேதத்தை ஏற்படுத்தி பிரான்ஸை நாசமாக்கும். இது தவிர உலகின் பல பகுதிகளில் தீ மற்றும் வறட்சி போன்ற நிலைமைகளை சந்திக்க நேரிடும்.

உலகில் பசி அதிகரிக்கும்
நோஸ்ட்ராடாமஸின் கணிப்பின் படி, ஆயுத மோதல்களால் உலகில் பசி பட்டினி அதிகரிக்கும். இது பெரும் அழிவிற்கு வழிவகுக்கும். நோஸ்ட்ராடாமஸின் இந்த கணிப்புகள் எந்தளவுக்கு உண்மை என்பதை காலம் தான் சொல்லும்.



Click it and Unblock the Notifications