Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
உலகின் ஆபத்தான சிறைகளிலில் இருந்து தப்பித்த கில்லாடி கைதிகள்... எப்படியெல்லாம் தப்பிச்சிருக்காங்க பாருங்க!
ஜெயிலில் இருந்து தப்பிக்கும் கதைகள் எப்போதுமே சுவாரஸ்யமானவையாக இருக்கும். இந்த கதையம்சத்தில் வந்த பெரும்பாலான ஹாலிவுட் திரைப்படங்களும், வெப்சீரியஸ்களும் வரலாற்று புகழ்பெற்றவையாக இருக்கிறது.
ஜெயிலில் இருந்து தப்பிக்கும் கதைகள் எப்போதுமே சுவாரஸ்யமானவையாக இருக்கும். இந்த கதையம்சத்தில் வந்த பெரும்பாலான ஹாலிவுட் திரைப்படங்களும், வெப்சீரியஸ்களும் வரலாற்று புகழ்பெற்றவையாக இருக்கிறது. ஆனால் நிஜ உலகம் திரைப்படத்தை விட மிகவும் சுவாரஸ்யமானது. சில ஜெயிலில் இருந்து தப்பியவர்களின் அனுபவங்களும், அவர்கள் பயன்படுத்திய உத்தியும் பல சுவாரஸ்யமான படங்கள் உருவாக காரணமாக இருந்துள்ளது.

நிலத்தடி சுரங்கப்பாதைகள் மற்றும் தேங்காய் படகுகள் முதல் போலி தலைகள் மற்றும் பொம்மை துப்பாக்கிகள் வரை, இவை உலகின் மிகப்பெரிய சிறையிலிருந்து தப்பிக்கும் புத்திசாலித்தனமான வழிகளாக இருந்தது. இந்த பதிவில் உலகில் உண்மையாகவே நடந்த சில நம்பமுடியாத சிறையிலிருந்து தப்பித்த சம்பவங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜான் டிலிங்கர்
ஜான் ஹெர்பர்ட் டிலிங்கர் ஜூனியர் ஒரு அமெரிக்க வங்கிக் கொள்ளையராக இருந்தார், அவர் தனது வாழ்க்கையில் இரண்டு முறை சிறைகளில் இருந்து தப்பினார். இரண்டு வங்கிகளை கொள்ளையடித்த பிறகு, 1933 இலையுதிர்காலத்தில் அவர் பிடிபட்டு லிமாவில் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் சிறைக்குள் துப்பாக்கிகளை கடத்தும் அனுபவமுள்ள குற்றவாளிகளுடன் நட்பு கொண்டார் மற்றும் டிலிங்கர் பிடிபட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு தப்பினார்.
சில நாட்களுக்குப் பிறகு அதே சிறைக்கு திரும்பிய குழு இந்தியானா மாநில சிறை அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து டிலிங்கரை சிறையில் இருந்து விடுவித்தது. ஒரு வருடம் கழித்து அவர் பிடிபட்டார் மற்றும் தப்பிக்க முடியாத வகையில் பிரபலமான சிறையான கிரவுன் பாயிண்ட் சிறைக்கு அனுப்பப்பட்டார். அங்கு டிலிங்கர் ஒரு மரத்துண்டை துப்பாக்கியில் செதுக்கி, அந்த துப்பாக்கியால் 17 பேரை பணயக்கைதிகளாக பிடித்து மீண்டும் தப்பினார்.

ஃபிராங்க் லீ மோரிஸ், ஜான் ஆங்லின் மற்றும் கிளாரன்ஸ் ஆங்லின்
ஃபிராங்க் லீ மோரிஸ், ஜான் ஆங்கிலின் மற்றும் கிளாரன்ஸ் ஆங்லின் ஆகியோர் ஜூன் 11, 1962 அன்று அல்காட்ராஸ் சிறையிலிருந்து தப்பினர். இந்த சம்பவம் கிளின்ட் ஈஸ்ட்வுட் நடித்த திரைப்படமாக வெளிவந்து ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ஸ்பூனைப் பயன்படுத்தி கான்கிரீட் சுவர் வழியாக சுரங்கம் தோண்டி மூவரும் இதைச் செய்தனர். பின்னர் 50க்கும் மேற்பட்ட திருடப்பட்ட ரெயின்கோட்டுகளால் தயாரிக்கப்பட்ட படகுடன் அவர்கள் தண்ணீரில் இறங்கினர். அவர்கள் மீண்டும் ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை.

டெக்சாஸ் செவன்
டிசம்பர் 13, 2000 அன்று டெக்சாஸ் செவன் ஜான் பி. கோனலி சிறையிலிருந்து 16 பேரை பணயக்கைதிகளாக பிடித்துக்கொண்டு தப்பினர். டெக்சாஸ் செவன் ஒரு விரிவான சதித்திட்டத்தை திட்டமிட்டு மேற்பார்வையாளர்கள், அதிகாரிகள் மற்றும் மூன்று கைதிகள் உட்பட 16 பேரை பணயக்கைதிகளாக பிடித்தனர். பின்னர் அவர்கள் கிரெடிட் கார்டுகள், அடையாள அட்டைகள், பொதுமக்களுக்கு ஏற்றவாறு உடைகளை எடுத்துக்கொண்டனர். காவலர்களை திசை திருப்ப மற்றும் சிறை காவலர்களை அழைக்க அவர்களில் 4 பேர் அங்கேயே இருந்தனர். மீதமுள்ளவர்கள் பாதுகாப்பு கோபுரத்தை கைப்பற்றினர், ஆயுதங்கள் மற்றும் ஒரு சிறை டிரக்கை திருடி ஒவ்வொருவரும் வாகனத்தில் தப்பினர்.

ஃ பிராங்க் அபக்னேல்
ஃபிராங்க் அபக்னேல் இரண்டு முறை தப்பினார், ஒருமுறை அவர் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்ட ஒரு விமானத்தில் இருந்தபோது மற்றொன்று, 1971 இல் அவர் ஒரு போலீஸ்காரர் என்று அனைவரையும் நம்ப வைத்து தப்பித்தார். கேட்ச் மீ இஃப் யூ கேன் என்ற படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோவால் ஃபிராங்க் உயிர்பெற்றார். அவர் 15 வயதிலேயே குற்ற வாழ்க்கையைத் தொடங்கினார். ஏப்ரல் 1971 இல், சிறைக் காவலர்களை அவர் ஒரு இரகசிய ஆய்வாளர் என்றும் சிறையில் ஆய்வு செய்ய கைதியாக வந்திருப்பதாகவும் கூறி நம்ப வைத்தார். அவரை FBI அதிகாரி என்று நம்ப வைக்கும் அசல் போன்ற போலி அடையாள அட்டையை வைத்திருந்தார். காவலர்கள் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளித்து வந்தனர், ஒரு நல்ல நாளில் அவர் சிறையிலிருந்து வெளியேறினார், எல்லோரும் அவரை அனுமதித்தனர்.

ஆண்ட்ரூ ரோட்ஜர், கீத் ரோஸ் மற்றும் மேத்யூ வில்லியம்ஸ்
சிறைச்சாலையின் உலோகக் கடையில் பணிபுரிந்த இந்த மூவரும், சிறைச்சாலையின் வெளிப்புறத்தை மனப்பாடம் செய்ய தங்கள் வேலை நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டனர், இறுதியில் அவர்களுக்கென ஒரு சாவியை உருவாக்கினர். அவர்கள் 25 அடி இரும்பு ஏணி மற்றும் துப்பாக்கியையும் தயாரித்தனர், அதை அவர்கள் சிறையில் இருந்து தப்பிக்க பயன்படுத்தினர்.

பாஸ்கல் பயேட்
இந்த பிரெஞ்சு குற்றவாளி மூன்று முறை ஹெலிகாப்டர் மூலம் சிறையிலிருந்து தப்பினார். 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட இவர் முதன்முறையாக தப்பிச் சென்றார், வெளியில் இருந்த அவரது நண்பர்கள் ஹெலிகாப்டரைக் கடத்தி சிறைக் கூரையில் இறக்கி, அவருக்காகக் காத்திருந்தார்கள். பின்னர் 2003 இல் அதே சிறைக்கு திரும்பிய அவர் மேலும் மூன்று கைதிகளை தப்பிக்க உதவினார். 2005 ஆம் ஆண்டில், அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார், ஆனால் 2 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது நண்பர்கள் அதே சாதனையை மீண்டும் செய்தனர்.

ஜோக்வின் குஸ்மான் லோரா
மெக்சிகோ போதைப்பொருள் மாஃபியா தலைவரான இவர் இரண்டுமுறை சிறையிலிருந்து தப்பினார். ஜோக்வின் குஸ்மான் லோரா தனது சிறைக்காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து, சலவை வண்டியில் ஏறி சிறையிலிருந்து தப்பினார். அவர் 2014 இல் மீண்டும் கைது செய்யப்பட்டார், ஆனால் 17 மாதங்களுக்குப் பிறகு, அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையின் அடியில் கட்டப்பட்ட மைல் நீளமான சுரங்கப்பாதையின் வழியாக அவர் தப்பினார், இது வெளிச்சம், காற்றோட்டம் மற்றும் மோட்டார் சைக்கிள் தடங்களைக் கொண்ட ஒரு சுரங்கப்பாதையாக இருந்தது.

சோய் கேப் போக்
சோய் 23 ஆண்டுகள் யோகா பயிற்சியாளராக இருந்தார், அவர் கைது செய்யப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு 5.9 x 17.7 அங்குலங்கள் மட்டுமே இருந்த உணவுப் வழங்கும் துளை வழியாக தப்பி சென்றார். அவருக்கு தப்பிக்க 34 வினாடிகள் மட்டுமே தேவைப்பட்டது. அவருக்கு கொரிய ஹூடினி என்ற புனைப்பெயர் வழங்கப்பட்டது.

ரொனால்ட் சில்வா
அவரது மனைவி வாராந்திர வருகைக்கு வரும்போதெல்லாம், சில்வாவிடம் தான் அணிந்திருந்த ஆடைகளைக் கொடுத்துவிட்டு, தன் கைப்பையில் வைத்திருந்த உதிரி உடையை மாற்றிக் கொள்வார். பின்னர் அவர் தனது கைகளையும் கால்களையும் ஷேவ் செய்து, போலி நகங்களைப் பூசி, ஒரு விக், உதட்டுச்சாயம், ஹைஹீல்ஸ் மற்றும் அந்த ஆடைகளில் ஒன்றை அணிந்தார். அவர் காவலர்களைக் கடந்து தெருவுக்குச் சென்றார். யாரும் அவரை கவனிக்கவில்லை.

டேவிட் ஸ்வெட் மற்றும் ரிச்சர்ட் மாட்
இருவரும் சிறைத் தையல்காரர் வழங்கிய ஹேக்ஸா பிளேடைப் பயன்படுத்தி ஒரு பெரிய குழாயில் செதுக்கி, நியூயார்க்கின் டேனெமோராவில் உள்ள ஒரு மேன்ஹோலில் இருந்து வெளியே வருவதற்கு முன்பு சுரங்கப்பாதைகளின் பிரமை போன்ற ஒன்றை உருவாக்க வேலை செய்தனர். சிறைத் தையல்காரர், உறைந்த ஹாம்பர்கர் இறைச்சிக்குள் மறைத்து, ஹேக்ஸா பிளேடை அவர்களுக்குக் கொடுத்தார். குற்றவாளிகள் காவலர்களிடம் 'Have a Nice Day' என்று எழுதப்பட்ட குறிப்பையும் விட்டுச் சென்றனர்.



Click it and Unblock the Notifications











