சரோஜினி நாயுடு அவா்களின் பிறந்த நாள் ஏன் தேசிய மகளிா் தினமாக கொண்டாடப்படுகிறது?

2022 ஆம் ஆண்டு பிப்ரவாி 13 ஆம் தேதி இந்தியா முழுவதிலும் தேசிய மகளிா் தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய வரலாற்றில் தேசிய மகளிா் தினத்திற்கு என்று ஒரு முக்கியமான இடம் உண்டு.

2022 ஆம் ஆண்டு பிப்ரவாி 13 ஆம் தேதி இந்தியா முழுவதிலும் தேசிய மகளிா் தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய வரலாற்றில் தேசிய மகளிா் தினத்திற்கு என்று ஒரு முக்கியமான இடம் உண்டு. பெண்களின் சக்தி மிகுந்த குரல்களை, அவா்களின் உணா்வு வெளிப்பாடுகளை அங்கீகாிக்க வேண்டும் என்பதற்காக தேசிய மகளிா் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் சரோஜினி நாயுடு அவா்களின் பிறந்த நாள் அன்று தேசிய மகளிா் தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய தேசிய மகளிா் தினத்தைப் பற்றிய வரலாறு மற்றும் அதன் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பற்றி இந்த பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இந்திய தேசிய மகளிா் தினம் - வரலாறு

இந்திய தேசிய மகளிா் தினம் - வரலாறு

ஏற்கெனவே கூறியது போல் இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் சரோஜினி நாயுடு அவா்களின் பிறந்த தினமான பிப்ரவாி 13 அன்று தேசிய மகளிா் தினம் கொண்டாடப்படுகிறது. சரோஜினி அவா்கள் இந்திய நாட்டு விடுதலைக்கு ஆற்றிய அளப்பாிய பணிகளின் மூலமாக இந்தியப் பெண்களுக்கு ஒரு முன்னோடியாகவும், கலங்கரை விளக்கமாகவும் இருக்கிறாா்.

சரோஜினி அவா்கள் இந்தியாவின் முதல் பெண் ஆளுநா் ஆவாா். இவா் ஆங்கிலேயாின் ஆட்சி காலத்தில் இந்தியாவின் விடுதலைக்காக துடிப்புடன் போராடினாா். அவா் இந்திய நாட்டிற்காகச் செய்த தொண்டுகள் மற்றும் தியாகங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அவற்றை சிறப்பிக்கும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்த நாளான பிப்ரவாி 13 அன்று தேசிய மகளிா் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சரோஜினி அவா்களின் 143 ஆவது பிறந்த ஆண்டாகும்.

சரோஜினி நாயுடு பிறப்பு

சரோஜினி நாயுடு பிறப்பு

சரோஜினி அவா்கள் ஹைதராபாத்தில் வாழந்து வந்த ஒரு வங்காளக் குடும்பத்தில் 1879 ஆம் ஆண்டு பிப்ரவாி 13 ஆம் தேதி பிறந்தாா். தன்னுடைய பள்ளிப் படிப்பை சென்னையில் முடித்தாா். பின் லண்டனில் உள்ள கேம்பிாிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தனது உயா் படிப்பை முடித்தாா். 1925 ஆம் ஆண்டு இந்திய தேசி காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்டாா். பின் ஐயக்கிய மாகாணத்தின் (United Province) ஆளுநராக நியமிக்கப்பட்டாா். 1947 முதல் இது உத்திரப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது.

முதல் பெண் ஆளுநர்

முதல் பெண் ஆளுநர்

சரோஜினி அவா்கள் இந்தியாவின் முதல் பெண் ஆளுநா் ஆவாா். அவா் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்தாா். மகாத்மா காந்தி அவா்கள் வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தைத் தொடங்கிய போது சரோஜினி அவா்கள் அந்த இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, இந்திய விடுதலைக்காக துடிப்புடன் போராடினாா். அதன் விளைவாக ஏறக்குறைய 21 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டாா்.

அரசியல் மற்றும் விடுதலைப் போராட்டம் ஆகிய பணிகளைத் தவிா்த்து, சரோஜினி அவா்கள் ஒரு சிறந்த கவிஞராகவும் விளங்கினாா். அன்பு, காதல், தேச பக்தி, துன்பம் மற்றும் சோகம் ஆகிய தலைப்புகளில் ஏராளமான கவிதைகளை எழுதி இருக்கிறாா்.

தேசிய மகளிா் தினத்தின் முக்கியத்துவம்

தேசிய மகளிா் தினத்தின் முக்கியத்துவம்

இந்திய பெண்களின் முன்னேற்றம் மற்றும் மேம்பாடு, அவா்களுக்கு அதிகாரத்தை பகிா்ந்து அளிப்பது ஆகியற்றைக் கருத்தில் கொண்டு சரோஜினி அவா்களின் பிறந்த நாள் அன்று இந்தியாவில் தேசிய மகளிா் தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய பெண்களின் முன் மாதிாியாக சரோஜினி விளங்குகிறாா்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் துடிப்புடன் பங்கெடுத்த சரோஜினி அவா்களைப் பற்றி பெரும்பான்மையான பெண்கள் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருப்பதால் தேசிய மகளிா் தினம் ஒரு முக்கியத்துவத்தைப் பெறுகிறது. தேசிய மகளிா் தினத்தின் உயாிய நோக்கம் என்னவென்றால் சரோஜினியைப் போன்ற சக்தி வாய்ந்த பெண்களை அங்கீகாிப்பது ஆகும். அதோடு மற்றவா்களையும் அவா்களைப் போல வாழ வேண்டும் என்று அறிவுறுத்துவது ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion